Showing posts with label pUDHU kAVIDHAI. Show all posts
Showing posts with label pUDHU kAVIDHAI. Show all posts

Sunday, August 21, 2016

இறுகி விட்டதடி....!

தட்டூசியால்
முத்த நூல் கோர்த்து 
என் கிழிந்த 
காதலைத் தைக்க 
வந்த தையல் நீ.. 

கிழித்தது நீ என்கிற 
குற்ற உணர்வில் தான் 
தைக்கவும் வந்தாயோ?

மேற்கொண்டு பிய்ந்து 
போகிற சாத்யங்களற்று 
உமது தையல் கெட்டிப்
பட்டிருக்கிறது.. 

இற்றுதிர்ந்து போய் 
விடுமோ என்றிருந்த 
எம் காதல் இப்போது 
இறுகி விட்டதடி.. 

காறி உமிழ்கையில் 
அசூயை கொள்ளச் செய்கிற 
உதட்டெச்சில்---
முத்தப் பரிமாறல்களாக 
பரிணமிக்கையில் 
அமிர்தமெனத் திரிந்து விடுவது 
காதல் அமிலத்தின் 
மர்ம ரசாயன மாற்றமென்று
கொள்வோமாக.. !!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...