Showing posts with label UTTHAMA VILLAIN [TAMIL MOVIE REVIEW]. Show all posts
Showing posts with label UTTHAMA VILLAIN [TAMIL MOVIE REVIEW]. Show all posts

Wednesday, May 6, 2015

உத்தம வில்லன் .........

வ்வித அதீத கற்பனைகளும் களேபரங்களும் தமிழ் சினிமாவில் இப்போது வழக்கமாகி விட்ட ஒன்று..
தமிழில் எவர் படம் எடுத்தாலும் ஏதேனும் மாற்றங்களையும் புதுமைகளையும் சேர்ந்தாற்போன்று படைத்து சாதித்துக் காண்பிக்க வேண்டும் என்கிற அபரிமித வெறி ஆளாளுக்குப் போட்டு இம்சிக்கிறது என்றே தோன்றுகிறது..

இந்த வெறிக்கு கமல்ஹாசனுக்கு சொல்லித் தரவும் வேண்டுமா?.. இத்தனை காலங்கள் திரையுலகில் நீடித்து வீற்றிருப்பதே அரும்பெரும் சாதனையாக கொள்ள வேண்டுமென்றிருக்க , அதுவும் போக எக்ஸ்ட்ரா லார்ஜ் செய்து தனது கலை தாகத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியது தமது தலையாய கடமைகளில் ஒன்றாக கமல் அனுமானித்திருப்பதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை.. !

நிஜவாழ்க்கைக்கும் சினிமா வாழ்க்கைக்கும் மிகப் பெரிய முரண் ஒன்றை மையமாக வைத்தே இந்தப் படத்தின் திரைக்கதை நெடுக ..

60 களைக் கடந்தும் கூட காதலியை பைக்கிற்கு முன்னாடி அதுவும் ஓட்டுகிற தன்னை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கச் சொல்லி அந்தக் கமல் பிராண்ட் கிஸ் அடிப்பதும், அந்த அடுக்கிவைக்கப் பட்டுள்ள மரக் குவியல்கள் நடுவே ஸ்டெப் போட்டு நடனம் ஆடுவதும் கொஞ்சூண்டு மாத்திரமே ரசிக்க முடிகிறது.... 

தனக்குரிய முதிர்ச்சிக்கு ஏற்பவே தன்னுடன் இருக்கும் நாயகிகளையும், அதாவது பார்த்தாலே 'முதிர்கன்னி' என்று முத்திரை இடத் தோன்றும் அளவுக்கு உள்ள நடிகைகளை தமக்கு ஜோடியாக்கிக் கொண்ட கமலின் கலையுலக முதிர்ச்சி  பாராட்டப் படவேண்டிய ஒன்றே.. 

பாலச்சந்தரைப் பார்க்கையில், அவருடைய அந்தப் பேசுகிற தொனியை அப்படியே கிரகித்துக் கொண்டு நடித்தவர் நாகேஷ் மட்டுமே என்று தோன்றிற்று.. அல்லது நாகேஷின் அந்தத் தொனியில் பாலசந்தர் பேசினாரோ என்னவோ.. 

ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.. 
இந்த மாதிரி வரலாற்றுப் பின்னணிகளோடு சொல்லப் படுகிற உண்மை சம்பவங்கள்  ஆகட்டும் கற்பனைகளாகட்டும், கமல் காண்பிக்கிற அந்த நேர்த்தி  உண்மையில் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்கத் தான் வைக்கிறது.. 

அந்த அரண்மனைகளின் பிரம்மாண்டம், அந்தப் பணிப் பெண்டிர்களின் மற்றும் ஆடவர்களின் அலங்காரத் தேஜஸ்கள், அவர்களுடைய நடவடிக்கையில் உள்ள மெருகு.. 
கிராஃபிக்ஸின் பங்கீடு அதிக பட்சம் உள்ளதென்பதை  நாம் அனைவரும் சுலபத்தில் உணர்ந்து கொள்கிறோம் என்ற போதிலும், அதனையும் தாண்டி அதனை ஏற்றுக் கொண்டு சுவாரஸ்யமாக கவனிக்கிற ஒரு தன்மையினை நம்மில் திணித்திருக்கிற கமலின், இன்னபிற பின்னணிக் கலைஞர்களின் திறனை எத்தனை மெச்சினாலும் தகும்.. 

இ.ராஜா பி.ஜி.எம் போன்று சொல்லிக் கொள்கிற  வகையிலே கிப்ரானின் இசைக் கோர்வை இல்லை தான்.. வெறுமே ஒரு அமெச்சூர் இசைக் கலைஞனின் சிதறல்கள் தான் அங்கங்கே ஒலித்தன.. இம்மாதிரி படங்களுக்கு  ராஜாவை அணுகி இருந்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும்.. ஏனெனில், இப்படியான  கதைகளுக்கு இசையின் ஆதிக்கம் மிகத் தேவை.. அவர் மிகப் பெரிய  இசை யாகமே நிகழ்த்தி இருப்பார்.. இதனை கமல் என்ன அறிந்திராமலா இருந்திருப்பார்?  .. என்னவோ அது ஒரு சினிமா அரசியல்.. [திருமணம் என்கிற நிக்காஹ் படத்தில் "சில்லென்ற சில்லென்ற" பாடலைக் கேட்டு கமல் மயங்கி விட்டாரோ என்னவோ]

நிறைய கிளோஸ்-அப் ஷாட்கள்.. எல்லாமே எல்லாருமே டீடெயில் நிரம்பித் தெரிந்தனர்.. 

வெறும் ஜெயராமைக் காண்பித்து ஒரு பின்புலக் கதை ஒன்றைக் கோர்த்து  அது நமது  மனதை வருடுகிற வித்தை எல்லாம் கமலுக்கு மட்டுமே சாத்தியம்.. அந்த மகளோடு உரையாடுகிற அந்தக் காட்சி அற்புதம்.. 
மகனுடைய அந்த விட்டேற்றித் தனங்களும் பின்னர் தனது தந்தை நிலை அறிந்து அவன் உடைந்து போவதும் அதற்கு கமல் அவனது தலையை கக்கத்தில் திணித்து ஆறுதல் உதிர்ப்பதும் .. "சோகக் கவிதை".. 

நிதரிசன உண்மை பிரைன் டியூமரில் .. அதன் நிழல் இங்கே சாகாவரத்தில்.. 

உயிருடனே போஸ்ட்-மார்டம் செய்வது போன்ற உணர்வுகளும் வலிகளும் நம்மை ஆக்கிரமித்து.. கைக்குட்டையை ஈரப் படுத்திக் கொண்டே வெளியேறுகிறோம்.. 

மனசைத் தொடுகிற கமலின் அந்தப் பாட்டின் வரிகள்.. : 
"சாகாவரத்தை யார் தான் ரசிப்பர் ?
தீரா கதையை யார் தான் படிப்பர் ??"


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...