Showing posts with label yoga day .. daddy day.... Show all posts
Showing posts with label yoga day .. daddy day.... Show all posts

Sunday, June 21, 2015

யோகா.....

இன்று தந்தையர்  தினம்.. மற்றும் யோகா தினம்.. 
நான் யோகா செய்வதில்லை.. எனது தந்தை இறந்து 20 வருடங்கள் ஆயிற்று.. 
எனது அப்பா யோகா தெரிந்து வைத்திருந்தார்.. நீச்சல் தெரிந்து வைத்திருந்தார்.. ஆனால் எனக்கு எதுவும் கற்றுத் தந்ததில்லை.. 

தோளுக்கு மீறி வளர்ந்தும் கூட தோழனாகவில்லை அவர்.. தொந்தரவு தருகிற நபராகவே தான் இருந்து வந்தார்.. 
ஆனால் என் அம்மா சொல்வாள்.. "வெளிய தான் அவரு உம்மேல எரிஞ்சு விழறாரு தவிர, மனசுக்குள்ள ரொம்பப் பாசம் வச்சிருக்காரு"
--- இது ஒரு மோசமான முறை.. உள்ளே அன்பை இறுகப் பூட்டி வைத்துக் கொள்வதாம்.. , வெளியே இம்சை தருவது போன்று நடிப்பதாம்.. 
அதற்கு இம்சையை அப்படிப் பூட்டிவிட்டு, அன்பைக் கூட நடிப்பது உத்தமம்.. 
ஏனெனில் குழந்தை மனசு, உள்மனதை ஆராய்கிற திராணி அற்றது. அது, வெளிவேஷத்திலேயே எதையும் நம்பி சந்தோஷம் கொள்வது.. 
குழந்தைக்கு அதுபோதும்... அதுவே மட்டும் கூடப் போதும்.. 

உள்ளேயும் வெளியேயும் அன்பை மாத்திரமே பொழிகிற பெற்றோரின் குழந்தைகள் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள்.. 
அன்பை வேஷமாக்கி நடிக்கிற பெற்றோரின் குழந்தைகள் கூட ஓரளவு கொடுத்து வைத்தவர்கள். 
ஆனால் .. உள்ளேயும் வெளியேயும் அன்பற்ற பெற்றோரும் சரி, உள்ளே மட்டுமே அன்புள்ள பெற்றோரும் சரி... அவர்களது குழந்தைகள் நிறைய சிரமப் படுபவர்கள்.. 

தான் பெற்ற குழந்தைகளினிடத்து  தாய்க்கோ தந்தைக்கோ அப்படி என்ன ஒரு வன்மம்.. ? அப்படி என்ன ஒரு ஈகோ?.. அன்பாய் அரவணைத்து 'என்னடா செல்லம் உனக்கு வேணும்.. எதுவானாலும் கேளு.. டாடி உனக்கு வாங்கித் தர்றேன் ' என்று சொல்கிற மாண்பு நிரம்பிய தந்தைமை சிலருக்கு வாய்க்கப் பெறாத துரதிர்ஷ்டங்களை கண்ணீர் மல்க கவனிக்கிறேன்.. 

'உன்னோட வயசுல எனக்கு நேரத்துக்கு சாப்பிட சரியான சாப்பாடு கிடைக்காது.. குளிச்சிட்டு நேத்துப் போட்ட பேண்ட் சட்ட தான் போட்டாகணும் ..உனக்கு என்னடான்னா , போதுங்க போதுங்க நாலு வேள சோறு.. நடுவுல வேற ஸ்நாக்ஸ்... டிஸைன் டிஸைனா துணிமணிக... ' 
என்று சொல்கிற பெற்றோர், பெற்றோரே அன்று.. எதற்கு அவர்கள் பிள்ளை பெற வேண்டும்? 
தான் அன்று அடைந்த இடர்களையும் துயர்களையும் தமது  மக்களும் செவ்வனே அனுபவித்து வருவதே சாலச் சிறந்தது ..' என்று கருதுகிற மூடப் பெற்றோரின்  நடுவே ..
'நாம தான் இல்லாத கஷ்டப் பட்டுட்டோம்.. நம்ம புள்ளைங்களாவது அப்டி இல்லாம  கொஞ்சம் நல்லபடியா அனுபவிக்கட்டும்' என்கிற மனோபாவமுள்ள பெற்றோரே  பெற்றோர்.. 

உடனிருக்கும் பெற்றோரும் அருகாமையில் உள்ள மற்றோரும் ஆனந்தம் அளிப்பவர்களாக  இருக்கும் பட்சத்தில் அதனைவிட சிறந்த யோகா  வேறென்ன?

என்ன தான் பிரம்மாதமாக ஆசனங்களும் யோகாக்களும் பயின்று அதிலொரு  பக்கா நிபுணத்துவம் அடைந்தாலுமே கூட, அண்டை அயலாரின் ஏய்ச்சலும் எரிச்சலும்  நக்கலும் நய்யாண்டியும் கேலியும் கிண்டலும் நம் மனத்தைக் கீறி விடும் ...

அதனையும் தாண்டி அவர்களை மண்டியிட்டு  மன்னிப்புக் கேட்க வைக்கிற தினவு  அந்த யோகக் கலைக்கு இருக்கும் பட்சத்தில்.... 
யோகாவை வணங்குவோம்.. யோகாவில் ஐக்கியமாவோம்.. !!
நன்றி..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...