Showing posts with label film review. Show all posts
Showing posts with label film review. Show all posts

Friday, February 14, 2014

பண்ணையாரும் பத்மினியும்

பண்ணையாரும் பத்மினியும் ... சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இப்படி ஒரு ட்ரை இது வரைக்கும் யாருமே பண்ணியதில்லை என்று சொல்லலாம்.
அப்டி ஒரு அமைதியான சூழல்.., வழக்கமான கமெர்ஷியல் நெடி கிஞ்சிற்றும் அற்று ஓர் சுகந்த தென்றலை சுவாசிக்கிற சுவாரசியம் படம் நெடுகிலும்...

ஏதோ ஓர் சூழலில் அந்த லாகிரி தடை பட்டுவிடுமோ என்கிற உத்தேசமும் சந்தேகமும் மனசில் எழுந்த போதும், அப்படி எல்லாம் துவண்டு போக விடமாட்டோம் என்கிற விதமாக ஒருவகை மென்மை இழையோடுவதை ஆச்சர்யம் விழி பிதுங்க தரிசிக்க நேர்கிறது.. !!

ஆர்ப்பாட்டமில்லாத அப்பட்டமான அப்பாவி பண்ணையார்.. ஜெயப்ரகாஷ்.. வாவ் போட வைக்கிறார் மௌனமாகவே.. பால்ய நண்பர் ஒருவரின் நிமித்தம் அங்கே வந்து சேர்கிற பியட் பத்மினி கார்.. அது அங்கேயே இருந்து... நமக்கெல்லாம் அளிக்கிறது 2-அரை மணிநேர விருந்து..

விஜய் சேது.. மச்சான் அவார்டுகளுக்குக் குறி எதுவும் வைக்க வேண்டியதே இல்லை.. அவார்டுகள் இவரைக் குறி வைத்து வந்து வந்து விழும்.. அம்புட்டு யதார்த்தம்.., அம்புட்டு நேர்த்தி.. சினிமா உலகிற்கு வி.சே ஒரு பெரிய வரம்..
தய செஞ்சு பு.சாலித்தனமா செய்றதா நெனச்சுக்கிட்டு யாரும் முப்பது ரூபா dvd  வாங்கி பார்க்காதீங்க.. பாவம் விகடன்ல வேணா மார்க் ரொம்புமொ என்னவோ டிக்கட் கல்லா காத்து வாங்குது..

ஆரம்பத்துல இருந்தே தரமான படங்களுக்கு மக்கள் அளிக்கிற ஆதரவு இம்புட்டு தான்..
வெந்தும்  வேகாம இருக்கற அற வேக்காட்டு சனியங்களுக்குத் தான் உய்ந்து உய்ந்து ப்ளாக் ல டிக்கட் வாங்கிகினு வருவாங்க. இந்த மாதிரி படங்கள ப்ரீயா காட்னா கூட மொகறைய சொய்ங்னு அப்பால திரும்பிக்குவாங்க..

இன்னொருவாட்டி பாக்கலாம்னு ஐடியா பண்ணிக்கினு இருக்க இருக்கவே ங்கொய்யாலே, வந்துடிசய்யா நம்ப இஸ்டாலின் ஸன் படம்.., இன்னாது..,இது கதிவேலன் காதலோ  இன்னாவோ.. அதுக்கு இப்பிருந்தே விஸில்  சும்மா ங்குய் ங்குய் ன்னு பறக்குது.. 

Wednesday, October 5, 2011

எங்கேயும் எப்போதும் .. {பட விமரிசன முயற்சி}

உண்மை சம்பவம் கூட இவ்வளவு வேதனைகளும் கோரங்களும் நிரம்பி இருக்குமா என்பது சந்தேகமே... ஆனால் திரைக்காக மெனக்கெட்டு , அதனைப் பார்க்கிற ரசிகர்கள் எல்லாரையுமே சிறிது நேரம் திகைக்கவும் வேதனைப்படவும் வைத்து விட்டார் டைரக்டர்... இது அவருக்கும் அவரது திரைக்கதைக்கும் மிகப்பெரிய வெற்றி என்ற போதிலும், ஓர் தாங்கொணா சோகத்தை இப்படித் தத்ரூபப்படுத்துகிற முயற்சி வேண்டாமென்றே தோன்றுகிறது.....

இன்னும் விமானத்திலும் சொகுசுக் கப்பல்களிலும் பயணம் மேற்கொண்டு மாபெரும் விபத்துக்களுக்கு உள்ளாகி மரணிப்பவர்களை யோசிப்போமேயானால் இந்த உலக வாழ்க்கை அற்ப புல்லைக் காட்டிலும் கேவலமாகப் புரிபடத் துவங்கி விடும்.... தியான முறைகளும் யோகா முறைகளும் இம்மாதிரியான பற்றற்ற தன்மைகளை ஊக்குவிப்பதில் தான் பிரயத்தனங்கள் மேற்கொள்கின்றன... ஆனால் இம்மாதிரி எந்த விபரீதங்களும் நிகழாமலே அம்மாதிரியான பற்றற்ற தன்மைகளுள் பயணிப்பதற்கான தளங்களை அமைத்துத் தருகின்றன...

ஆனால் இயல்பில் ஒரு மனிதன் இவ்வித கோர சம்பவத்திற்கு பிற்பாடே வாழ்க்கை மீதான நம்பிக்கைகளையும் பிடிப்பையும் இழக்க நேர்கிறது...அதுவும் கூட, சில வாரங்களோ மாதங்களோ...மீறினால் சில வருடங்களோ...!!

ஆனால் பற்றற்ற தன்மைகளை பின்பற்றுகிற குழாமிடம் பொருளீட்டுகிற திறன் இருக்குமா மற்றும் எதையேனும் புதிதாகக் கண்டுபிடித்து சமுதாயத்திற்கு நன்மை பயக்க வைக்குமா  என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்...

பற்றும் வேண்டும், பொது நல நோக்கும்  வேண்டும், எதையேனும் சாதித்து அதனை சமுதாயத்திற்கு சமர்ப்பிக்கிற மாண்பு வேண்டும்...

ஓர் படத்தை விமர்சிக்கத் துவங்கி, வேறெதையோ யோசிக்க நேர்கிற அளவு ஆழமாகவும் அழகாகவும் இருக்கிறது எங்கேயும் எப்போதும்...

ஜெய்யின் நடிப்பு ஓர் அற்புதமென்றால், அஞ்சலியின் நடிப்பு ஓர் அற்புதம்... அது போக சென்னையை கண்டு மிரள்கிற, மிகவும் யதார்த்தமாக சந்தேகப்படுகிற அனந்யாவும், அவரது guide ஆக செயல்பட்டு காதலனாகிறவராகட்டும், ஆனந்யாவின் அக்கா, ஜெய்யின் அம்மா, ... 

இத்தனை பாத்திரங்களை வடிவமைத்து, அவர்களுக்கெல்லாம் ஓர் முந்தைய 
சுவாரஸ்யமான வரலாறுகளைப் பதிவு செய்து,.. இவர்களுடைய அந்த வரலாறுகளோடு இந்தக் கொடுமையான விபத்துக்களை இணைத்து நமக்குக் காண்பிப்பது கண்ணீர் வரவழைக்கிறது..

பேருந்தில் பயணிக்கிற அந்தப் புதுமணத்தம்பதிகள், துபாய் சென்று திரும்புகிற தந்தை, அவருக்கான அவருடைய மகளின் போன் கால், ...

ஐயோ...தமிழில் இப்படி ஒரு படம் .. யாரும் இது வரை பார்த்திருக்க வாய்ப்பில்லை...

Monday, June 27, 2011

அவன் இவன்.. விமரிசனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு திரை அரங்கு சென்று பார்த்த படம், அவன் இவன்..
பாலா படம் .. என்கிற ஒரே நம்பிக்கையில் சென்று பார்த்தால், மிக கேவலமாக இருந்தது படம்..
அருவருப்பான வசனங்கள்... அசூயை கொள்ள வைக்கிற காட்சிகள்...
சம்பந்தமே இல்லாமல், காரெக்டர்களை உள்ளே நுழைத்து .. அவர்களை உதைத்து இம்சிக்கிற காட்சிகள்... உதாரணமாக அந்த மாடுகள் சம்பந்தப்பட்ட திரைக்கதை சற்றும் ஒட்டாத ஒன்று...
அந்த வில்லனும் மனசில் நிற்காத ஒரு சாதாரண முக அமைப்புக்கொண்ட நபர்..

இந்த பாலா படத்தில் எப்பொழுது பார்த்தாலும் காவல்காரர்கள் மிக பலவீனர்களாகவும் கேணத்தனம் நிரம்பியவர்களாகவும், சண்டித்தனம் செய்பவர்களிடம் பயந்து நடுங்குபவர்களாகவுமே சித்தரிக்கப்படுவது ஆரோகியமற்ற ஒரு போக்கு...அது என்ன புத்தி சாலித்தனம் என்று பாலா நினைத்தாரோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

முந்தைய பிதாமகன், நான் கடவுள் படங்கள் எல்லாம் சற்று ரசிக்கவும் பாராட்டவும் உகந்தவைகளாக இருந்தன.. ஆனால், இந்தப்படம் பொதுக்கக்கூசுக்குள் பிரவேசித்து வந்த ஓர் தாங்கொணா அருவருப்பை ஏற்படுத்திவிட்டது... 

உதாரணமாக ஒரு அருவருப்பான வசனத்தை கவனியுங்கள்.. :
விஷாலை தேடி பெண் போலீஸ் வருகிறது..
தன் வாக்கி தாக்கி தொலைந்து விட்டதாகவும், அதனை விஷால் தான் சுட்டு விட்டதாகவும் சந்தேகித்து வந்து கேட்கிறார் அந்த பெண் அதிகாரி..

விஷாலின் அம்மா அம்பிகா விஷாலை அழைக்கிறாள்..
டே வாடா இங்கே.. உனக்கு எப்ப பார்த்தாலும் திங்க, பேல .. திங்க . பேல ... இதே தான் வேலையா? என்று கேட்கிறாள்..

கழுவீட்டு வாடா. அப்படியே வராதே..---- அம்பிகா..
கழுவாம வரதுக்கு நான் என்ன உன் புருஷனா?---- விஷால்..
பிற்பாடு விஷால் சொல்கிறார்.. :
அம்மா. மாவு மாவா போகுதுமா..

அதனை கேட்ட அம்பிகா சொல்கிறார்:
போனா போகுது உட்றா. அதை வச்சு போலிசுக்கு தோசையா சுட்டு தர முடியும்?

--இதனை ஹாசியம் என்று நினைத்து அம்பிகா சிரிக்கிறார்.. பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒன்றும் சிரித்ததாக தெரியவில்லை..
இப்படி ஒரு கேவலமான ஹாசியத்தை எப்படி பாலாவால் சிந்திக்க முடிந்தது.. இதனை சென்சார் போர்டு எப்படி அனுமதித்தது..??

பெற்ற தாயிடம் மகன் கேட்கிறான் .. 
எம்மா நீ இந்த பிரா எல்லாம் போட்டுக்கறதே இல்லையா?
அம்மா சொல்கிறாள்: 
இந்த வயசுல அதுக்குத்தான் இனி கொறச்சல்?

இவைகளில் எல்லாம் என்ன ஹாசியம் நாகரீகம் இருக்கிறது?.. காறித்தான் துப்பத்தோன்றுகிறது... 

இதற்கெல்லாம் சப்பை கட்டு கட்டி குமுதமும் விகடனும் விமரிசித்து மதிப்பெண்கள் வேறு கொடுக்கிறது..

இதே அநியாயங்களையும் அனாகரீகங்களையும் மையப்படுத்தி, குப்பைதொட்டி , சுடுகாடு, .. என்று பாலா தொடர்வார் என்றால் இயல்பாகவே அவர் எல்லாராலும் தூக்கி எறியப்படுவார்..

எதார்த்தம் என்கிற போர்வையில் இப்படி அசிங்கங்களையும் ஆபாசங்களையும் வன்முறைகளையும் வெளிச்ச்சமாக்கியே காண்பித்து கொண்டு இருப்பாரே யானால் ... பாலா இயல்பாகவே காணாமல்  போய் விடுவார்... 

இப்படி ஒரு அண்ணன் தம்பி.. இவர்களை காதலிப்பதோ அழகழகான கதாநாயகிகள்... கக்கூஸ் கழுவுவது போன்ற கதாநாயகர்களை சித்தரித்து விட்டு அவர்களுக்கு கல்லூரி செல்கிற அழகுப் பெண்களை காதலிகளாக நியமித்திருப்பது .. எதார்த்தமில்லை, அருவருப்பு...

மனசில் பதியாத டப்பா பாடல்கள், பின்னணி இசை...
இளையராஜாவின் வாரிசாகவே தோன்றவில்லை யுவன் ஷங்கர்..
புலிக்கு பிறந்த பூனை போல இருக்கிறது இசையும் பாடல்களும்..

வீட்டிற்கு வந்து குளித்தே ஆக வேண்டும் போல ஓர் நாற்ற உணர்வு மனசெங்கிலும்...  

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...