Showing posts with label கருத்து ??ஹிஹி .... Show all posts
Showing posts with label கருத்து ??ஹிஹி .... Show all posts

Wednesday, November 27, 2013

என்னாங்கறீங்க??

முன்னரெல்லாம் அடிக்கடி கண்களில் தென்படுகிற நபர், சமீப காலமாக முகாந்திரமே அற்றுப் போய் விடுகையில், சர்வ சாதாரணமாக எல்லாருக்கும் தோன்றுகிற விஷயம் "அன்னார் மறைந்து விட்டார் போலும்!"..

சில வாரங்கள் கழித்தோ அல்லது மாதங்கள் வருடங்கள் கழித்தோ கூட அதே நபர் மறுபடி கண்களில் பட நேர்கையில் .. "அடடே. நமது அனுமானம் தவறு" என்று புரிய வரும்.. அப்படி மறுபடி அவரை பார்க்க நேர்கையில் என்னவோ அந்த நபர் மறுபிறவி எடுத்து வந்தது போல நமக்குத் தோன்றும்.. [?].. 

இவ்வித நிகழ்வுகள் அநேகமாக எல்லாருக்குமே நேர்ந்த ஒன்றாக இருக்கலாம். 

ஆனால் இன்னும் சிலரையோ அன்றாடம் பார்க்க நேரும்... அவரைப் பார்த்து விஷ் பண்ணுவோம்.. அவரும் பதில் விஷ் செய்வார்.. அப்புறம் அடுத்த நாளே, அவருக்குக் "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கும்.. 

அது மனசுக்கு ஓர் தாங்கொணா சங்கடத்தை அளிக்கும்.. 

--இந்தப் பிரபஞ்ச ஆயுளின் ஓர் புலப்படாத தூசி தான் நமது ஆயுள்.. என்ற போதிலும், வாழ்கிற கிஞ்சிற்று நாட்களிலேயே இந்தப் பிரபஞ்சம் அழியப் போகிறது  என்று புருடா விடத் துணிகிறோம்.. 

அப்புறம் அந்த வதந்தியை பிரபஞ்சம் உண்மையாக்கி விடுகிறது. அதைப் பார்க்க நாமில்லாமல் மறைந்து விடுகிறோம்.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...