Showing posts with label diwali kavidhai.. Show all posts
Showing posts with label diwali kavidhai.. Show all posts

Friday, October 24, 2014

தீபாவளிகள்.. அன்றும் இன்றும்..

ஒற்றை ஒற்றையாய் 
அன்று விட்ட 
ஊசி வெடி ஆனந்தம் 
கட்டுக் கட்டாய் 
இன்று விடுகிற 
சர வெடிகளில் காணோம்.. 

சுவர்களில் அடித்து 
சத்தமெழுப்பிய 
அன்றைய வெங்காய 
வெடி சுகம் 
இன்றைய காது பிளக்கிற 
டைம்பாமில் மிஸ்ஸிங்.. 

நட் போல்டை லூஸ் 
பண்ணி கொள்ளுப் 
பட்டாசை செருகி 
பிறகு டைட் வைத்து 
தூரம் தூக்கி எறிந்து 
அது கீழே வந்து 
எழுப்புகிற அந்த சப்தம் 
இன்றைய பிளாஸ்டிக் 
துப்பாக்கிகள் எழுப்புகிற 
தொடர் குண்டு வெடிப்புகளில் 
இல்லவே இல்லை.. 

இன்றெல்லாம் ஆகாய 
மார்க்கமாக சென்று 
வண்ணங்கள் பரப்பி 
அலட்டிக் கொள்கிற 
கவுரவப் பட்டாசுகள் 
அன்றெல்லாம் இல்லை. 
காலி பாட்டில்களில் 
செருகி விடப் படுகிற 
ஒற்றை ராக்கெட் 
"உர்ஷ் " என்றொரு 
சப்தம் எழுப்பி மேலே சென்று 
ஒரே வெடியை வெடிக்கும். 
சமயங்களில் அதுவும் 
புஸ்வாணமாகி நம்மை 
நமுத்துப் போகச் செய்யும்.. !

ஆனால் 
இன்றைக்கு நிற்காமல் 
ஆயிரம் வெடிகள் வெடிக்கின்றன.. 
அன்று விடுபட்டுப் போன 
எத்தனையோ ஒற்றை 
வெடிகளையும் 
இன்றைய பட்டாசுகள் 
ஈடுகட்டுவதாக ஒரு 
அற்ப கணக்கு எனக்கு.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...