Showing posts with label அறுபட்ட தந்திகள்.... Show all posts
Showing posts with label அறுபட்ட தந்திகள்.... Show all posts

Saturday, April 3, 2010

nothingness..வெறுமை...

வெறுமையின் வீச்சில் ரசனைகள் பொசுங்கின... காலத்தின் மௌன ஓலமாய் வெறுமை ஓர் பேரண்டமாய் வியாபித்து வார்த்தைகளுள் பிடிபடாத ரகளைகளை மனசுள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது...
கானலின் தகிப்பு போல ஜொலிக்கிறது வெறுமை... நிழலைக்காட்டிலுமான சூனியத்தில் வெளிச்ச வேஷம் தரித்துக்கொண்டு மினுமினுக்கிறது வெறுமை... ஏதோ புயலுக்கான  சமிக்ஞை போன்றும் புலனாகிறது, பெரிய ரணகளம் நிறைவுற்றதற்கான தடயம் போலவும் பாவனை காட்டுகிறது வெறுமை...

அதன் தன்மையில் விக்கித்து நிற்கையில், அதன் தீவிரத்தில் உடைந்து கிடக்கையில், அதன் நுட்பத்தில் மூர்ச்சையாகிக்கிடக்கையில்...
சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சலித்துக்கொள்கிறார்கள்.., சாணி மாதிரி சும்மா கிடப்பதாக அபிப்ராயம் தெரிவிக்க அவசரப்படுகிறார்கள்... வெறுமை யினின்று மீள்வதற்கான வழி வகைகளை செய்ய வக்கற்று, வார்த்தைகளால் சாகடிக்க முயன்று பார்க்கிறார்கள்...

நீர்வீழ்ச்சி போலவும் உணரப்பட்டது வெறுமையை... எரிமலை குழம்பாகவும் உணரப்படுகிறது... எல்லா பரிமானங்களுக்கான  யோக்யதைகளுடனும் வெறுமை இருப்பது சற்று வினோதம் என்ற போதிலும் , அதனின்று வெளிப்பெயர்ந்து ஓர் தொழில் முனைபவனாக , எதையேனும் சாதிக்கிற தாகம் கொண்டவனாக , குறைந்த பட்சம் ஓர் நாய்க்கு அடிமையாக இருப்பதற்கான முஸ்தீபாவது கொண்டிருந்தால் தான் பெற்றவளும் பிறந்தவளும் கட்டியவளும் மதிக்கிற சூழல் இந்த சமூகத்தில்..

சுந்தரவடிவேலு..

Saturday, February 6, 2010

ஆதார ஸ்ருதிகள்...

அசை போடக்கூட அலுத்துப்போகிறது எனது அன்றைய நாட்களின் காதல் அனுபவங்கள்.. அன்றைய போழ்துகளில் மிகுந்த மென்மையும் மேன்மையும் பொதிந்து உணரப்பட்ட காதல் இன்று ஓர் தடயம் கூட இழந்த தன்மையில் பாழ் பட்ட அரண்மனை போல வவ்வால் எச்சம் போல ஓர் அசூயை கொண்டு நாறுகிறது என் மன ஓட்டங்களில்...
பேரானந்தங்களையும் ரம்மியங்களையும் ஓயாமல் அள்ளி வழங்கிய காதல் இன்று வெறுமனே ஓர் லஜ்ஜையான ஞாபகமாய் என்னில் வியாபித்து, உபயோகமற்ற பாசி போல படர்ந்து கிடக்கிறது...
காதலித்த நாட்களில் ... இந்தக்காதல் என்கிற ஓர் அதியற்புதமான உணர்வு பின்னொரு நாளில் மலரும் நினைவுகளாய் மனதில் பொங்கி என்னை சிலிர்க்க வைக்கக்கூடும் என்று அனுமானித்திருந்த எனக்கு இன்று ஓர் பெரிய ஏமாற்றமாய் தான் உள்ளது...
காமம் தவிர்த்து மிகவும் புனிதமாகவும் தெய்வீகமாகவும் மாத்திரமே உணரப்பட்ட காதல் ... எங்கோ தொலைந்து போய் இன்று ....
காதல் இழந்த காமம் தான் அவ்வப்போது தொனிக்கிறது ...

இந்தக் காதல், காமம் இரண்டும் தான் மனித வாழ்வின், பிற உயிரனங்களின் ஆதார ஸ்ருதி என்றாலுமே கூட , மற்ற பிரச்சினைகள் சுலபத்தில் மையம் கொண்டு விடுவதால் , இவை இரண்டும் தன் வீரியங்களை இழந்து நினைத்துப்பார்க்கக்கூட சாத்யமற்றுப்போகிற விபரீதம் கொஞ்சம் வேதனை தான்...

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...