Showing posts with label சுய பரிசோதனை. Show all posts
Showing posts with label சுய பரிசோதனை. Show all posts

Tuesday, April 6, 2010

பார்ப்போம்.. மேற்கொண்டு ..

அவ்வப்போது நாலாந்தரமாக என் எழுத்துக்களும் கருத்துக்களும் அமைந்து விடுவதுண்டு.... நாகரீகமாக சொல்லப்பட வேண்டிய ஓர் விஷயத்தை சேரப்பியது போல நாறி விடுகிறது என் தொனிகள்... அது எனக்கே தர்மசங்கடங்களையும் சற்று குற்ற உணர்வுகளையும் ஏற்படுத்தி விடுவதுண்டு...
எழுத்துக்கள் செயல்கள் யாவற்றிலுமே ஓர் மேன்மையை மென்மையை தெளிவை முன்னிறுத்த வேண்டும் என்கிற தீராத தாகம் கொண்டவன் என்ற போதிலும் என்னையும் மீறி உணர்ச்சிக்கு அடிமையாகி சண்டக்கோழி போல உளறி கிளறி கொட்டி விட வேண்டிய தன்மைக்கு இலக்காகி விடுகிறேன்...

இந்த எனது போக்கினை மாற்றி ஓர் நேர்மையான எழுத்தாளன் ஆகி விட ஆசை என்ற போதிலும், செய்முறைக்கு சாத்யமற்றுத்தான் போகும் என்று அனுமானிக்கிறேன்...
சொல்ல வருவதில் நேர்மையும் தெளிவும் வீரியமும் கருத்துக்களும் அடங்கி இருப்பது தான் ஓர் நல்ல எழுத்தாளனின் சீரிய அடையாளம்.., அல்லாமல் கத்துக்குட்டி போல நினைத்ததை எல்லாம் விவஸ்தைகள்  அற்று , யதார்த்தம் என்று நினைத்து கிறுக்கிக் கொண்டிருப்போமேயானால்  அதற்குரிய அவமானங்களை  சந்திக்கவும் தயார்நிலையில் இருக்க வேண்டியது தான்..

பார்ப்போம்.. மேற்கொண்டு ..   சுய பரிசோதனை

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...