Showing posts with label PUDHU KAVIDHAI... Show all posts
Showing posts with label PUDHU KAVIDHAI... Show all posts

Friday, June 19, 2015

நாயின் முதலாளி..

அந்த வீதி கடக்கிற 
ஒரு அலுவலக 
முதலாளியைக் கண்டு 
குலைக்கிற அந்தத்
தெரு நாய்.. 
அதே அலுவலகப் 
பியூனைக் கண்டு 
வாஞ்சையோடு 
வாலாட்டிப் பார்க்கிறது...!

முதலாளிக்கு 
அந்த நாய் மீது 
'செமக் கடுப்பு'..
பியூனுக்கோ 
அந்த நாயின் மரியாதை 
'செம கெத்து'.. 

நாய் மதிக்காத 
முதலாளியை 
அலுவலில் 'நாம்'
மதித்தாக வேண்டிய 
சூழல் பியூனுக்கொரு 
வினோத எரிச்சல்.. 

நம்மை மதிக்காத நாய் 
இந்தப் பணியாளிடம் 
ஆட்டுக்கற  வாலினைத் 
தரித்து விட வெறி 
மூள்கிறது முதலாளியிடம்.. 

நாயைப் பொருத்தமட்டில் 
வருக்கி போடுகிறவனே  
முதலாளி. 
மிரட்டிக் கல்லெறிபவன் 
பிச்சைக்காரன்.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...