Showing posts with label self explanation... Show all posts
Showing posts with label self explanation... Show all posts

Wednesday, May 11, 2016

தலைப்புத் தரவும் வேண்டுமோ?

முன்குறிப்பு: 
தற்கொலைக்கு சமானம் தற்பெருமை என்பதை நன்கறிவேன்.. 
 அதனையும் தாண்டி நம்மை 'சுய' விளக்கங்கள் செய்ய வேண்டிய சூழல் சற்றே சங்கடம் எனிலும், .. வேறு எந்த அஸ்திரம் கொண்டு தான் நம்மை உணர்த்துவதாம்?/
Image result for ego

. கெட்டாலும்
மேன்மக்கள் 
மேன்மக்கள் போல.. 
என் இதயம் 
எத்தனை பலவீனப் 
பட்டபோதிலும் 
உயர் ரக இசையை 
மாத்திரமே அடாது 
ரசிக்க அவா கொள்கிறது.. 

ஒரு டப்பாங்குத்தையோ 
குத்துப் பாட்டினையோ 
கானா பாட்டினையோ
மருந்துக்குக் கூட 
நாடுவதில்லை.. 

என்னையோ  
எனது இதயத்தையோ 
தூக்கி வைத்துக் 
கொண்டாடுகிற 
நோக்கமில்லை இது.. 

சாஸ்வதமில்லாத
இந்த உடலோ இதயமோ 
புகழ் எய்தினும் இகழ் எய்தினும் 
அவை பொருட்டன்று.. 
ஆனால் அவை 
 மேற்கொள்கிற நிலைகளை 
உணர்த்துகிற இந்தத் தன்மை 
ஏனோ எனக்கே 
தற்பெருமை போன்று 
புலனாவது தவிர்ப்பதற்கில்லை.. 

இதயம் அன்று 
கெட்டிப் பட்டுக் கிடந்த காலத்திலும் 
இதே இளகுகிற 
மெழுகுப் பாங்கில் தான் வீற்றிருந்தது என்னில்.. 

இன்று உருகி வழிகிற அழுமூஞ்சி போன்று 
மருந்துண்டு உயிர் பற்றிக் கொண்டிருக்கிற இதயம்.. 
ஈன ஸ்வரம் போன்ற அபஸ்வரத்தில் 
அரற்றிக் கொண்டிருக்கிற இதயம்.. 

நல்லதொரு மெல்லிசை கேட்க வாய்க்கையில்
'நேத்துத் தான் பொறந்த மொசக்குட்டி' போல 
அத்தனை லாவகத்தில் மாறிவிடுவது 
வார்த்தைகள் தொலைந்த மகோன்னதம்.. !!

Image result for ego

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...