
நிராசைகளின்
பேரிரைச்ச்சல்
மனசெங்கிலும்...
ஆசைகளின்
நீண்ட பட்டியலில்
விரல் விட்டு
எண்ணும்படியாக
நிறைவேறிய
சில ஆசைகளெல்லாம்
பிரக்ஞையில் இல்லை...
நிறைவேறாதவற்றின்
மீதாகத் தான்
அபரிமித பிரக்ஞை
குவிந்திருக்கிறது...
--அவைகளின்
அயராத இரைச்சல்களே
என்னை ஒட்டுமொத்த
செவிடாக்கும் வல்லன்மை
கொண்டுள்ளன.
புறமிருந்து தரிசிப்பவர்களுக்கு
எனது அமைதியும் மென்மையும்
எவ்வளவு முரணானவை
என்பதை நானே அறிவேன்...!
உலக ஆசைகளினின்று
விலகி நின்று
பற்றற்று வாழ்தல் வேண்டும்
என்கிற மேன்மையான
சித்தாந்தங்களோடு
வாழ்வைத் துவங்கியதாகவே
கருதுகிறேன்...
ஆனால் நாளடைவில்
எப்படி இப்படி
புறம்போக்குக்கு எல்லாம்
பட்டா தயாரிக்க
மனசு தாவிற்றோ அறியேன்..
அமைதியான குளத்தின்
சிறு சலனத்தையே
சலிப்பாய் உணர்ந்தவன் நான்..
---இன்றைக்கு
எப்படி அவைகளை
சிற்றலைகளாய் ரசிக்கப்
பயிற்றுவிக்கபபட்டேனோ..!?..
---எனக்கே நான்
முரணாகப் புரிபடுகிறேன்..!!
!

சுந்தரவடிவேலு..