ஜெயகாந்தன் மறைவுக்குப் பின்னர் அவர் குறித்து இனி பலரும் பல தகவல்களை சேகரித்த வண்ணம் பல கட்டுரைகள் புனைவர் என்பதில் ஐயம் எதுவும் இல்லை..
அவரது அடர்ந்த சாதனைப் பட்டியல்களை ஒவ்வொன்றாகக் கொணர்ந்து எனக்கும் நீண்ட ஒரு புனைவை நிகழ்த்த வேண்டுமென்கிற அவா ஒருபுறம் இருப்பினும் அந்தளவு அழகியலும் பொறுமையும் என்வசம் இல்லை என்கிற அனுமானம் உண்டு என்மீது..
ஆகவே, எனது அறிவுக்கு எட்டிய சிற்சில விஷயங்களை மாத்திரமே இங்கே தெரிவிக்க விழைகிறேன்..

"கோகிலா என்ன செய்து விட்டாள் ?" என்கிற ஒரு குறுநாவல் தான் முதற்கண் நான் அவருடைய படைப்பை வாசிக்கத் துவங்கினேன்.. அதன் பிறகு அவருடைய அனேக சிறுகதைத் தொகுப்புக்கள், குறுநாவல்கள் மற்றும் பல நாவல்கள் , கட்டுரைகள் என்று படித்து சிலிர்த்திருக்கிறேன்..
மனித வாழ்வின் அழகுகளும் அவலங்களும் மிக யதார்த்தமாக பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் அவரது படைப்புகளில்..
பாலச்சந்தரின் அநேகப் படைப்புகள், ஜெயகாந்தனின் சாயல்கள் நிரம்பியே காணப் பெறும் ..
இன்னபிற இயக்குனர்களும் அதே முறையில் தான் இயங்கி இருப்பரோ , அவைகளை அப்படி ஆழ்ந்து நான் கவனித்ததில்லை..

ஒரு நல்ல சினிமா எடுக்கத் துணிகிற எவரும் இவரது புனைவுகளை வாசித்தறிதல் சாலச் சிறந்தது என்பது என் கருத்து..
அதே மாதிரி கதை எழுதகிற நபர்களுமே கூட இவரது கதைகளை உள்வாங்கி எழுதினால், அவர்களது கதைகளும் தரம் மிளிர்ந்து காணப் படும்..
அவரது அடர்ந்த சாதனைப் பட்டியல்களை ஒவ்வொன்றாகக் கொணர்ந்து எனக்கும் நீண்ட ஒரு புனைவை நிகழ்த்த வேண்டுமென்கிற அவா ஒருபுறம் இருப்பினும் அந்தளவு அழகியலும் பொறுமையும் என்வசம் இல்லை என்கிற அனுமானம் உண்டு என்மீது..
ஆகவே, எனது அறிவுக்கு எட்டிய சிற்சில விஷயங்களை மாத்திரமே இங்கே தெரிவிக்க விழைகிறேன்..
"கோகிலா என்ன செய்து விட்டாள் ?" என்கிற ஒரு குறுநாவல் தான் முதற்கண் நான் அவருடைய படைப்பை வாசிக்கத் துவங்கினேன்.. அதன் பிறகு அவருடைய அனேக சிறுகதைத் தொகுப்புக்கள், குறுநாவல்கள் மற்றும் பல நாவல்கள் , கட்டுரைகள் என்று படித்து சிலிர்த்திருக்கிறேன்..
மனித வாழ்வின் அழகுகளும் அவலங்களும் மிக யதார்த்தமாக பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் அவரது படைப்புகளில்..
பாலச்சந்தரின் அநேகப் படைப்புகள், ஜெயகாந்தனின் சாயல்கள் நிரம்பியே காணப் பெறும் ..
இன்னபிற இயக்குனர்களும் அதே முறையில் தான் இயங்கி இருப்பரோ , அவைகளை அப்படி ஆழ்ந்து நான் கவனித்ததில்லை..
ஒரு நல்ல சினிமா எடுக்கத் துணிகிற எவரும் இவரது புனைவுகளை வாசித்தறிதல் சாலச் சிறந்தது என்பது என் கருத்து..
அதே மாதிரி கதை எழுதகிற நபர்களுமே கூட இவரது கதைகளை உள்வாங்கி எழுதினால், அவர்களது கதைகளும் தரம் மிளிர்ந்து காணப் படும்..