Showing posts with label NATURAL CALAMITIES.... Show all posts
Showing posts with label NATURAL CALAMITIES.... Show all posts

Tuesday, April 28, 2015

நேபாளம்..

நேபாளம் ... .

இயற்கையின் கோரத் தாண்டவம்.. கோடித் தீவிரவாதிகளின் கொலைவெறிக் கொண்டாட்டம்.. 
ஆம்லெட்டில் வெங்காயம் போதவில்லை என்று சில நாட்கள் முன்னர் ரகளை செய்த ஞாபகம்.. 
மட்டன் பிரியாணி சூப்பர் என்று தயிர் வெங்காயம் கலந்து மூக்கு முட்ட வெட்டிய ஞாபகம்.. 
இந்த நேபாள சோக செய்தி கேட்டு இந்த ஞாயிறு வெஜ் கூட சாப்பிடப் பிடிக்கவில்லை.. வெறுமே வயிற்றைக் காயப் போட்டு அந்தக் கூச்சல் களேபர சூழலை மனசு அரைத்துக் கொண்டு கிடந்தது.. 

ஒரு சாவுக்கே 3ஆம் நாள் கருப்பு.. பிறகு 16.. இவை போக "அடைப்பு" 6 மாதங்கள் இருப்பதாக கோவில் குளம் தவிர்ப்பது.. என்கிற சங்கதிகள் நமது வாழ்வில் ... 
ஆனால் நேபாளத்தின் இந்தத் துயரை எங்கனம் ஒப்பீடு செய்வது?.. 
செய்த முதலீடு தொலைந்து போய் தொழிலில் தோற்றவர்களுக்கும், கடன் தொந்தரவில் குடும்பமாக தற்கொலை செய்கிற யோசனையில் இருந்தவர்களுக்கும் .. நோயில் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த பூகம்பம் குயிலோசையாக ஒலித்திருக்கலாம்.. 
வசந்தங்களைத் துவக்கியிருக்கிற சிறார்களும், ஒய்யார வசதியில் அன்றாடம்  வலம் வருகிற பெரிய மனிதர்களும்.. பல தலைமுறைக்கு என்று சொத்து சேர்த்து வைத்தவர்களும் நடுரோட்டில்.. சொத்து உறவுகள் குழந்தைகள், மனைவிகள் கணவர்கள் என்று அனைத்தையும் சில நிமிடங்களில் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வேண்டிய தருணம்.. 

பசியில் வீறிடும் குழந்தைகள்.. கடும் பனி, குளிர், காற்று, மழை, மறுபடி அதிர்வுகள், பனிப்பாறைகள் உருண்டோடி வருகின்றன.. 
இத்தனை அவஸ்தைகளில் .. நம்முடைய உறவினர்களும் நண்பர்களும் உயிரோடு இருக்கிறார்களா அல்லது ஆபத்தான நிலையில் ஆசுப்பத்திரிகளில் கிடக்கிறார்களா? என்கிற கவலை.. 

எல்லாரது முகங்களிலும் மரணபயம்.. 
இதையெல்லாம் தாண்டி, மற்றொன்றை யோசித்தாக வேண்டும்.. இந்த சீற்றம்  எந்த ஆய்வறிக்கைகளிலும் எதிர்பாராததா ?.. இவ்வளவு கடுமையான அதிர்வுகள் நிகழக் கூடிய  வாய்ப்புக்கள் இருந்தும் எதற்காக இத்தனை அடுக்கடுக்கான வீடுகள்?.. வர்த்தக நிறுவனங்கள்?.. தங்கும் விடுதிகள்?  

80 ஆண்டு காலங்கள் எவ்விதப் பேரிடர்களையும் சந்தித்திராத துணிவே மேற்கொண்டும்  எதனை செய்வதற்கும் தயங்காத ஒரு தன்மை அங்கே நிகழ்ந்திருக்கிறது.. அங்கே மட்டுமன்று .. நாமிருக்கிற பிராந்தியங்களிலும் இதே விதமான கதி தான்.. 

நம்முடைய எச்சரிக்கை உணர்வுகளும், நம்முடைய அதிதீவிர ஜாக்கிரதைகளும் வியாக்யானங்களும் "இயற்கை" யின் முன்னர் "செயற்கை" தான்.. 

நமக்கொரு இயற்கை சீற்றம் நிகழ்வதற்குள்ளாக, அதன் நிமித்தம் பாதிக்கப் பட்ட மற்ற மனிதர்களுக்காக சற்று அவகாசம் ஒதுக்கி பிரார்த்திக்க முயல்வோம்.. 
அதற்குள்ளாக KFC யும் காஞ்சனா 2 ம் எங்கேயும் ஓடிவிடாது..                                                                                                                                                                                                                                                                                                                                         

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...