Showing posts with label ???. Show all posts
Showing posts with label ???. Show all posts

Monday, May 25, 2015

நானும் அசிங்கங்களும்..

அசிங்கங்களினின்று
தூரம் விலகி இருந்தேன்..
பிறகு அவைகளின்
அருகாமை தவிர்க்க
சாத்தியமற்றுப் போயிற்று..

அதன்பிறகு
அசிங்கங்கள் என்னுள்
ஐக்கியமாகின.. அல்லது
அவைகளுள் நான்..

எனக்கும் அசிங்கங்களுக்குமான
அத்யந்த பந்தம்
அறுபடும் சாத்தியக் கூறுகளே அற்று
நங்கூரப் பாய்ச்சலாய்
பிடிபட்டுக் கிடக்கின்றன..

அருவருத்து முகம் சுழித்து
காறியுமிழும் தரத்தில்
அசிங்கங்கள் ஒரு பிராயத்தில்
தென்பட்டன எனக்கு..

ஆரத் தழுவி ஆலிங்கணம்
நிகழ்கிற  இந்த சூழல்
எனக்கே பிரம்மிப்பு..

பிற்பாடான ஒரு தருவாயில் ..
அதே அனாச்சாரமாக
அசிங்கங்கள் புலனாகத் துவங்கிற்று..

மறுபடி அதனைப்
பிய்த்தெறிகிற முஸ்த்தீபு என்னிடம்..
ஆனால் பெயர்க்க அடம்பிடிக்கிற
சக்களத்தி போல ..
அசிங்கங்கள் என்னில்
கோலோச்சவே
பிரயத்தனித்தன .. !!

முடி நகம் போன்று
சுலபத்தில் கத்தரித்து விட்டு
விடுபடலாம் என்கிற எனது
தப்புக் கணக்கை ..
கேலியாகப் புன்னகைத்தன
அசிங்கங்கள்..
எனது அடியாழ வேராக
ஊடுருவிக் கிடந்தன அவைகள்..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...