Showing posts with label காதலற்ற கவிதை. Show all posts
Showing posts with label காதலற்ற கவிதை. Show all posts

Friday, September 14, 2012

அபத்தம்...

மிக நான் உன்னிடம்
எதிர்பார்த்ததெல்லாம்
என் மீதான காதல்
கலந்த பார்வைகளை
மாத்திரமே...

உன்னைக் கவிழ்த்துவிட்டதாக
நம்பிக்கையோடு சொன்ன
என்னை
-விருந்து வைக்கச் சொல்லி
நச்சரித்து
இன்பமாகத் துன்புறுத்தியது
நண்பர் குழாம்...

இந்தக் கூத்தெல்லாம்
நடந்து முடிந்து
கிட்டத்தட்ட இரண்டொரு
ஆண்டுகள் கழிந்துவிட்டன...

இன்றைக்கு
என் மனைவி நீ இல்லை..வேறொருத்தி..
உன் கணவன்-
அன்று எனது காதல் வெற்றிக்காக
நச்சரித்து விருந்து வைக்க
சொன்ன நண்பர்களில் ஒருவன்..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...