Showing posts with label வலிகளுடன் அன்றைய ஒரு கவிதை... Show all posts
Showing posts with label வலிகளுடன் அன்றைய ஒரு கவிதை... Show all posts

Sunday, December 7, 2014

உள்காயங்கள்..

சில வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு சிறு கவிதை.. என்னுடைய கவிதையின் கரு சிலருக்குப் புரியாமலும், சிலருக்குப் புரிந்தும் புரியாமலும் , நன்கு  புரிந்த சிலருக்கு எரிச்சலும்... ]

.. 
எனக்குள்ளான கவிஞனை 
பெண் ஒருத்தியே 
எப்போதும் தட்டி எழுப்புகிறாள்.. !

பூப் பெய்து விடும் முன்னரே 
மூப்படைந்தது போன்ற 
என் அவசர கவிதைகள் 
குறித்து எப்போதும் 
கவலை எனக்கு..!!
ஸ்ருங்காரமும் ஒய்யாரமும் 
ஒருங்கிழைய நான் புனைய 
முனைந்த  போதிலும் 
அரிதாரம் உதிர்ந்துபோன 
சுருங்கிய முகத்துடனும் 
ஊன்றுகோலுடனுமே 
தட்டுத் தடுமாறுகிறது 
என் கவிதை.. !!

ஆன்மாவின் விலாசமாக 
அமையக் கூடுமென்று 
நான் அனுமானித்திருந்த 
எனது கவிதை, 
எலும்புக் கூடாக 
பயமுறுத்துகிறது மனதை..!

சாமானியர்கள் புரிபடாமலும் 
புரிந்தவர்கள் எரிச்சலுற்றும் 
தடம்புரண்டும், புரையோடியும் 
படுகாயமாகிக் கிடக்கின்றன 
கவிதைகள்.. 
அப்படியாக மூர்ச்சையாகிக் 
கிடக்கிற எனக்குள்ளான 
கவிஞனை ஏன் தான் 
அவ்வப்போது இந்த 
அழகிய பெண்கள் தட்டித் 
தட்டி எழுப்பி எனக்குள் 
ஒரு ஸ்மரணையையும் 
தாங்கொணா வலிகளையும் 
கொணர்ந்து இம்சிக்கிறார்களோ 
புரியவில்லை...!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...