Saturday, November 30, 2013

.எங்கிருந்தோ சுட்டது.. ஹிஹி ஜோக்... .

தமிழில் எப்படி சிலவற்றை நாசுக்காக சொல்லி ஹாஸ்யம் ஏற்படுத்த முடியுமோ அதே நய்யாண்டித் தனத்தை ஆங்கிலத்திலும் சொல்லி அசத்த முடியும் என்பதற்கு உதாரணம் பின்வருகிற ஓர் ஜோக் ...


Six Golden Rules


Six Golden Rules For F***ing

1. F***ing once a week is good for your health but harmful if done every day.

2. F***ing gives proper relaxation for your mind and body.

3. F***ing refreshes you.

4. After f***ing don't eat too much; go for more liquids.

5. When f***ing try to stay in bed because it can save you valuable energy.

6. F***ing can even reduce your cholesterol level..................

.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
SO REMEMBER - *FASTING* is good for your health - may The Almighty cleanse your Dirty Mind!
இது எப்டி இருக்கு??.. 

Wednesday, November 27, 2013

என்னாங்கறீங்க??

முன்னரெல்லாம் அடிக்கடி கண்களில் தென்படுகிற நபர், சமீப காலமாக முகாந்திரமே அற்றுப் போய் விடுகையில், சர்வ சாதாரணமாக எல்லாருக்கும் தோன்றுகிற விஷயம் "அன்னார் மறைந்து விட்டார் போலும்!"..

சில வாரங்கள் கழித்தோ அல்லது மாதங்கள் வருடங்கள் கழித்தோ கூட அதே நபர் மறுபடி கண்களில் பட நேர்கையில் .. "அடடே. நமது அனுமானம் தவறு" என்று புரிய வரும்.. அப்படி மறுபடி அவரை பார்க்க நேர்கையில் என்னவோ அந்த நபர் மறுபிறவி எடுத்து வந்தது போல நமக்குத் தோன்றும்.. [?].. 

இவ்வித நிகழ்வுகள் அநேகமாக எல்லாருக்குமே நேர்ந்த ஒன்றாக இருக்கலாம். 

ஆனால் இன்னும் சிலரையோ அன்றாடம் பார்க்க நேரும்... அவரைப் பார்த்து விஷ் பண்ணுவோம்.. அவரும் பதில் விஷ் செய்வார்.. அப்புறம் அடுத்த நாளே, அவருக்குக் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கும்.. 

அது மனசுக்கு ஓர் தாங்கொணா சங்கடத்தை அளிக்கும்.. 

--இந்தப் பிரபஞ்ச ஆயுளின் ஓர் புலப்படாத தூசி தான் நமது ஆயுள்.. என்ற போதிலும், வாழ்கிற கிஞ்சிற்று நாட்களிலேயே இந்தப் பிரபஞ்சம் அழியப் போகிறது  என்று புருடா விடத் துணிகிறோம்.. 

அப்புறம் அந்த வதந்தியை பிரபஞ்சம் உண்மையாக்கி விடுகிறது. அதைப் பார்க்க நாமில்லாமல் மறைந்து விடுகிறோம்.. 

Wednesday, November 20, 2013

கடி

பொழுது சாய்கையில் 
திரள்கிற கொசுக்களுக்கு 
அளவேது??
அதுவும் அந்தப் 
பூங்கா பச்சைக்கு 
பிரத்யேகமாக 
இம்சிக்கத் துவங்கும்.. 

தனியாக 
அமர்ந்திருப்பவர்களை 
நெளிய வைத்து 
நெளிய வைத்துக் 
கடித்தன.. 

தம்பதி சகிதமாக 
அமர்ந்திருந்தவர்களை 
ஓரளவு துன்புறுத்தின..            

காதலிகளுக்குக் 
காத்திருந்த ஆண்களையும் 
காதலர்களுக்குக் 
காத்திருந்த பெண்களையும் 
கடிக்காமல் கடித்தன.. 

காதல் ஜோடிகளை
சுத்தமாகக் கடிக்கவே
இல்லை கொசுக்கள்...

[பாரபட்சம் பாராது எல்லாரையும் ஒரே மாதிரி கடித்துத் தான் ரத்தம் உறிஞ்சின கொசுக்கள்... ஆனால், அந்தந்த சூழலில் அவர்கள் உணர்ந்த விதங்களைத் தான்  கவிதைப் படுத்த முனைந்துள்ளேன்.. ]

Tuesday, November 19, 2013

என்னாங்கறீங்க??

இந்த சச்சின், ar.ரஹ்மான் விஸ்வநாதன் ஆனந்த், இவிகளை எல்லாம் பாக்கறபோது, நாமெல்லாம் என்னடா பொறப்புன்னு ஒரு வெறுப்பு சும்மா குபீர்னு பீர் மாதிரி பொங்குது..
பிரம்மன் செஞ்ச மெகா நயவஞ்சகம் போல மனசுக்குத் தோன்றது சரியா தப்பா?
மனுஷனுக்கு மனுஷன் தான் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கறதா கேள்விப் பட்டிருக்கேன்.. ஆனா, இந்தப் பொறப்பு சமாச்சாரத்தை யோசிக்கிறப்ப சாமியே அந்தத் தப்பை செஞ்சிட்டுதோன்னு ஒரு உத்தரவாதமில்லாத சந்தேகம் எட்டி எட்டி ஒதைக்குது..

சரி உடுங்கோ.. நாமுளும் கழுதை அதே மாதிரி முயற்சி செஞ்சா சாதிக்கவா முடியாது., அவுங்கள மாதிரியே தானே ரெண்டு கண்ணு காலு கையோட பொறந்திருக்கோம்.. ன்னு எதையாவது கிறுக்குப் பயபுள்ள இருக்கற கொஞ்ச மானமும் காத்துல போற மாதிரி செஞ்சு நாசமாப் போறதுக்கு, நமக்கு வர்ற நாலு விஷயத்தை செஞ்சு காயற வயத்துக்குக் கஞ்சி  ஊத்திக்கிறது உத்தமமடா ராசா..   என்னாங்கறீங்க??

  

Tuesday, November 5, 2013

புருஷன் பொண்டாட்டி ஜோக்... எங்கிருந்தோ சுட்டது..

Wife and Husband Joke
Husband: Can I hug you?

wife: No!

Husband: I will buy you jewelry! ...

wife: No!

Husband: I will buy you a car!

Wife: Still NO.

Husband: I will take you to world trip.

wife: Still NO.

After listening all this, their kid woke up and said, "Daddy! u can kiss me, but just buy me a bicycle please"



After A Fight...



Wife to Husband: I was Mad, Fool and Rubbish that I married you



Husband Said: Yes dear but I was in love, I didn't notice

உயிர் பெறும் மழைத்துளிகள்.....

உன்னைக் காதலிக்க முயன்ற ஓர் மழை நாளில்...

உன்னை நனைக்கிற
மழையின் புன்னகையும்
என்னை நனைக்கிற
மழையின் அழுகையும்
-பரஸ்பரம்
ஆனந்தங்களையும்
ஆதங்கங்களையும்
மௌனமாகப் பரிமாறிக்
கொள்வதை...
எனது இதயம்
மாத்திரமே உணரக் கூடும்?..!

சபிக்கப் பட்ட துளிகளாக
என் மீது விழுந்து
தெறிக்கிறது மழை..

உன் மீதான துளிகளோ
தெறித்து விடப் பிடிக்காமல்
உன்னில் ஊடுருவப்
பிரயத்தனிக்கிறது ....!!

சாக்கடையில் விழுந்திருந்தால்
கூட அப்படி முகம் சுளித்திருக்குமோ
தெரியாது....
என்னை நனைத்து
கடுந்துயர் கண்டது மழை...

உனது அருகாமையில்
விழுந்து உன்னை
ஸ்பரிசிப்பதைத் தவற விட்ட
ஏமாற்றத்தோடு
சாலையில் தவழ்கிற துளிகள்..

உன் தலையில் விழுந்து
கர்வப் பட்ட இறுமாப்புத் துளிகள்..

உன் கழுத்தில் விழுந்து
மார்பினுள் புகுந்து கொண்ட
இங்கிதமற்ற துளிகள்....!!

-மற்றுமொரு மழை நாளில்..

நானும் நீயும்
ஒரே குடைக்குள்ளிருந்தோம் ...!

துளிகள்
நம் கால்களைப் பற்றிக்
கொண்டு கதறின...!!
.Square Abstract Couple With Umbrella Oil Paint Effect canvas wall printed on to a canvas which would be a great edition to any home.    Size : (W30cm X H30cm) X 1

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...