Showing posts with label நய்யாண்டிக் கவிதை?. Show all posts
Showing posts with label நய்யாண்டிக் கவிதை?. Show all posts

Monday, December 5, 2011

ஆன்மாவின் அவஸ்தைகள்..



உடல் சாம்பலாவதற்கான
காத்திருப்பில் கிடக்கிறது
ஆன்மா..
வானில் சுதந்திரமாக
திரிந்து பழகிய ஆன்மாவிற்கு
இந்த உடலும், அது
உலவும் பூமியும்
தாங்கொணா சலிப்பையே
தந்த வண்ணமாயுள்ளது..!

நூறாண்டுகள் என்கிற
மனித ஆயுளின்
அறிவியல் நிர்ணயம்
பெருஞ்சிறையாயுள்ளது
ஆன்மாவிற்கு..
இடைப்பட்ட ஆயுட்காலங்களில்
நோயென்றும் விபத்தென்றும்
எவ்வளவோ விஷயங்களை
மரணத்திற்கு அறிமுகப்
படுத்தப் பிரயத்தனிக்கிறது
ஆன்மா..!!

உடலை அதன் வியாதிகளை
குணப்படுத்துகிற மருந்துகள்
மீது ஆன்மாவிற்கு கோபம்..
"சிவபூசையில் கரடி"
என்று புலம்புகிறது தனக்குள்..

அகாலத்தில் மரணத்தை
அறிமுகப் படுத்திய
எவ்வளவோ 
வாலிப ஆன்மாக்கள்
வானில் சுதந்திரமாக
வலம் வர....
"கொள்ளுப் பேத்தி
கல்யாணத்தை கண்ணுல
பார்த்துட்டுப் போயிட்டா
என் ஆத்மா சாந்தியடையும்"
என்கிற
தொண்டுக் கிழங்களை
எரிச்சலோடு
தரிசிக்கின்றன --
இன்னும் பல
மேலெழும்ப அவஸ்தைப்
படுகிற பூமியின்
கிழ ஆன்மாக்கள்..!!










நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...