Showing posts with label Little Ideas About This Current Generation... Show all posts
Showing posts with label Little Ideas About This Current Generation... Show all posts

Monday, April 25, 2016

ஆதங்கம்..?

ந்தியாவில் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் எவ்விதமோ யாமறியேன்.. நம்முடைய தமிழகத்தில் "இவ்விதம்" என்கிற கண்க்ளூஷனுக்கு என்னால் வர முடிகிறது என்றே கெஸ் பண்ணுகிறேன்.. அதனை இங்கே சொல்வதற்கு முயல்கிறேன்.. 

ஒட்டிய வயிறு .. ஒற்றைக் காதுக்கொரு கம்மல்.. கண்ட கருமாந்திர பேண்டுகள் இடது வலது மணிக்கட்டுகளில்.. உருப்படியாக மணி பார்க்க ஒரு கைக்கடிகாரம் எவனும் அணிவதாகத் தெரியவில்லை.. அதான் மணி பார்க்க 4 பாக்கெட்டில் குறைந்த பட்சம் 2 அல்லது 3 போன்கள் இருக்கின்றனவே.. மூன்றில் ஒரு ஆண்டிராயிடு நிச்சயம்.. 

வாட்ஸ்-ஏஅப்.. அப்புறம் மெசஞ்சர்.. கன்னாபின்னா இடையறாத ச்சாட்டிங்.. பேஸ் புக்.. ஸ்டேட்டஸ் அப்டேட்.. லைக்ஸ், கமெண்ட்ஸ்.. இளைஞர்கள் ஆகட்டும், இளைஞிகள் ஆகட்டும்.. அந்த விரல்கள் சும்மா செமத்தியாக சடுகுடு ஆடுவதைப் பார்க்கையில், நம்முடைய இயலாமை குறித்து சற்றே வெட்கமுறுவதைத் தவிர்ப்பதற்கில்லை.. 

லோயெர் ஹைய்யரை எல்லாம் ஃ பர்ஸ்ட் கிளாசில் கிழித்திருந்தாலும் .. டைப் இன்ஸ்டிடியூட் பக்கமே தலைவைத்துப் படுத்திராத அவர்களது நர்த்தனம் கவனிக்கையில் ஆச்சர்யம்  சும்மா அசத்தி விடுகிறது நம்ம ஜெனெரேஷனை..!

அவர்களது கோதாவிலே என்ன தான் நம்மை  நிறுத்திப் பார்க்க கற்பனை, ஆசை பீரிட்டாலும் அதென்ன அவ்ளோ பாஸிபிலா என்ன? அப்படி நின்று தொப்பையை அறுத்தெறிந்து கடுக்கன் ஒன்றை இடது காதில் மாட்டி இக்காலப் பெண்டிரை இம்சிக்க ஒரு உத்வேகம் பிறப்பதும், அந்த மாயைகளினின்று 'பொளேர்' என்று பிய்ந்து இந்த சாக்ஷாத் 'கிழப் பிராயம்' ஸ்மரணைக்கு ஏறுகையில் ஒரு ஏமாற்ற சூடு மண்டை எங்கும் பரவி இயலாமையின் பிடியில் சிக்குண்டு சின்னபின்னமாகிறோம்.. 

ஆனாலும் அப்படி என்ன பொறாமைப் படும் படியாகவா  இருக்கிறது இந்த ஜெனெரேஷன் ?.. நம்காலமே  பொற்காலம் போன்றும், இன்றைய இவர்களின் உலகமெல்லாம் ஒன்றுமற்ற டுபாக்கூர் என்று ஒரே அடியாக  பழித்துக்  கொண்டு வெளியேறுவதும் சுலபமாகிறதா என்ன.. ! அதுவுமில்லை.. 
என்ன இழவானாலும் இன்று பிரபலமாகி இருக்கிற இந்தப் போக்கினுள் நம்மையும் எப்படியாவது  இழைத்துக் கொள்கிற பிரயத்தனம் நம்மையும் மீறி நமது பிரக்ஞையில்  சிலிர்ப்பு மூட்டிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.. ?

பொற்காலம் என்று பிதற்றப் படுகிற நமது  காலத்தினுள் நுழைகிற சிந்தனைகளும்  நமக்கெல்லாம்  நமுத்துப் போய் விட்டதென்றே தோன்றுகிறது.. 
இவர்களது உலகினுள் நுழைந்து  நியூ வெர்ஷனாக நிகழ்காலத்தினை தரிசிக்கவே  அரும்பாடு படுகின்றன நமது ஊன்றுகோல்களும் சாளேஸ்வரக் கண்ணாடிகளும். !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...