எனக்கு இர

உன்னைப் பார்க்க
நேர்கையில் எல்லாம்
என் கவிதை ஈக்கள்
மொய்க்கத் .துவங்குகின்றன..
தேன் கொண்ட பூ நீ
என்கிற அறிவு
என் கவிதைகளுக்கு
எப்போதும்...
விரட்டுவது போன்ற
பாவனையோடு
மயங்கி விழுகிறது
என்னில் உனது முகம்...
நீ விரட்டியடித்தாலும்
உன்னில் சரணாகதி
அடைவதை மட்டுமே
நோக்கமாக நான்
.வைத்துள்ளேன்...
அப்படியிருக்க
என்னில் நீ மயங்கி
விழுகையிலோ
உன்னை உள்வாங்குவதில்
என்ன சிரமம்
இருக்கப் போகிறது???