Showing posts with label KADHAL KAVIDHAI............ Show all posts
Showing posts with label KADHAL KAVIDHAI............ Show all posts

Wednesday, January 6, 2016

தொலைந்தவன் கவிதை..

அழகழகான 
எத்தனையோ 
வார்த்தைகள் .. மற்றும் 
அர்த்தங்கள் உள்ளன.. 

உன்னைக் குறித்து 
ஏதேனும் புனைய 
முனைகையில் 
எல்லாம் .. அவ்வித 
வார்த்தைகளும் 
அர்த்தங்களும் 
நான் தேடாமலே 
என்னை வந்தடையும்...!. 

ஆனால் எங்கு 
தேடினாலும் 
கிடைக்காத 
தொலைவிலும் 
முகவரி தெரியாத 
அநாமதேயத்திலும் 
தொலைந்து போயிருப்பது 
நீ தான்.. அல்லது 
உன்னை த் தொலைத்து 
விட்டு நிற்பது 
நான் தான்....!!

ஒருக்கால் 
நீ  என்னைத் 
தொலைத்து விட்டதாக 
உன் இருப்பிடத்திலிருந்து 
உணரும் பட்சத்தில் 
அதெனக்குத் 
தெரிய வரும் பட்சத்தில்.. 

-நிச்சயம் 
நானே எனக்கு 
அப்போது தான் 
கிடைப்பேன்..
!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...