Showing posts with label அனுபவங்கள்.. அபிப்ராயங்கள்... Show all posts
Showing posts with label அனுபவங்கள்.. அபிப்ராயங்கள்... Show all posts

Saturday, September 8, 2012

தாடிக் கொம்பு..

முதல் முறையாக திண்டுக்கல் அருகே அமைந்துள்ள சௌந்தர ராசப் பெருமாள் கோவில் அமைந்துள்ள தாடிக்கொம்பு என்ற இடம் சென்றிருந்தேன்.. தேய்பிறை அஷ்டமிக்கு அங்கே இருக்கிற பைரவர் மிக விசேஷம் என்று சொல்லக் கேள்வி. .. பொதுவாக பைரவர் ஈஸ்வரர் கோவில்களில் தான் வீற்றிருப்பார்.. ஆனால் இங்கே பெருமாள் கோவிலில் இருப்பது தான் இவ்வளவு விசேஷத்துக்கு காரணமாக அமைந்ததோ என்னவோ..18

கூட்டம் அப்படி மொயப்பதைப் பார்த்தால் பெருமாளும் பைரவரும் கீழிறங்கி வந்து விட்டனரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ....
அடேங்கப்பா... என்று வியக்கத் தூண்டுமளவு சும்மா கூட்டம் அப்படி பம்முகிறது... 
2619152228
நாமெங்கே பார்க்கப் போகிறோம் என்று ஓர் சந்தேகம் வரவே, சரி திரும்பி விடுவோம் என்று யோசிக்கத் துவங்கி விட்டேன்... 
திருப்பூரிலிருந்து மெனக்கெட்டு இம்புட்டு தூரம் வந்துட்டோம், பார்க்காமப் போனா என்ன அர்த்தம்... மறுபடி இனி எப்ப வருவோம்?.. அல்லது வருவதென்பது என்ன நிச்சயம்?.. இப்படியெல்லாம் அறிவுப் பூர்வமாகத் தோன்றவே , எப்டியாச்சும் தரிசனம் பண்ணிட்டே போயிடலாம் என்று முடிவெடுத்து , சௌந்தரராசப் பெருமாள், சௌந்தரவல்லித் தாயார், காலப் பைரவர் என்று .. ஒரே ஸ்ட்ரோக்கில் மூவரையும் தரிசித்தாயிற்று.. வெளியே வந்தாயிற்று..24

எல்லா விஷயங்களும் இப்படித்தான்.. நாம் பார்த்து என்ன முடிவெடுக்கிறோமோ, அது தான் அங்கே நடக்கிறது.. . 
முடியாது நடக்காதென்று முடிவேடுத்தோ மேயா னால் .. அது முடிகிற மாதிரி இருந்தால் கூட  முடியாமலே போய் விடும்..
சத்தியமாக முடியாது என்றாலும் , முடியுமென்று ஓர் முடிவை எடுத்த் விட்டால்  அது முடிந்தே விடும்... 
இதொன்றும் புதுத் தத்துவம் போல தெரியவில்லை.. மிக யதார்த்தமான ஒரு நடைமுறை என்றே எனக்குத் தோன்றுகிறது.. 

ஓர் கூட்டமில்லாத நாளில் இந்தக் கோவில் சென்றிருந்தால் இவ்வளவு தத்துவங்களுக்கு இங்கே  வேலை இல்லை .. எல்லா சாமிகளும் ப்ரீ யாக இருப்பார்கள், நாமும் அப்டியே ஹாயாக தரிசித்து விட்டு வந்திருக்கலாம்... ஆனால் இந்த நம்பிக்கை சம்பந்தமான எந்தக் கண்செப்டுகளும்  உதயமாகி இருக்காது... ஹிஹி..
27

Friday, August 31, 2012

சுயம் ---2

தையும் எழுதாதவர்களுக்குக் கிடைக்கிற அனுபவங்கள், எதையும் எழுதுபவர்களுக்குக் கிடைக்கக் கூடுமென்கிற உத்தரவாதம் இல்லை... ஆகவே, கிடைக்காத அனுபவங்களக் கூட கிடைத்த பாவனையில் கிறுக்கித் தள்ளும் சுபாவம் இயல்பாகவே கொண்டுள்ளனர் எழுதுபவர்கள்..

எழுதுகிற அபிப்ராயமற்ற அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் அனாமதேயமாக அவர்களுள் அமிழ்ந்து அஸ்தமனமாகி விடுகிற அவலம் அன்றாட நிகழ்வாக அவர்களுக்கு... அவை குறித்த கிஞ்சிற்று பிரக்ஞை கூட அற்று அடுத்த அனுபவங்களுக்காக அலைபாய நேர்கிறது அவர்களுக்கு..

ஆனால் வெறுமே இருந்துகொண்டு பற்பல அனுபவங்களை சந்தித்த சாதனையோடு தனது எழுத்துப் பந்தலை எழுப்பி மாய்ந்து போவான் ஓர் தேர்ந்த எழுத்தாளன்..

மேற்சொன்ன மாதிரி அனுபவங்களை மாத்திரம் அன்றாடம் தரிசித்து எழுதுகிற நோக்கமற்று வலம் வருகிற எனது நண்பர் ஒருவர் சொன்னார் என்னிடம்..: "இந்த எழுதுவதென்பது பெரிய மனவியாதி போல.. அதற்கு அடிக்ட் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.. எழுதிக் கொண்டே கிடக்க வேண்டியது தான்... ஏதாவது எழுதாமல் இருந்தாலோ, அந்த நாளே அனாசாரமாகப் போய் விடும் அவர்களுக்கு" என்றாரே பார்க்கலாம்.

எதையேனும் எழுதிக் கிழிக்கிற, கிழித்துக் குவிக்கிற எனக்கே ஒரு வகையான குற்ற உணர்வாகி விட்டது அதனைக் கேட்டு. 
மேற்கொண்டு எழுதித் தான் ஆகவேண்டுமா என்கிற கேள்வி என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டதென்றால் பாருங்களேன்..

இப்படி சமயங்களில் அனர்த்தங்கள் எல்லாம் பெரிய அர்த்தம் கண்டு விடுகிற விபரீதம் எல்லா சம்பவங்களிலும் சகஜமாகி விடக் கூடும்.. 

நல்ல விஷயங்களில் லயிப்பது கூட கெட்டபழக்கம் போல ஓர் மாயையை தோற்றுவிப்பது வேடிக்கையாக உள்ளது.. 
ஆனால் சுலபத்தில் ஓர் நல்லதைக் கெட்டதாக மாற்றுகிற ,மற்றும் கெட்டதை  நல்லதாக மாற்றுகிற வல்லமை வதந்திக்கு உண்டு..

Monday, August 20, 2012

நடைமுறை விபரீதங்கள்..

ஆடி வெள்ளிகளுக்கு அமோக கூட்டம் மொய்த்தன கோவில்களில்... அதுவும் பிரத்யேகமாக அம்மன் கோவில்களில்... மாரியம்மன் கோவில்கள் , பத்ரகாளியம்மன் கோவிலகள் , இத்யாதி இத்யாதி அம்மன்கள்..

புடை சூழ்கிற பெண்களை தரிசிக்க புடை சூழ்கிற ஆண்கள்... அனேக பெண்கள் கற்சிலை அம்மன்களை தரிசிக்கக் குழுமுகையில் , ஆண்களோ நடமாடும் அம்மன்களை தரிசிக்க திரள்கிறார்கள்..

எங்கெங்கிலும் நிகழ்கிற யதார்த்தம் இதுவே என்ற போதிலும் ... என்னவோ ஆண்கள் இனமும் ஆடி வெள்ளி அம்மன்கள் மீது பிரம்மாத அக்கறை செலுத்துவது போன்ற பாவ்லா காட்டினால், அதை நம்புவது அப்பாவி மக்கள் மட்டுமே.

நான் ஓர் ஆணாக இருந்து கொண்டு ஆண்கள் மீது இப்படி ஓர் சாடல் நிகழ்த்துவது நியாயமற்ற செயல் என்றும், இது மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றும் கூக்குரல் எழுப்புகிறவர்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி சிரத்தை உள்ள ஆண்கள் என்று சான்றிதழ் வழங்க முடியும்... இதனை ஆமென்று மெளனமாக ஆமோதித்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கிற சபல மனிதர்களை எனது மனக்கண் முன்பு நான் அனுமானித்துக் கொள்கிறேன்... அவர்கள் நிச்சயம் எனது கருத்துக்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் தரப் போவதில்லை என்பதை என் மனதறியும்..

கோவில்கள் என்று மட்டுமில்லை... எல்லா கும்பல் கூடுகிற பிராந்தியங்களிலும் இதே  கதை தான் என்பதை என்னால் அடித்து சொல்லமுடியும்... இன்னும் சொல்லப் போனால் இப்படி எல்லா பக்கங்களும் கும்பல் திரளக் காரணமே  எதிரினங்களின் வருகை நிமித்தமே.. வேண்டுமானால் ஆண்களுக்கென்று தனியாகவும் பெண்களுக்கென்று தனியாகவும்  எல்லா விஷயங்களிலும் அனுமதிகள் வழங்கட்டும்... தேவையானவர்களும் உண்மையானவர்களுமே அந்த இடத்தில் குழுமக் கூடும்.. தேவையற்ற ஆண்களோ பெண்களோ அங்கே இடம் பெறுவதற்கான வாய்ப்பு  சற்றும் இல்லை என்பதை நான் அழுத்தி சொல்வேன்..

ஆனால் லேடீஸ் ஒன்லி பஸ் என்பதோ ஜென்ட்ஸ் ஒன்லி பஸ் என்பதோ கூட நடைமுறைக்கு சிக்கலான விஷயங்களாகவே இருந்துவருகிறது..

மற்றொன்று... இந்த டூ வீலர் நன்கு ஓட்டிப் பழகி விடுகிற கல்லூரி செல்கிற டீன் ஏஜ்  பெண்கள் ஆகட்டும், ஓர் நடுத்தர வயதுப் பெண்மணி ஆகட்டும், மிக வேகமாக செல்கிறார்கள்... சிலர் சுடி அணிந்து கொண்டு காற்றில் சால் மிதக்கப் பயணிப்பதைப் பார்த்தால், பொறுப்பான எவருக்குமே  ஓர் டென்ஷன் வந்து விடும்... என்ன வேகம் அது ? எதற்கு அந்த வேகம்?.. இது போதாதென்று தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் செல்போனை செருகிக் கொண்டு ஏதோ பேசிய வண்ணம் பயணித்து ஒழுங்கான முறையில் டிரைவ் செய்கிற ஆண்களையும் கீழே சாய்த்து விடுவார்கள்... ஆனால் கடைசியில் தர்மடி வாங்குவது அந்த அப்பாவி ஆணே ...! இவர்களும் தாங்கள் என்னவோ சீராக ஓட்டி வந்தது போலவும் , அந்த ஆள் தான் வேடிக்கை பார்த்துவிட்டு தன மீது இடித்து விட்டதாகப் புகார் கொடுத்து சிக்க விட்டு விடுவார்கள்..

இன்னும் சில பெண்கள்.. வீட்டில் இருக்கிற வரை ஒழுங்காக இருந்திருப்பார்கள்.. இந்த ஸ்கூட்டி ஓட்டிப் பழகியதும், எடுத்துக் கொண்டு எங்காவது ஓர் ஓரமாக ஒதுங்கி  ஒய்யாரமாக மணிக்கணக்கில் எவருடனோ பேசிக் கொண்டிருப்பதை எல்லாருமே பார்த்திருக்கலாம்... அந்தப் பெண்ணுடைய கணவனோ, தனது மனைவி அற்புதமாக வண்டி ஓட்டுவாள், பள்ளி சென்ற குழந்தைகளை நாம் இனி ட்ராப் செய்யத் தேவை இல்லை, என்கிற நிம்மதிப் பெருமூச்சோடு  இருப்பான்... ஆனால் இங்கே அம்மணி தனது நண்பர்களிடம் கடலை போட்டுக் கொண்டு பொழுது ஓட்டுவாள். வண்டியை ஒரு மரத்து நிழலில் நிறுத்தி அதிலே உட்கார்ந்த வண்ணம்..

இந்த அபாண்ட குற்றச்சாட்டை எல்லா அப்பாவிப் பெண்கள் மீதும் திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை...
சிலர் இப்படி சீர் கெட்டுத் திரிகிறார்கள் என்பது நிதர்சன உண்மை என்பதை நல்ல பெண்களே ஆமோதிப்பர் என்று நம்புகிறேன்..

இதே தவறுகளை ஆண்களும் மிக யதார்த்தமாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்... பெண்கள் செய்வது பிரத்யேகமாகத் தெரிகிறது... ஆண்கள் செய்வது , ஓர் பொது இடத்தில் "தம்" அடிப்பது போல போய் விடுகிறது.. பெண்கள் அவ்விதம் புகைத்தால் வினோதமாகத் தெரியுமல்லவா? அந்த மாதிரி..














Saturday, May 26, 2012

டாக்டர் என்கிற வியாதி...


 

கன்சல்டிங்குக் காக ஆசுபத்திரி போயிருந்தேன் ... அதாவது எனது இதயம் சார்ந்த பிரச்சினை குறித்து... E C G  ECHO TMT BLOOD GLUCOSE  என்று எல்லா டெஸ்ட்களையும் எடுத்து ஓர் ஐந்தாயிரத்தை பழுக்க வைத்து விட்டார்கள்..

கையில் ஐநூறு ரூபாய் இருந்தால் கூட பைக்குக்கு நூறு ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுவதற்கு அங்கலாயக்கிற நம்மால் டாக்டரிடம் மட்டும் பேரம் எதுவும் பேச முடியாமல் கேட்டதை அவிழ்க்க வேண்டிய சூழ்நிலையை யோசிக்கையில் ஏனோ பைக்கின் மீது ஓர் பாசமும் கவலையும் கலந்த ஓர் உணர்வு ...

ரஜினி படத்துக்கு கூட முதல் ரெண்டு வாரமோ நாலு வாரமோ தான் கூட்டம் இருக்கும்... இந்த ஆசுபத்திரியிலோ ஒவ்வொரு நாளும் முதல் நாள் ரிலீஸ் ஆன ரஜினி படம் போல தான் பரபரப்பு... 
ரஜினி படத்துக்கு கூட பிளாக்கில் டிக்கட் கிடைத்து விடும்.. இங்கே கொஞ்சம் தாமதம் ஆனாலோ அடுத்த வாரம் வரச்சொல்லி அனுப்பி விடுவார்கள்..

திருப்பதி போலவே எப்போதும் நிரம்பி வழிகிறது ஆஸ்பத்திரி...
கையைத் திருகாமலேயே நோயாளிகளிடம் காசைப் பிடுங்குகிறார்கள் என்பது ஓர் நியாயமான குற்றச்சாட்டு தான் என்ற போதிலும், மனிதர்களுக்குப் பிரச்னை என்று நேர்கையில் வேறு எங்கு தான் தீர்வு கிடைக்கப் போகிறது, இந்த ஆசுபத்திரிகளைத் தவிர??

ஆம்புலன்சு டிரைவர் ,
"எவனாச்சும் அடிபட்டுக் 
கெடக்க மாட்டானா ?"
என்று தனது 
பிசினசை பிக்கப் 
செய்யப் பார்க்க....

செத்துருவான்னு 
தெரிஞ்சாலும் 
பொழைக்க வைக்கப் 
போராடுகிற நடிப்பில் 
சிவாஜிகணேசன் 
தோற்கவேண்டும் 
டாக்டர்களிடம்..

பொழச்சிருவான்னு 
தெரிஞ்சாலோ 
வீ ட்ரை அவர் பெஸ்ட் 
என்று சொல்லி 
தெய்வமாகி விடுவர் 
அதே டாக்டர்கள்..

நீ நகைய அடகு 
வச்சா என்ன 
கொள்ளை அடிச்சா 
என்ன..
பில்லுக்கு பணத்தைக் 
கட்டினா தான் 
அவுரு போராடி 
தோத்துப்போன 
டெட்பாடி நம்ம 
கைக்குக் கெடைக்கும்..

பெஸ்டா அவுரு 
ட்ரை பண்ணி 
பொழச்ச பேஷன்ட் 
திரும்ப வீடு வருவாரு..
இது உன்னோட 
மறு பெறப்புடா ராசா ன்னு 
அழுது வரவேற்கிற 
வெள்ளந்தித் 
தாயைப் பார்த்தால் 
கூட எந்தக் 
குற்ற உணர்வுகளும் 
எந்த டாக்டர்களுக்கும் 
வரவே வராதென்பது 
பயித்திய காரனுக்குக் கூட 
புரிந்த யதார்த்தம்...!!




Saturday, April 7, 2012

தன்னை உணர்ந்தவன் ஞானி..

எழுதி பிராபல்யம் அடைந்து விடலாம் என்கிற கனவு ... அம்புட்டு சுலபமில்லை மச்சீ என்பது போலஉணர ஓர் குறிப்பிட்ட தருணமாகிறது.. உடனடியாக அவ்விதம் உணர்ந்து வெளியேற அநேகமாக எழுதுகிற எவர்க்கும் வாய்ப்பதில்லை...
எப்படியேனும் பிரமாத எழுத்தாளன் ஆகியே விடலாம் என்கிற மாயை போட்டு புரட்டி எடுத்து விட, அவனும் எதையாச்சும் கிறுக்கிக் கிறுக்கித் தள்ள நேர்கிறது...

அப்புறம் ஓர் இழையில் காலம் ... ''என்னா சாரே இன்னும் தெளியலையா?'' ன்னு மௌனமா ஒரு கேள்வி கேக்கறதைப் புரிஞ்சுக்க ... அதுக்கொரு தனி ஞானம் தேவைப் படுகிறது..
அந்தப் பிரத்யேக ஞானம் இருந்தா மட்டுமே மேற்கொண்டு எழுதாம பொட்டாட்ட வெளியேற முடியும்.. இல்லேன்னா, தொடர்ந்து எதனயாச்சும் சலம்பிக்கினே கெடந்து படிக்கிற எல்லாரும் குண்டியில சிரிக்கிறது கூட புரியாம .. பைஜாமா போட்டுட்டு பந்தா பண்ண வேண்டியது தான்..


எழுதறதுல மட்டுமில்ல.. எல்லா விஷயங்களுமே இப்டித்தான்... தனக்கு இது தான் வரும்னு தன்னைப் புரிஞ்சுக்கறதே பெரிய விஷயமா இருக்கு மனுஷங்களுக்கு... புரிஞ்சுக்கிட்ட பிறகு அதிலிருந்து வெளியேறத் தெரியனும் மொதல்ல... அது தெரியாம சும்மா ஒழப்பிக்கிட்டே கெடந்தா..... கூட இருக்கறவங்களும் காறித் துப்பிடுவாங்க... தன்னம்பிக்கையும் ஓஞ்சு தேஞ்சு போயிடும்...

அப்புறம் சாவகாசமா வர்ற ஞானத்தை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாத லெவலுக்கு வயசு வாலிபம் எல்லாம் போயி ..... முதுமையும் சோம்பலும் கபளீகரம் செஞ்சிடும்..உன்னோட சூழ்நிலையை..!!

அப்டித்தான் ரொம்பப்பேருக்கு மிக சுலபமா வாழ்க்கையில நடந்துக்கிட்டே வருது... இதெல்லாம் புரிஞ்சு ""காலத்தே பயிர் செய்"" ""காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"" என்கிற பழமொழிகளுக்கு ஏற்ப நடந்து கொள்கிற சிலரால் மட்டுமே பணம் புகழ் என்று எல்லாமே பெறமுடிகிறது..
பெரும்பாலானவர்கள் தன்னையும் தன் திறன்களையும் அறியாமலே, அல்லது அறிந்துமே கூட அதைப் பிரயோகிக்காமல் , தனக்கு கைவரப்பெறாத விஷயங்களை துஷ்ப்ரயோகம் செய்து ... மண்ணோடு மண்ணாகி விடுகிறார்கள்...


படித்து முடித்து வருகிற மாணவ மாணவிகளைக் கூட அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ற தொழிலை செய்ய அனுமதியுங்கள், .. முதற்கண் படிப்பதைக் கூட பெற்றோராகிய நீங்கள் திணிக்காமல் ,அவர்களின் விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்... 


புதிதாக நான் எதனையும் சொல்லி விடவில்லை. ஏற்கனவே பற்பலரும் அறிவுறுத்திய  ஓர் சாதாரண விஷயத்தையே நானும் இங்கே முன்வைக்கிறேன்...

ஆனால் முன்னர் சொன்ன மாதிரி... தயை கூர்ந்து எவரும் தனது திறன் எதில் என்று தெரியாமல் காலத்தை விரயம் செய்து கொள்ளாதீர்கள்...


அவ்விதமான பல அனுபவங்களுக்கு நான் ஆளானேன் என்பதால் இதனை உங்கள் அனைவரிடமும் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்... நன்றி..




சுந்தரவடிவேலு..




நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...