
உன் விரல்
நகக் கீறல்கள்
என் ஸ்மரணையை
அதீதமாக்கும்....
உன் நினைவுச்
சுழல்கள்
என் பிரக்ஞையை
அதீதமாக்கும்...
உன் இருப்புக்கான
சுவடுகளை
மணலில் அல்ல...
அண்டத்திலேயே
அடையாளம்
காண்கிற திறன்....
எனது
கண்களுக்குண்டு..!!
சுந்தரவடிவேலு
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்

உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...