நான் உன் சூரியன்..
உன் மலை மார்புகளுக்குள்
புதையுண்டு
அஸ்தமிக்க விரும்புகிறேன்
அன்றாடம்...
அக்கினிக்குஞ்சாய்
என்னைப்பராமறிக்கிறாய்..!
-உன் மார்புச்சூட்டில்
இந்த சூரியன் குளிர்காய்கிறது..!!
உன் காதல் ஒத்தடத்தில்
ஏன் ஏக்க வீக்கம் இளைக்கிறது..,
ஆனால் காமம் பருத்து விட்டது...
காமம் இளைப்பதற்கான
எந்த ஒத்தடங்களையும்
மறுக்க விரும்புகிறேன்..!
உன்னில் புதையுண்ட பிற்பாடு
மறுபடி மீள்வதற்கான
எந்த ஆயத்தங்களையும்
மேற்கொள்ளப்பிடிக்கவில்லை..!
உன்னில் அஸ்தமித்த பிற்பாடு
மறுபடி வெளியேறி
உதிக்கிற உத்தேசமே
அற்றுப்போய் விட்டது..!!
உன்னுள் உள்ளொளி பாய்ச்சி
எல்லா சுடர்களையும்
உன்னிடமிருந்தே உலகம்
கடன் பெறட்டும்..!!
சூரியனைக் கபளீகரித்து
விட்டதாக உன்னை சொல்வார்கள்,
சொல்லி விட்டுப்போகட்டும்..!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts
Thursday, June 17, 2010
Subscribe to:
Posts (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...