Showing posts with label கவிதை ?. Show all posts
Showing posts with label கவிதை ?. Show all posts

Friday, June 17, 2011

ஒட்டு மீசை முறுக்கப்படுகிறது...

எந்த நண்பனையும்
முழுமையாக திருப்தி
கொள்ள முடியவில்லை...
-என் நண்பர்களுக்கு 
நானும்  இதே போல தான்
அதிருப்தியானவனாகவே
புரிபடுவேன்...?

-ஒருக்கால் 
என் போல மற்ற என்
நண்பர்கள் இப்படி
ஏடாகூடமாகவெல்லாம்
அனுமானிக்க மாட்டார்கள்
என்றே தோன்றுகிறது...

எது எவ்வாறாயினும்
என் அனுமானங்களை
கொட்டியாக வேண்டிய
நிர்ப்பந்தம் எனக்கு...!
-இவ்விதம் ஓர் சிந்தனை
வந்தான பிற்பாடு
இதனை ஓரங்கட்டிவிட்டு
மாற்று சிந்தனைகளை
கவிதையாக்கினேனே  யானால்
இந்த சிந்தனை
அனாமதேயமாக என்னுள்
அரற்றிக்கொண்டே கிடக்கும்...

தவறோ சரியோ 
சிந்தித்தவற்றை 
எழுதித்தீர்க்கவில்லை என்றால்
குப்பை தொட்டி போல
நாறத்துவங்கி விடும் மனசு...

என் ரசனைகள் புரியாமல்
தடுமாறுகிற நண்பர்கள்,
புரிந்து பாராட்டுகிற நண்பர்கள்
புரிந்தும் பாராட்ட மனமற்ற நண்பர்கள்
புரியாமலே கூட பாராட்டி விடுகிற நண்பர்கள்...

இவ்வளவு வகையறா
நண்பர்கள் எனக்கு இருப்பதே
என் அதிர்ஷ்டம் என்கிற
சந்தோஷம் ஒரு புறம்...
அவர்களது தன்மைகளை
விமரிசிக்க நேர்கிற சங்கடம்
மறுபுறம்...

முதற்கண் எனக்கே 
என் ரசனைகள் குறித்த
தெளிவான பார்வை இல்லை
என்கிற பரம ரகசியத்தை{?}
உடைபட செய்கிறேன்...

இந்த லட்சணத்தில்
நண்பர்களை எதற்கு
வம்புக்கு இழுக்க வேண்டும்
என்பது தான் 
இந்தக்கவிதையின் 
கேனத்தனம்...                     

Tuesday, May 24, 2011

மாறி மாறி தோற்றமளிப்பவை..

என் அஜாக்கிரதையான
தன்மை, மிகுந்த எச்சரிக்கை
உணர்ச்சியோடு 
இருப்பதாகத்தோன்றும்....

என் யதார்த்தமான
தன்மை, 
திட்டம் தீட்டி 
செயல்படுவதாகத்
தோன்றும்...
                                                                    
என் வளைந்து கொடுக்கிற
தன்மை, மிகவும்
நான் இறுகிக்கிடபபதாகத்
தோன்றக்கூடும்...

பரமானந்தத்தில்
நான் கதறி கண்ணீர்
சிந்துவது
ஏதோ சோகங்களுக்காக 
அழுவதாகத்தோன்றும்....

இவ்விதம் எனது
எல்லா மன உணர்வுகளையும்
மாற்றி பிரதிபலித்துக்
காண்பிக்கிற என் முகம்,
என்னை பயித்தியக்காரன்
போல தோன்ற வைக்குமோ??

சுந்தரவடிவேலு...

Monday, March 7, 2011

வேறுபாடுகள்.....

அனிச்சையாக 
நிகழ்கிற சந்தோஷங்கள்
மிகவும் வீரியம்
குறைந்தவை...!..
--இலக்கு நிர்ணயித்தபடியும்
குறிக்கோளை அடைய
பிரயத்தனித்தவாறும்
பெறப்படுகிற சந்தோஷங்கள்
உழைப்பின்
இனிக்கிற  வியர்வையோடும்
ஆயுள் அடர்த்தியோடும்
உடன் இருப்பவை...

--அனிச்சை சந்தோஷங்கள்
காட்டாறாய் பிரலாபித்து
சற்று நேரத்திலேயே 
கானலாக மாறுபவை..,
--குறிக்கோள் வைத்து
நிகழ்கிற சந்தோஷங்களோ
கானல் போல தென்பட்டு
கடைசியில் கடலாகி
அடியாழம் சென்று 
முத்தெடுக்க வைக்கும்
சாதுர்யம் நிரம்பியவை..!!

..

Sunday, November 28, 2010

தொன்று தொட்டு....

வார்த்தைகளை விட
தொன்மையானவை
மௌனங்கள்...


மௌனங்கள்--
அமைதியின் அடையாளமாக                    
தியானத்தின் அடையாளமாக
வார்த்தைகளைக்காட்டிலும்
வீரியம் நிரம்பியதாக
நம் எல்லாரிலும்
ஊடுருவிக்கிடக்கின்றன....

கைதட்டல் வாங்குகிற
வார்த்தைகள் , சமயங்களில்
கல்லடியும் வாங்கக்கூடும்..

ஆனால் மௌனங்கள்
நிராயுதபாணியாக நின்றே
எதனையும் வெல்பவை..

மரணங்களும்
தொன்மையானவை தான்...
ஆனால் தொன்மையான
வாழ்வினை வைத்து
நாம் அதனை எப்போதும்
தவிர்க்கவும் தகர்க்கவுமே
போராடிப்பார்க்கிறோம்..,

ஓர் குழந்தை அடம் பிடித்து
பலூனை பெற்றுக்கொண்டதும்
ஓர் புன்னகை தவழ்கிறதல்லவா...?
--அப்படி இருக்கிறது
நம் வாழ்க்கைக்கான போராட்டம்
அனைத்தும்....

--நாம் அப்படி
போராடி ஜெயிப்பதை
மெல்லிய புன்னகையோடு
ரசித்துக்கொண்டிருக்கிறது மரணம்..!!

Saturday, November 13, 2010

சமாளிப்பு..

 என்றோ ஒரு நாள்
ஓர் சுவாரஸ்யமான
கவிதை ஒன்றை               
எழுதி வைத்ததாக
ஞாபகம்...
-மறுபடி அதனைக்
கொணர்வதற்கான
முஸ்தீபுகளை
மேற்கொண்டாலும்
அதே கோர்வையில்
வார்த்தைகள் பிடிபட
மறுக்கிறது.. மற்றும்
அந்தக் கருத்துக்
கூட அத்தனை தெளிவாக
நினைவிலில்லை...
--இவ்வளவு இம்சையில்
அது குறித்து எதற்கு
இத்தனை பிரலாபம்?

கவிதை வறட்சியில்
ஓர் பழைய கவிதைக்கான
தேடல்..
அது கிடைக்கவில்லை
என்கிற அவஸ்தையைப்
பதிவு செய்வதில்
இப்போது ஒரு கவிதை...??

Thursday, October 14, 2010

நானும் கடவுளும் முரண்களும்...

 1

நாத்திகனையும்
காப்பாற்றுகிற பொறுப்பு
கடவுளுக்கு இருக்கிறது...

சாதாரண மனிதர்கள்
கடவுள்களில் பாரபட்சம்
பார்க்கலாம்..,
அசாதரணமான கடவுள்
மனிதர்களில் பாரபட்சம்
பார்ப்பதில்லை...!!

இந்தக்கருத்துக்கூட
இனி எந்தக் கடவுளுக்குப்
போய் சேருமோ தெரியவில்லை..

ஆனால் நிச்சயம்
ஒரு நாத்திகனாவது
படித்துப் பார்ப்பான்
என்றே அனுமானிக்கிறேன்....!!



நன்றி நவில்வதிலுள்ள 
பேரின்பம்
பிரார்த்தனைகளில் இருப்பதாகத்
தெரியவில்லை..
பிரார்த்தனை என்பது
மெருகேற்றிய பிச்சை..!

கோயில் வாசலுக்கு
வந்ததும் பிச்சைக்காரனிடம்
நீ கடவுளாகி விடுகிறாய்...

--உள்ளே நீ கடவுளிடம்
ரகசியமாக பிச்சை கேட்டாய்..,
பிரார்த்தனை என்கிற பெயரில்...!!



நான் கடவுளைப்
பிரார்த்திப்பதில்லை..,
நம்பிக்கையின்மையால் அல்ல,
கடவுள் மீதான பெருமதிப்பால்....

என்னுடைய அல்ப
பிரார்த்தனைகளைப் பொருட்படுத்துகிற
அவகாசம் கடவுளுக்கு
இல்லாமற் போகக்கூடும்,
உடனே நான் அந்த
அசாதாரண கடவுளை
கோபிக்கக்கூடும்..,
அவசரப்பட்டு "கடவுள் பலவீனமானவன்"
என்று முடிவெடுக்கக்கூடும்..,

ஏதேனும் நிறைவேறுகிற
தருவாயில்
உடனடியாக கடவுளுக்கு
நன்றி சொல்கிற அவசரமும்
நாகரிகமும் என்னிடமிருக்கிறது....!!

சுந்தரவடிவேலு...

Saturday, August 21, 2010

நின்று கொல்லும் தெய்வம்....

கோயிலை விட்டு
வெளியே  வந்த 
பிறகு தான் 
கர்ப்பக்ரஹத்துக்குள்
சுவாமியைப் பார்க்கவே 
மறந்தது ஞாபகம்
வருகிறது....                                      
பிரச்சினைகளுக்கான 
பிரார்த்தனைகளோடு
கோயிலை எல்லாரும் 
அணுகிக்கொண்டிருக்க -
பிரார்த்திப்பதே 
பிரச்சினை என்பதாக
நான் முரண்படுவது 
எந்த லட்சணத்தில் 
சேர்த்தி என்பது புரியவில்லை..

எதிர்வரிசை பெண்களில் 
லயித்து விடுகிறது என் பக்தி..

நாயைக்கண்டால் 
கல்லைக்காணோம்  என்பது
மனிதனின் பிரச்சினை..
--கல்லாயிருக்கிற 
கடவுளுக்கு அது பிரச்சினையே அல்ல...
--ஒரு நாள் 
தன்னையே பெயர்த்து 
'நங்'கென்று என் தலையில் 
ஒரு சிதிலம் 
விழக்கூடுமென்றே அனுமானிக்கிறேன்...!!

Friday, September 11, 2009

ஆதலால்...

கவிதை புனைவதற்கு
நான் யோசிப்பவை எல்லாம்
என் கைகளுக்குக் கிடைக்காதவையே..

என் இழப்புக்களையும் ஏக்கங்களையும்
பிதற்றவே நான் கவிதைகளைப் பிரயோகிக்கிறேன்...
--ஆகவே, எனக்குக் கிடைத்தவைகள்
யாவும் கவிதைகள் அல்ல..!

கவிதைகள் அல்லாதன
சுலபத்தில் என்னை சேர்ந்திருக்கும்-என்
இதயம் அதில் சோர்ந்திருக்கும்...,

கவிதை குறித்த ப்ரக்ஞை அற்றவன்
வாழ்வில் கூட நான் ஏதேனும் கவிதையை
உணர்கிறேன்..., ஆனால்
கவிஞ்ஞன் என்ற இறுமாப்பில்
இறுகியவன் வாழ்வில் - சஞ்சலம் தான் தெரிகிறது...!!

நான் தேடுகிற கவிதைகள்
ஒருக்கால் எனக்குக் கிடைக்கிற பட்சத்தில்
அதன் மேன்மைகளை இழக்க நேர்ந்து
"கவிதைகள் அற்றன"வாகி விடுமோ
என அஞ்சுகிறேன்...

--நீ எனக்கு
அற்புதமான
கவிதையாக புரிபட்டாய்...
பார்வையிலிருந்து மறைந்தும் விட்டாய்..
மீண்டும் நான் தேடினாலும்
கிடைக்காதவளாகி விடு..
கவிதைகள் உன் வசம்
இழக்க நேர்வதை நான் விரும்பவில்லை..!!

சுந்தரவடிவேலு, திருப்பூர்.

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...