Showing posts with label புலி வேட்டை. Show all posts
Showing posts with label புலி வேட்டை. Show all posts

Tuesday, February 9, 2010

புலிகளுக்கு நேரம் சரியில்லை...

புலிகள் நம் நாட்டில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும் .. அற்ப எண்ணிக்கையில் மாத்திரமே இப்போது இருக்கிறதென்றும் சொல்கிறார்கள்...
காணவில்லை விளம்பரம் மாதிரி அடிக்கடி ஒரு குட்டிப்புலி தன் தாயை தேடி ஓடி வருவது போலவும் தாயைக்காணாமல் வேதனையாக முனகுவது போலவும் ஓர் விளம்பரம் போடுகிறார்கள்.. அதன் தாய் புலி திரும்பி வருமோ அல்லது மனித வேட்டைக்கு இரையாகி இருக்குமோ என்று ஓர் சோக சந்தேகமாய் பின்னணியில் குரல் ஒன்று ஒலிக்கிறது...
டிஸ்கவரி சானலில் மானை புலி ஆடுகிற வேட்டைகளை காண்பிக்கிற போதெல்லாம் அது துரத்துகிற மான் தப்பித்தால் தேவலாம் போலவே தோன்றும் ... ஆனால் எப்படியும் அது மானை சாதுர்யமாக பிடித்தே தீரும்... பிறகு மானின் மீதான அக்கறை குறைந்து .. புலி அந்த மானை சாப்பிடுகிற நேர்த்தியை ரசிக்க ஆரம்பிக்கும் மனிதர்கள்...
ஆயுதங்கள் ஏதுமற்று மானிடமே தோற்றுப்போகிற மானிடர்கள் நாம்...
எந்த ஆயுதங்களும் அற்று மானை வீழ்த்துகிற புலிகளையே வீழ்த்தி விடுகிறோம்..

பொதுவாகவே புலிகளுக்கு இப்போது நேரம் சரியில்லை என்றே தோன்றுகிறது...

தொலைக்காட்சியில் இந்த விளம்பரம் தான் விவஸ்தை இல்லாதது போல படுகிறது...
சாதரணமாக டிவி பார்க்கிறவர்கள் அநேகமாக நாய் வளர்ப்பார்கள், பூனை ஆடு கோழி மாடு வளர்ப்பார்கள்.. மீன்கள் கூட கலர் கலராக வளர்ப்பார்கள்...
புலியை வேட்டையாடுகிற காட்டுமிராண்டிகள் டிவி பார்க்க மாட்டார்கள்.. டிவி பார்க்கிற நாம் அவர்களைப்பார்த்து புலியை கொல்லாதீர்கள் என்று சொல்லவா முடியும், முதலில் அவர்களை பார்க்கவாவது முடியுமா? பார்த்து சொன்னாலும் தான் புரியுமா அவர்களுக்கு? புரிந்தாலும் தான் கேட்பார்களா?

தமாசுக்கு அளவே இல்லை....

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...