Showing posts with label SENSITIVE SEVENTH SENSE. Show all posts
Showing posts with label SENSITIVE SEVENTH SENSE. Show all posts

Friday, November 18, 2011

7 ஆம் அறிவு.... படவிமரிசனம்..

ஏழாம் அறிவு .. திரையரங்கு சென்று பார்த்தேன்... சினிமாவை
டிவி யில் பார்ப்பதையும், டிவிடி யில் பார்ப்பதையும் நான் விரும்புவதில்லை.., வருடத்திருக்கு ரெண்டு படங்கள் பார்த்தாலும் திரையரங்கு சென்று தான் பார்ப்பேன்... படம் எடுத்தவர்களுக்கும்  திரையரங்கு உரிமையாளர்களுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்கிற பத்தாம்பசலித் தனமெல்லாம் எனக்கில்லை...
 அந்த விசாலமான காலரி மனசுக்கு ஓர் சுகந்த உணர்வை , ஓர் வகைபுரியா உவகையை ப்ரவஹிக்க வைக்கிறது...
ரெண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஓர் தவம் போல குண்டியமர்ந்து உட்கார முடிகிறது... மலரும் நினைவுகளைப் பரப்பி ஓர் ரம்மிய சூழலை த்வனிக்க செய்கிறது..
இதே அரங்கிற்கு இளம் பிராயங்களில் கால்நடையாக , கால்களில் செருப்பு கூட அற்று , வேகிற வெய்யில் குறித்த பொருட்டற்று, சிட்டாகப் பறந்து வந்து தரை டிக்கட் எடுத்து முன்வரிசையில் இடம் பிடித்து பார்த்து ரசித்த படங்களின் பட்டியல்கள் நிழலாடும்...
இன்று உயர்ந்த வகுப்பில் மிக சாவகாசமாக உட்கார்ந்த வண்ணம் இடைவேளையில் தூரம் தெரிகிற தரை டிக்கட் ரசிகர்களை கவனிப்பது கூட அலாதி ...

உண்மையிலேயே ஏழாம் அறிவு பிரம்மிக்க வைக்கிறது... சூர்யாவின் தேர்ந்த நடிப்பும், ஸ்ருதிஹாசனின் சமூகப் பிரக்ஞை நடிப்பும், சிலிர்க்க செய்கிறது... இவைகளைக் காட்டிலும், முருகதாஸ் குறித்து வியப்பு மிக விரிகிறது... அந்தக் கொத்தவரங்காய் சைசில் இருந்துகொண்டு இத்தனை விஷயங்களை மிக அழகாக விஷுவல் செய்திருக்கிற பாங்கு ஆச்சர்யமூட்டுகிறது..

திரைக்கதையை ஆதிகால வரலாற்றோடும் தற்கால விஷயங்களோடும் இணைத்திருக்கிற திறமை பாராட்டுக்குரியது..

தமிழ்படங்கள் இப்படி ரசனைவீரியத்தோடு பிரவேசிக்கத் துவங்கி விட்டதை நினைக்கையில் ஆரோக்யமாக உள்ளது...
தாமதமாகப் போகாமல் சற்று முன்னராகவே சென்று துவக்கம் முதல் பாருங்கள்..அந்த ஆரம்ப கட்ட சம்பவங்கள் மிகவும் பிரயத்தனத்தோடு ஷூட் செய்யப் பட்டிருக்கிறது...
இடைச் செருகலாக வருகிற சர்க்கஸ் ஆகட்டும், ஸ்ருதியின் அந்த டி என் எ ஆராய்ச்சியாகட்டும் , சீனாவிலிருந்து நோய் பரப்ப வருகிற அந்த வில்லனாகட்டும், அவனுடைய ஹிப்னாட்டிஸத்தில் சிக்குண்டு தவிக்கிற நபர்களாகட்டும்... மிகவும் நேர்த்தியாக செதுக்கப் பட்டுள்ளனர் அனைவரும்..

இவை போக ஹாரிஸ் ஜெயராஜின் கூலான பின்னணி இசை, முன் அந்திப் பாடல், காதல் தோற்றதில் சூர்யா புலம்பிப் பாடுகிற பாடல், ரெண்டொரு பாப் ராப் என்று அனைத்தும் ஜில்லென்று இருந்தது..

நன்றி..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...