Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Wednesday, July 3, 2013

கேதார்நாத்.. உத்தரகாண்ட் ..

யற்கையின் சீற்றங்கள் நம் இதயங்களைப் பிளந்து போட்டன..
அங்கே நாம் இருந்திருக்க விதி வாய்த்திருந்தால் ??.. குறைந்த பட்சம் நமது உற்றார் உறவினர் சிக்கி இருந்திருந்தால்?..

அவ்வித வலிகளினின்று விலகி, அந்தக் காயங்களை அன்றாடம் செவிவழி செய்திகளாகக் கேட்டு மருகி உருகி வருகிறோம்...
அவ்விதக் காயங்களினின்று விலகி, அந்த வலிகளை அன்றாடம் அறிந்து பதறிப் போகிறோம்...

அந்தக் கொடூரத் துயர்களிநின்று விடுதலை பெற உதவுகிற ஓர் ஹெலிக்காப்டரும் அதன் உதவுகிற குழுவும் விபத்தில் சிக்கி சின்னாபின்னமான செய்தி தாங்கொணா வேதனை அளித்தது..

தன் உறவினர் தப்பித்துத் திரும்புகிற குழுவில் உள்ளாரா அல்லது பிணக்குவியலில் கிடக்கிறாரா என்கிற ஓர் மகா குழப்பத்தில் தள்ளிவிட்டிருக்கிற இந்தக் கோர விதி குறித்து எவ்வளவு எழுதினாலும் எதுவும் எவர்க்கும் பிடிபடாதென்றே தோன்றுகிறது..

மனித மரணம் இத்தனை பெரிய அவலத்திற்கு ஆளான சேதி .. கேள்விப்படவே சுக்குநூறாக சிதிலப் படுகிறது நம் இதயங்கள்..

ஓடிப்போய் உதவ நாமெல்லாம் துடிக்கிறோம்...ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் நின்றுகொண்டு..!!

பசிக்காத குழந்தைக்கு நிலா காட்டி வாயில் திணித்து அதன் சின்ன வயிற்றை நிரப்புகிற முஸ்தீபில் நாமிருக்கிறோம்.. அங்கே பசியில் கதறுகிற பிஞ்சுக்கு அதன் தாய் முலைகளில் பால் வற்றிக் கிடப்பதை அனுமானிக்கிற திராணி நமக்கெல்லாம் இருந்தும் தான் என்ன பயன்??

புனித யாத்திரை, பாப யாத்திரையாக மாறி இருந்திருக்குமேயானால் கூட தேவலாம்.. அது மரண யாத்திரையாக மருவி இருப்பதைத் தான் தாங்க முடியவில்லை..

இன்னும் சில வருடங்களில் இந்தப் பிராந்தியம் யாவும் செவ்வனே புணரமைக்கப்  பெற்று ....

மக்களின் நெரிசல் குறைந்து விடுமென்றா நினைக்கிறீர்கள்?..ம்ஹ்ம் .. அதான் கிடையாது.


ஆயிரக்கணக்கான பைனான்சுகளும் சிட் பண்டுகளும் மக்களை ஏமாற்றி விட்டன.. ஏமாந்த கதைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்லக் கேட்கிறோம். ஆனால், அதெல்லாம் ஓய்ந்திருக்கிறதா?.. இன்னும் காளான்கள் போல முளைத்துக் கொண்டே தான்  உள்ளன..

மெக்கா மதீனாவில் நெரிசலில் சிக்கி பற்பலர் இறக்கின்றனர்.. நமது சபரி ஐயப்பன் கோவிலில் நெரிசலில் மிதிபட்டு அன்று பலரும் இறந்ததை அறிவோம்.. ஆனால் எங்கேயும் கூட்டம் மாத்திரம் குறைந்த பாடே இல்லை.. அதே கதை தான், இந்த கேதார்நாத்துக்கும்..

சிவன் தனது வீட்டிலியே குடி இருந்தாலும் கூட ஒரு மனிதன் திருப்தி அடையமாட்டான் போலும்... இப்படி இமயம் வருவதைத் தான் பெருமையாகவும் தேவை போலவும்  கருதி செயல்பட விழைகிறான்.. ஆனால், இப்போது நடந்துள்ள இந்த விபரீதத்தைப் பார்த்தும் கூட தனது கொள்கைகளை எதிர்காலத்தில்  மாற்றிக் கொள்ளத் தவறுவானேயானால், யாரும் எதுவும் மேற்கொண்டு சொல்வதற்கோ செய்வதற்கோ இல்லை..

எனக்கொரு பகுத்தறிவில்லாத கற்பனை  --இந்த சம்பவத்திற்குப் பிற்பாடு வந்துவந்து  போகிறது.. அதாவது நமது புராண இதிகாச வரலாற்றுப் பதிவுகளில்.. சிவன் என்கிற கடவுள் அழிப்பவன் என்கிற செயலை செய்வதாக நாமெல்லாம் கேள்விப்பட்டும் படித்தும் அறிந்திருக்கிறோம்.. இதைப் பார்க்கிற போது .. அம்மாதிரி வரலாற்றுப் பதிவுகள் பொய் இல்லை என்றே நாஸ்த்திக மனது கூட நம்பிவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது... !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...