Showing posts with label குழந்தைகள் சலிப்பதே இல்லை.... Show all posts
Showing posts with label குழந்தைகள் சலிப்பதே இல்லை.... Show all posts

Monday, November 1, 2010

அம்மா கட்சி...

குழந்தையின் அழுகைஇம்சை என்கிற என் கூற்றை
மனிதாபிமானமற்றது                        
என்கிறாள் என் மனைவி...
-அயர்ந்து நான்
உறங்குகிற போதோ
தொலைபேசியில்
எவருடனாவது தீவிர
விவாதத்தில் இருக்கிற போதோ
அவள் கதறுகிற நிகழ்வு
அன்றாடம் என்கிற
பழக்கத்துக்கு வந்தாகி விட்ட
போதிலும், அந்த
ஷனத்தின் கோபத்தை
கட்டுப்படுத்தத் தவறி
ரகளை செய்கிற
மகளை பொய்யாக
ஓர் மிரட்டு மிரட்டுகையில்
உதடு பிதுங்கியவாறு
அடங்கிப்போகிறாள் என்றாலும்
மனைவி என்னை
ஹிட்லராக சித்தரித்து
எனக்குள் குற்ற உணர்வை
விதைத்து விடுகிறாள்...

-பிற்பாடான சாவகாச
தருணங்களில்
அப்பா அப்பா என்று
என்னுடன் தான்
சிரித்துக் கொஞ்சி
விளையாடுகிறாள்...எனிலும்
நான் மிரட்டுகையில் எல்லாம்
அவள் அம்மா கட்சி...!!

சுந்தரவடிவேலு...

Friday, October 23, 2009

என் கண்மணி...

நீ உன்
அழுகையை நிறுத்தினாலும்
நானென்
தாலாட்டை நிறுத்தமாட்டேன்..

உன்
பஞ்சுக்கன்னங்களில்
என் நாசியை
அழுத்தி-
உன் புன்னகைச்சூட்டின்
அருகாமையில்
குளிர் காய்வது
அலுக்காத சந்தோஷம்..

எட்டி எட்டி நீ
என்னை உதைத்தாலும்
உன் கால்களை
கட்டிக்கொண்டு
முத்தமிடுவதை
வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன்..

எனக்கு நீ
அருள் பாலிக்கவில்லை
என்றாலுமே கூட-
உன்னை பிரார்த்திப்பதை
மட்டும் என்னால் தவிர்க்கவே
முடியாது...!!


சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...