Showing posts with label சிறு அபிப்பிராயம்.... Show all posts
Showing posts with label சிறு அபிப்பிராயம்.... Show all posts

Saturday, October 22, 2011

நிரந்தரம் என்கிற தற்காலிகம்..

உடலுக்கு நோயென்று ஏதேனும் வருகையில்....
"பற்றற்ற தன்மை" மீதாக ஓர் தனித்துவமான பற்று
வந்து விடுகிறது நமக்கு... இது சற்று வினோதமே..!!

ஆரோக்யமான தருவாய்களில் அல்லாத ஓர் வெறுமையுணர்வு..
பீதி கலவையான ஓர் ஆழ்ந்த அமைதி... நோயில்..!
வாழ்வின் அடர்த்தி நைந்து..,
அறுபடக் காத்திருக்கிற உத்தரவாதமில்லாத
வீணைத்தந்தியின் சாயலில்...

தற்காலிகமான ஆரோக்யமே கூட
நிரந்தரமென்பதான ஓர் மாயத் தோற்றத்தை
நம் எல்லோரின் வசமும் ஏற்படுத்தி விடுகிறது..!!

நிரந்தரமாகி விடுகிற சில நோய்களுமே கூட
தற்காலிகமானது என்பது போல, 
மிகத் துரிதமாக குணமாகி விடுகிற பாவனையிலேயே
மரணம் வரையிலுமாக சமாளித்து வந்து விடுகிறது நம்முடன்..!!!

பணம் சம்பாதிக்கிற ... பொருளீட்டுகிற..
நமது வினய வியாக்யானங்களும் ...
சம்பாதிக்கவே  தடுமாறுகிற நமது பலவீனங்களும்--
மரணத்தின் முன்னிலையில் 
எவ்விதத் தகுதியுமற்றவைகளாகி விடுகின்றன...!!


Wednesday, September 16, 2009

மனித இயல்புகள்...?

தேடல்களும்

தோல்விகளும்

எந்நேரமும் உடனிருப்பவை..

ஓர் இழையில் தேடுவதே

சலிப்பாகி, தேடுவதை

நிறுத்தி விடுகையில்...

கிடைக்கும் தேடியது..!

அவ்வாறே தோல்விகளும்...

--வெற்றிக்கான ஒவ்வொரு

பிரயத்தனத்தின் போதிலும்

போட்டி போட்டுக்கொண்டு வந்து

வெற்றியைப் பின்னுக்குத் தள்ளி

விட்டு ஜெயித்து விடுகின்றன

தோல்விகள்.....

பிற்பாடு, பின்னொரு நாளில்

சாவகாசமாக வருகிறது வெற்றி..!

தாமதமாகவே வந்தாலும் கூட

தேடியது கிடைக்கையிலும்,

தோற்றது வெற்றி அடைகையிலும்

ஓர் புது மெருகுடன் தான்

சந்தோஷம் மனசைக் கவ்விக்கொள்கிறது..,

தேடல்களும் தோல்விகளும் நம்முடன்

அத்யந்தமாகி நெடுங்காலம் வீற்றிருந்து

வந்தாலும் ஏதோ அன்னியமாகியது போல

உடனே அவைகளைப் புறந்தள்ள

ஆசையும் அவசரமும் படுகிறோம்...!!

சுந்தரவடிவேலு,திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...