Showing posts with label அன்புள்ள அப்பா..... Show all posts
Showing posts with label அன்புள்ள அப்பா..... Show all posts

Saturday, September 20, 2014

அச்சம் மடம் நாணம் ...


என்னுடைய பதின் வயது 
சமயங்களில் .. எமது 
அப்பாவின் பதின் வயது 
சாகசங்கள் என்னிடம் 
பகிர்ந்து கொள்ளப் பட்டன.. 

என்னுடைய வயதில் 
என் தந்தையார் 
பற்பல சாதனைகளை 
நிவர்த்தி செய்ததாக 
எனது பாட்டியும் 
எனது அத்தைமார்களும் 
சொல்வார்கள்.. 

'ஆனால் நான் இன்னும் 
அரைவேக்காடாகவே இருந்து 
வருகிறேன்?' என்று 
அவர்களிடம் கேட்பேன்.. 

ஏழாம் வகுப்புப் படிக்காமலே 
ஆறிலிருந்து எட்டுக்கு 
டபுள் ப்ரமோஷன் ... 
14 ஆம் வயதிலேயே 
நீச்சல் போட்டியில் மெடல் ... 
எஸ்ஸல்ஸி யில் 
ஸ்டேட் பர்ஸ்ட்டுக்கு முயன்று 
மூன்றாவதாக வந்தமைக்காக 
மனமுடைந்து 2 நாட்கள் 
சாப்பிடாமல் இருந்தது .. 
லாங் ஜம்ப் ஹை ஜம்ப் 
கோகோ.. கபடி . கில்லி.. க்ரிக்கட் 
குண்டு பம்பரம் . என்று 
எதை எடுத்தாலும் 
எதிர்த்து விளையாடுகிறவன் 
வாயில் மண்ணைக் கவ்வ 
வேண்டுமாம்.. 

இன்னும் நீள்கிற 
அப்பாவின் பட்டியல் 
எனக்குள் ஒரு தாங்கொணா 
பெருமிதத்தை பரவச் 
செய்தன எனிலும் 
இத்தனை நாசுக்கில் 
25 % கூட எனக்குள் 
இறங்கவில்லை என்கிற 
கொடூர சோகம் 
என்னைப் பிய்ந்து போகச் 
செய்தது.. 

ஏன் அந்த ஜீன் 
எனக்குள் பதியவில்லை 
என்கிற ஆச்சர்ய எரிச்சல் 
எனக்கு.. 

உருவில் மாத்திரமே 
அப்பாவை ஒத்திருந்த என்னை 
என் அப்பாவை நன்கறிந்த 
பற்பலரும் 'நீ வெங்கட் டோட ஸன் தானே?'
என்ற அனுமானக் கேள்வியில் 
நான் 'ஆம்' என்றதும் சிலாகித்துப் போயினர்.. 

பின்னொரு நாளில் 
எனது சந்ததிகளிடம் 
'நான் கேட்கப் படுவேனா இப்படி எல்லாம்?' 
என்கிற வலிமிகு பயங்கள் 
படரத் துவங்குகின்றன 
அனாவசியத்துக்கு.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...