Showing posts with label கண்டனம்??. Show all posts
Showing posts with label கண்டனம்??. Show all posts

Thursday, August 21, 2014

கண்டனம்??

நமது பலவீனங்களையும் குற்ற உணர்வுகளையும் யதார்த்தமாக "இடுகையில்" இடுகையில் அவைகளை சிலர் ஹாஸ்யமாகவும் ஏளனமாகவும் உணர வாய்ப்பாகி விடுவதை நான் உணருகிறேன்.. 

சிலர் மட்டுமே அதன் வலிகளை , அந்த யதார்த்தங்களில் உள்ள சத்தியங்களை உணர்ந்து சிலிர்க்கிறார்களே அன்றி எல்லாரும் அல்ல.. 

எழுதுகிற எவரும் தனக்கு நேர்ந்த விஷயங்களை தன்னிலைப் படுத்தி எழுதினாலும் அது அவர்களுக்கு மாத்திரமே அன்று.. , எல்லாரையும் எல்லாரது உணர்வுகளையும் தன்னில் இழுத்துக் கொணர்ந்து சேர்த்து தனக்கே தனக்கு நேர்ந்த தொனியில் அபஸ்வரமாக முணகிப் பார்ப்பர் ... 

"என்னடா இவன் இவ்வளவு லஜ்ஜை இல்லாமல் பேடி போன்று இப்படி எல்லாம் பிதற்றுகிறானே !!" என்று அலட்டலாக வெறுப்பாக எரிச்சலாக உணர்வர்.. ஒருக்கால் அவர்களுக்கு அவ்வித அனுபவங்கள் இன்னும் வாழ்வில் நிகழாமல் இருந்திருக்கலாம்.. அல்லது, நிகழ்ந்தும் கூட அது தனக்கு சம்பந்தப் படாத தெனாவெட்டில் அந்தக் கருத்தினை ஆமோதிப்பதை கௌரவப் பிரச்சினை ஆக்கி பீலா விடலாம்.. 

ஆனால், அவ்விதம் நானிடுகிற சில இடுகைகள் சிலருக்குத் தொக்காக புரிபட்டுவிட்டதோ என்று தோன்றுமளவு நடக்க முனைவதாக எனக்குள் ஒரு அனுமானம்.. 

ஸ்வாமி கழுத்துக்குப் போகவேண்டுமென்று தான் பூமாலைகள் புனையப் படுகின்றன.. விதியின் நிமித்தமோ அல்லது சதியின் நிமித்தமோ சமயங்களில்  குரங்குகள் கைகளில் சிக்கி மாலைகள் பிய்த்தெரியப் படுவதைப் பார்க்கையில் சம்பந்தப் படாத பிறர்க்கு எவ்விதம் தோன்றுமோ  அறியேன்.., மாலையைப் புனைந்தவனுக்கு ஒருவித ஆற்றாமை அழுகை யாவும் தவிர்க்க சாத்யப் படாமல் போய் விடுகிறது.. 

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...