Showing posts with label காத்திருக்கிற கவிதை.... Show all posts
Showing posts with label காத்திருக்கிற கவிதை.... Show all posts

Wednesday, August 11, 2010

நீள்கிற பட்டியல்கள்..

எப்படி எல்லாம்
வாழ வேண்டும் என்கிற
எனது பால்ய காலப்
பட்டியல்கள் இன்றளவும்        
மறப்பதற்கில்லை....

அனுமாநித்திருந்தவாறு
நடந்திருந்தால் கூட
பட்டியல்கள் மறந்திருக்குமோ
என்னவோ....
எதுவும் நினைத்தது போல
நடை பெறாத காரணத்தால்         
பட்டியல்களின் பதிவு
ஆணித்தரமாயிருக்கிறது..

இட்ட பட்டியல்களைக்
காட்டிலும் மேம்பட்ட விதமாக
வாழ்க்கை அமைந்திருந்தால்
என் அதிர்ஷ்டங்களுக்காகப்
புல்லரித்துப்போயிருக்கலாம்..
என் திறன்கள் மீதாக
தாறு மாறாக மதிப்புகள்
குவிந்திருக்கலாம்...
தகுதியும் புகழும் பொருளாதாரமும்
பிறர் பொறாமை கொண்டு
மூர்ச்சையாகும் சூழல் கூட
ஏற்பட்டிருக்கலாம்...

ஆனாலும் என்ன...
இன்றைக்கும் கூட
நீண்ட பட்டியல்கள் உண்டு...
பால்யகாலப்பட்டியல்கள் போன்ற
சிறுபிள்ளைத்தனங்கள் அற்ற
அறிவுப்பூர்வமான,
மிக நேர்த்தியான பட்டியல்கள்...

இதே மாதிரி எதுவும்
நிறைவேறாமல்
ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும்
என் வயோதிகம்...
அந்த நடுங்குகிற விரல்கள்
கூட அன்றைய சூழலுக்கேற்ற
பட்டியல்களை தயாரித்துக்
கொண்டிருக்கும் ...??

சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...