Showing posts with label அனுபவங்கள்... Show all posts
Showing posts with label அனுபவங்கள்... Show all posts

Tuesday, August 28, 2012

சுயம் - 1

சுயம் என்கிற தலைப்பில் எனது நிலைப்பாடு குறித்து அவ்வப்போது ரெண்டொரு பக்கம் கிறுக்கி விடலாம் என்றொரு ஆசை..

ஏனெனில் எனது மனப்பான்மை இன்னதென்கிற தெளிவு எனக்கே இன்னும் பிடிபடாத புதிராக என்னில் ஊடுருவிக் கிடக்கிறது.. இந்த சுயம் என்கிற தளத்தில் எனது சரிதத்தை நான் திணிக்க முயல்கையில், என்னுடைய மன அரிப்புக்களும், என்னுடைய அபிப்ராயங்களும் வெளியேறுவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்.. நன்றி..

நான் பலவீன எழுத்தாளன்?

ழுதுகிற அநேகம் பேர்கள் இப்படித்தானா?..
ஏதேனும் எழுத முற்படுகயிலும் கூட , இன்னது எழுதலாம் என்கிற கரு'வற்று வெறுமே எழுதத்துவங்கி பிற்பாடு, போகிற போக்கில் அசந்தர்ப்பமாக பிடிபடுகிற கரு'வைத் திணித்து, என்னவோ பல மாதங்கள் நெஞ்சினுள் சுமந்து, எழுத்தில் இப்போது தான் இறக்கி வைக்கிற பாவனையில்...
----மற்ற எழுதுகிற நபர்கள் எவ்விதமோ அறியேன், நான் எண்பது தொண்ணூறு சதவிகிதம் எழுதுகிற லட்சணம் இப்படி மட்டுமே தான்..!!

-இந்த திடீர் பாய்ச்சலில் ஓர் மேன்மையும் ஆற்றலும் ஓர் விபத்தாகக் கூட தென்படுகிற சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது பதிலற்ற கேள்வி தான்..

-இதையும் தாண்டி சிற்சிலர் புகழ்வதை ஏற்றுப் புளகித்து ஓர் மெல்லிய குற்ற உணர்விலும் என் இதயம் மிதக்க  நேர்வதுண்டு..
-
முன்னர் நான் சொன்னது போல -சில சதவிகிதங்கள் மாத்திரமே- நெடு நாட்கள் மனசுக்குள் சுமந்த விஷயங்களை எழுத்தில் இறக்கி வைக்கப் பிரயத்தனிக்கையில் ... மனசுள் படிந்துள்ள அந்த கெட்டித் தன்மை, அந்த இலக்கிய வீச்சு,  - பிரசவமாகிற என் எழுத்துக்களில் மிளிராதது என் எழுதுகிற திறனை  என்னையே சந்தேகப் பட வைக்கிற சமாச்சாரமாகும்..
போகிற போக்கில் தென்பட்டு எழுதகிற விஷயங்களின் வீரியம் கூட, திட்டமிட்டு எழுப்புகிற சம்பவங்களுள் படியாதது  எனது எழுதுகிற திறனிலுள்ள  ஓர் நீர்த்த தன்மையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கக் கூடும்..?...

நன்றி..  

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...