Friday, August 21, 2009

ஞாபக மறதிகள்..

எங்கோ என்
கவிதைகளை நான்
தொலைத்து விட்டேன்..
சிக்கலான மன உணர்வுகளை
தெளிவாய் வார்த்தைப்
படுத்திய அந்தக் கவிதைகள்
தொலைந்து விட்டன..

தேடுகிறேன்..
-விழிப்பில் காட்சிகளைத்
தொலைத்து விட்டுத் தேடுவது
போல..
-உறக்கத்தில் கனவுகளைத்
தொலைத்துவிட்டுத்
தேடுவது போல...

என் கைப்பட நான்
எழுதிய கவிதைகள்
என்னாலையே தேடப்படுகின்றன..

-உன்னத வார்த்தைகள் கோர்த்து
உருவேற்றிய அந்தக் கவிதைகளை
மறுபடி அலங்கரிப்பது
சாத்யமாக தோன்றவில்லை...
-ஆதலால் தொலைந்ததையே
தேடிப்பார்க்கிறேன்...!

எனது இழப்பு உணர்ச்சிகள்
யாவும் உம்மைக் காண்கிற
வரை மாத்திரமே...
நான் தொலைத்த கவிதைகள்
எல்லாமே உன் வசமிருந்தன..

இப்பொழுது தான்
ஞாபகம் வருகிறது எனக்கு..
காகிதம் கொண்டு
எழுதப்பட்டவை அல்ல
அந்தக் கவிதைகள்.,
--என் இதயம் கொண்டு
உன் சித்திரமாய்
சித்தரிக்கப்பட்டவை
அந்தக் கவிதைகள்... ...!!!


சுந்தரவடிவேலு
திருப்பூர்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...