Showing posts with label all about C R I C K E T................ Show all posts
Showing posts with label all about C R I C K E T................ Show all posts

Thursday, March 26, 2015

இந்தியக் கிரிக்கெட்

"ரௌத்திரம் பழகு!".. இந்த சூத்திரத்தை நமது இந்தியக் கிரிக்கெட் அணியிடம் சொல்லி ஊக்குவித்தாக வேண்டும்.. 
ஆஸ்திரேலியா மாதிரியான வெறி பிடித்த ஒரு வேகம் நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது.. நமது வேகம், விவேகம் கொண்டுள்ளது.. அது போதாது இந்த மட்டைப் பந்தாட்டத்துக்கு.. 
அதனோடு ஒருவித அக்ரெஸீவ் நெஸ் அப்ளை செய்தாக வேண்டியுள்ளது.. அதர்வைஸ் எப்போதுமே இந்த செமி ஃபைனல் வந்து திரும்புவதோடு இந்தியாவின் கிரிக்கெட் முடிந்துவிடும்.. 
Image result for cricket
கால்பரீட்சை அரைப் பரீட்சை நடக்கிற போது 1200 க்கு 1190 கூட எடுத்து சுலபத்தில் ஆஸி யை வீழ்த்தி விடுகிற நாம், முழுப் பரீட்சை [அதாவது பிளஸ் 2 மாதிரி என்று வைத்துக் கொள்வோமே] வருகிற போது , 890 , 900 போன்று எடுத்து மானத்தை வாங்கிவிடுகிறோம்.. !!

அவர்களோ ஏனுயல் எக்ஸாமுக்குத்தான் நிறைய ஹோம் வொர்க் செய்கிறார்கள்.. நாம், ஜஸ்ட் முன்னர் நடந்த சாதா டெஸ்ட் மாட்ச்சில் விளாசி அவர்களைத் தோற்கடித்து விட்டாலே போதும்.. பெரிய ஜாம்பாவான்கள் போன்று பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனெர்ஜி என்று பிதற்றிக் கொண்டு விளம்பரத்தில் நடிக்கிறோம்.. மிடில் க்ளாசை ஈஸியாக ஏமாற்றி பூஸ்ட் வாங்க வைக்கிறோம்.. 

இன்னும் சொல்லப் போனால், டெஸ்ட் மாட்சுகளில் வேண்டுமென்றே கூட அவர்கள் தோற்பார்கள்  என்றே அனுமானிக்கிறேன்.. .. 
நாம் அதைக் கண்டு நம்மை பலசாலிகள் போன்று கருதி பவனி வரத் துணிகிறோம்.. 

ஒரு டெண்டுல்கரும் ஒரு கபிலும், ஒரு காவஸ்கரும், ஒரு தோனியும் மட்டுமே எப்போதும்  இந்திய அணியில் இடம் பெற்று வந்திருக்கிறார்கள்.. இந்தியா  இன்னும் ஒரு  அடி முன்வைக்க இது போதாது.. 11 பேர்களில், குறைந்தபட்சம்  4 தோனிகள் தேவைப் படுகிறார்கள்..
 Image result for cricket

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...