Showing posts with label நய்யாண்டி.. ஹிஹி... Show all posts
Showing posts with label நய்யாண்டி.. ஹிஹி... Show all posts

Friday, May 8, 2015

'நிழல் வெறியன்'

'நிழல் வெறியன்'
என்கிற ஒரு தலைப்பின்
மீது எனக்கொரு பிரேமை..

அந்தத் தலைப்பில்
கவிதை யோசித்தேன்..

"வெய்யில் அவனுக்கு 
நிழல் தந்தது.. 
அவனது நிழலைத் 
தொலைக்கிற உத்தேசம் 
அவனுக்கில்லை ஆதலால் 
வெயிலையும் தொலைக்காமல் 
பார்த்துக் கொண்டான்.. "
"எல்லோரும் வரவேற்ற 
பொன்னந்தி மாலைப்பொழுதை 
தூரம் வீசி எறிந்து 
நிலவை இழுத்து வந்தான் 
மறுபடி நிழலுக்காக.. 
நிழலின் வெறியன் அவன்.. "

அப்படி ஒன்றும்  அப்ளாஸ்
வாங்காததால் அந்தக்
கவிதையை விடுத்து
கதைக் களம் அமைத்துச்
சமைத்தேன்..

"அவனுடைய நிழலை மிதிக்கவே பயந்தனர் அனைவரும்...!
ஆம், அதனை அவமரியாதையாக நினைத்தான் அவன்..
ஆகவே, அவனை அணுக முற்பட்டவர்கள் வெளிச்சமில்லாத
சூழலைத் தேர்ந்தெடுக்கவே முயன்றனர்..
அவனுடைய நிஜம் ஒருவனுக்கு ஏற்படுத்திய அதீத கோபத்தின்
நிமித்தம் அவனது முதுகை உதைத்துக் குப்புறத்தள்ளி, பிறகு மல்லாந்து திருப்பிப் போட்டு விலாவையும் நெஞ்சையும் சாணம் போன்று மிதித்தான்..
அதற்கு அவன் சொன்னான்:
"உன்னுடைய நல்ல நேரம், என்னை உதைத்ததால் தப்பினாய்.. எமது நிழலை இப்படி கால்களில் த்வம்சம் செய்ய நினைத்திருந்தாலோ, உன்னை சீவி இருப்பேன்"
நிழல் வெறியனின் இந்த எச்சரிக்கை அவனுக்கு இன்னும் சூட்டை ஏற்றிற்று..
அடுத்த நாள் வெயிலுக்காக அவன் காத்திருந்தான்..

சாகித்ய அகடெமிக்குப் பரிந்துரைக்கப் பட்டு பரிசீலனையில் இருந்து வருகிறது இந்தக் கதை..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...