Showing posts with label everybody's experiences... Show all posts
Showing posts with label everybody's experiences... Show all posts

Thursday, January 17, 2013

காதலின் சுவடுகள்...

என்னைக் காதல் வசப்படுத்தி பாதித்த எவ்வளவோ பெண்களுக்கு என்னைக் குறித்த தகவல்கள் எந்நாளும் தெரிவிக்கப்பட்டதே இல்லை... ஒருக்கால் எனது காதல் முறையாகத் தெரிவிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் என்னை அணுகி எனது காதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கமுடியும்... பரஸ்பரம் எங்கள் காதல் செவ்வனே பகிர்ந்து கொள்ளப் பட்டிருக்கக்கூடும்..... காதலின் சுவை உணர்ந்தவனாக, நானும் இவ்வுலகில் ஓர் மகோன்னத அனுபவத்தைப் பெற்றவனாக வலம் வந்திருக்கமுடியும்..!

கவைக்குதவாத வெட்கங்களும் மௌனங்களும், நான் சிறந்து விளங்கி இருக்கவேண்டிய எல்லா தளங்களிலும் என்னை வெறுமனே ஒன்றுமற்றவனாக ஆக்கி யாவற்றையும் அனாவசியத்துக்குப் புதைத்து வைத்திருக்க வேண்டிய விபரீதங்களில் எனது வாழ்நாட்கள் கழிந்தும் கரைந்தும் விட்டன...

இனி மேற்கொண்டு செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றுமில்லை என்றானபோதிலும், ஞாபகங்களாக மனசுள் நிழலாடுகிற அந்த வறண்ட பிராந்தியங்களை இங்கே பதிவிறக்கம் செய்வதில் சிறிது ஆசுவாசம் உணரமுடிகிறது... அதன் நிமித்தமே, இந்தக் "குப்பைகொட்டுகிற" காரியம் நடந்தேறுகிறது....!!

இன்னொரு விஷயத்தையும் என்னால் கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை... அதற்கான சாத்தியக் கூறுகள்  நிச்சயம் இல்லை என்று என்னால் அனுமானிக்க முடிகிறதென்ற போதிலும், அதையும் தாண்டி காலம் என்னை அதிசயப் பட வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும் என்கிற ஊர்ஜிதம்  பிடிவாதமாக எனக்குள் வியாபித்துள்ளது.... அதாகப் பட்டது.----

எனது காதலின் தகவல் எப்படி எந்தப் பெண்களுக்கும் தெரிவிக்கப் படாமல் வாய்த்ததோ , அதே அடிப்படையில் அந்தப் பெண்கள் என்னைக் காதலித்த தகவல்களும் அதே மௌனத்தில் உறைந்து தகவலாற்றுப் போய் விட்டிருக்கலாம் என்பதே அது....!
-இந்த அனுமானம் எனது நெஞ்ஜெலும்புக் கூட்டில் பெருமைகளையும் கவலைகளையும் ஒருசேரத் திணித்து வார்த்தைப் படுத்தவியலாத ஓர் உணர்வை  உருவாக்கி கண்களில் நீர் கசிந்து கன்னங்களில் உருண்டோட செய்கின்றன...!!




Friday, November 23, 2012

மனச்சிதறல்கள் ....

எழுதுகிற திராணியே சமயங்களில் அவிழ்ந்து விழுந்துவிட்டது போல ஓர் மனவெறுமை... இன்னதை எழுதலாம் என்கிற சிந்தனைகள் வந்துவந்து போகின்றனவே அன்றி எழுதிக் குவிக்க கைகள் வரக்காணோம்..

சிலநாட்கள் கவிதை எழுதி, அதன் கருத்தை செதுக்கப் பிரயத்தனித்து... அது ஒவ்வாமல் வார்த்தைகளை செதுக்கி... பிற்பாடு எதுவும் எடுபடாதென்று மனசு ஓர் அபிப்ராயத்தை முன்மொழிய எழுதிய யாவற்றையும் அப்புறப் பட்டுத்தியாயிற்று...

அதன் பின்னர் சில கட்டுரை முயற்சிகள்... அவையும் விளங்காதென்று முடிவெடுத்து ... எட்டி உதைத்தாயிற்று..

எதையேனும் எழுதுகிற எவர்க்குமே இப்படி கவிதை கட்டுரைகள் அவ்வபோது காலிடறி கவிழ்ந்து விடச்செய்யும் என்கிற சங்கதி பலமுறை நிகழ்கிற அனுபவங்களே... மற்றவர்களுக்கு எவ்விதமோ அறியேன்., எனதனுபவத்தில் இது நான் எழுதத் துவங்கிய நாள்தொட்டு நிகழ்ந்து வருகிற விஷயம்...

இந்த எனது குறைகளையே கூட பிரத்யேகமான ஓர் விஷயமாக இங்கே வெளிச்சமிட்டுக் காண்பிக்க முயல்கிற என் எழுதும் திறன் பிரயோகிக்கப் படுகிறதா அல்லது துஷ்ப்ரயோகிக்கப் படுகிறதா என்கிற குழப்ப சந்தேகங்கள் என்னில் ஊடாடுகின்றன..


துப்பாக்கி சென்று பார்க்க ஓர் சூழலை உருவாக்க முயல்கிறேன்... நான் விஜய் அஜித் விக்ரம் எவருடைய ரசிகனும் அல்ல... நல்லா நடிச்சா நாயைக் கூட ரசிப்பேன்... ஓவர் ஆக்ட் கொடுத்துக் குளறுபடி செஞ்சா சிவாஜின்னாலும் டென்ஷன் ஆயிடுவேன் ... விஜய்க்காக அல்ல.., ஏழாவது அறிவை இயக்கிய இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் என்பதால்... நடிகர்களுக்காக ஓடி ஓடிப் படம் பார்த்த பிராயங்கள்  ஓடிவிட்டன... இன்றெல்லாம் விஷயமுள்ள டைரக்டர்களையும், உருப்படியான விமரிசனங்களும் உள்ள படங்களையுமே மனம் நாடுகின்றன... எந்த மேதாவி நடிகர்கள் நடித்துள்ள போதிலும் குலவையாக  விமரிசனங்கள் நாறுகையில்.. இலவச டிக்கட் கிடைத்தால் கூட தவிர்த்துவிடுமளவு  பக்குவப் பட்டுக் கிடக்குது மனசு...
-கிட்டத்தட்ட இப்போதைய மனிதர்கள் பலரும் இதே அலைவரிசையில் தான் இருக்கக் கூடுமென்கிற என் தீர்க்கதரிசனம் மெய்யானால் அரசமரப் பிள்ளையாருக்கு ஆயிரத்தெட்டுத்  தேங்காய் போட்டுடைக்கிறேன்... குறைந்தபட்சம் கனவிலாவது..!!

எனது மனைவியும் குழந்தையும் விஜெய் படம் பார்த்தாகவேண்டுமென்று அடம்பிடிப்பது ஒரு காரணமும் கூட... "என்னை விடவா உனக்கு விஜய்?" என்றொரு ஐ.எஸ்.ஐ. பிராண்ட் ஏக்கத்தோடு ஓர் நக்கல் தொனிக்கிற கேள்வி... "இப்படி சந்தேகமா ஒரு கேள்வி எதுக்கு? உங்களைவிடவா விஜய்?" என்கிற நய்யாண்டி  எனது மனைவியினிடத்து  ரசிக்க உகந்த விஷயம்...

இயக்குனர்கள் குறித்த பிரக்ஞையோடு படம் பார்க்கிற பெண்கள் சுஹாசினி மாதிரி விரல்களில் அடக்கம்... மிகப் பல பெண்களும் நடிகர்களின் பாவனைகளில் சிலிர்க்கவே தங்களை அர்ப்பணிக்கின்றனர்..


"தீவாளிக்கு ரிலீசாகி இருக்கிற ஓர் படத்தை குடும்பமாக சென்று பார்க்கிற ஓர் அற்ப விஷயத்தை சமுதாய உணர்வுகளோடு இழைக்க முனைவது மிக வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது " என்கிற அறிவிப்பு வந்துவிடும் , இந்நேரம் நான்  ஓர் பிரபல அரசியல் தலைவனாக இருக்கும் பட்சத்தில்..(?)

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...