Showing posts with label சின்னக் கவிதை நாய்... Show all posts
Showing posts with label சின்னக் கவிதை நாய்... Show all posts

Friday, May 31, 2013

நாய்கள்..

ல்லா ஊர்களிலும் 
எல்லா கறிக் கடைகளிலும் 
நாக்குகளைத் தொங்கப் 
போட்டுக் கொண்டு 
நாய்கள் உண்டு... 

பிரத்யேகமான அந்த 

நாய்கள் கொழுத்துக் 
கிடக்கும் சினைப்
பன்றிகள் போல..!!

கறிக்கடைக் காரன் 

எதை சொன்னாலும் 
செய்கிற நன்றியில் 
ஓர் பவ்யமான பாவனை.. 
வாலாட்டம்...!

எலும்புகள் வீசப் படுகையில் 
பகிர்ந்துண்கிற பண்பற்று 
எனக்கே எனக்கென்கிற 
சுயநலப் பண்புகள் 
நாய்களுக்கே உரித்தாவன..!!

உண்ட மதர்ப்பில் 

சாலைகளில் 
சவம் போல கிடக்கும்..

"நாய் படாத பாடு"

"இந்த நாய்ப் பொழப்பு எதுக்கு?"
"மானம் கெட்ட நாய்"
"சனியன் புடிச்ச நாய்"

மனிதர்களுக்கு மனிதர்கள் 

ஏவிக் கொள்கிற 
நாராசாரக் கணைகளாக 
வலம்  வருகின்றன 
நாய்கள் எப்போதும் 
நமக்குள்ளாக..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...