Showing posts with label அபிப்பிராயம்... Show all posts
Showing posts with label அபிப்பிராயம்... Show all posts

Monday, November 15, 2010

அநாகரீகமான யதார்த்தங்கள்?.....

என் அற்பத்தனங்களும்
சபலங்களும்
எனது நண்பர்களுக்கு               
மாத்திரமே
பிரத்யேகமானவை...

மனைவியினிடத்து
மிக நாசுக்காகவும்
அற்பத்தனங்களோ
சபலங்களோ சற்றும்
இது வரை வாழ்வில்
அறிமுகமே ஆகாத
தொனியில்....

வார்த்தைகளில் ஆகட்டும்
செய்கைகளில் ஆகட்டும்
சுலபத்தில் விரசங்களை
உட்புகுத்தி தன்னை
மிக கேவலமான
மனிதர்களாக சித்தரிப்பதில்
மனைவி குழந்தைகள் நண்பர்கள்
மற்றும் எந்த நபர்களிடமும்
கிஞ்சிற்றும் வெட்கமே அற்ற
சிலரை நான் அடையாளம்
காண்கிறேன் அனேக சமயங்களில்....

கீழ்த்தரமாக அவர்கள்
புரிபட்டாலும்
யதார்த்தம் தொலையாதவர்கள்
என்றே என்னால் உணரவியல்கிறது...

Tuesday, October 20, 2009

சிலரது மனநிலைகள்..வியப்பூட்டுகின்றன

சில படங்களை நான் பார்த்து விட்டு வருவேன்.. என் மனதிற்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.. எனது நண்பர்களிடமும் அதே ரீதியில் அவர்களும் உணர வேண்டும் என்கிற விதமாக அந்தப்படத்தை சென்று பார்க்கச்சொல்வேன்.. எனது வேண்டுகோளினை ஏற்று சில நண்பர்கள் சென்று வருவார்கள்.. நான் விரும்பியது போலவே அவர்களும் அதனைக்குறித்து விமர்சித்து என் ரசனைகளை அங்கீகரிப்பார்கள்.., நானும் புளகாங்கிதம் அடைய நேரும்..
என் ரசனைகளை அங்கீகரிப்பதும் கூட ஓர் கலைஞனையே ஊக்குவிக்கிற ஓர் தன்மையை எனக்குள் நிகழ்த்தச்செய்வது ஓர் விபரீதமான சந்தோஷம்...

ஆனால் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.. நான் ரசித்தவற்றை எந்தப்பிரமாதமும் இல்லை என்பதாக சொல்லி அதற்குரிய தர்க்கரீதியான விளக்கங்களையும் முன் வைக்கிற நோக்குடன் அதீதப் பிரயத்தனத்துடன் என்னிடம் வாதாடி என்னை அவர்களுடைய கருத்துக்களுக்கு உடன்படச்செய்வதை பெரிய கௌரவப் பிரச்சினையாக்கி முழங்குவார்கள்., நானும் முடிந்த வரை கிண்டி, கிளறி... போய் தொலைகிறது என்று அவர்களுக்கு இணக்கமாக ஆமோதிப்பதை .. தாங்கள் வெற்றி பெற்றதாக உணர்வதைபபார்க்க எனக்கும் ஓர் அல்ப சந்தோஷம்.. நான் தோற்று விட்டதாக இதற்கெல்லாம் கவலைப்படுகிற அறிவீனம் எனக்கில்லை.. ஆனால் என் போல அவர்கள் இல்லை.. அவர்களுக்கு இந்த கவைக்கு உதவாத விஷயத்தில் கூட வெற்றி தேவைப்படுகிறது என்பதோடு தோல்வியை கேவலமாக வேறு நினைப்பார்கள்...

என்னவோ , ஒரு படம் பார்த்தோம், ரசித்தோம், அது குறித்து அபிப்பிராயம் சிறிது பகிர்வோம் என்கிற புத்தி கூட அற்று அதில் ஆழ்ந்து போய் பட்டிமன்றமே நடத்துகிற அளவுக்கு அறிவும் வெறியும் இருப்பதைப்பார்க்கையில் , நம்முடைய ரசனைகள் கூட சற்று மெருகு குறைந்தே காணப்படுகின்றது...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...