Showing posts with label new year kavidhai... Show all posts
Showing posts with label new year kavidhai... Show all posts

Tuesday, December 31, 2013

புத்தாண்டுகள்.

ழுவுகிற
ஒவ்வொரு
வருடமும்
தூண்டிலில் சிக்காத
மீன் போல..
அல்லது சிக்கி
பிற்பாடு
நழுவுவது போல..

1999 நழுவி
2000 வந்த போது
என்னவோ
அதீதமாகப் பட்டது..
அந்த வருடம்
பிரத்யேகமாக
எல்லாராலும்
வரவேற்ற சூழல்
இன்னும் ஞாபகத்தில்.. !!




காலங்கள் நெடுகிலும்
பிரவகிக்கிற  மாயைகள்..
டிசம்பர் 31 இரவின்
அந்தப் பிரத்யேக
உணர்வுகள் ...

என்றோ ஓர் பிராயத்தில்
பிரம்மாதப் பட்ட அந்த
லயம் இன்னும்
மனவெளியில்...

அன்றைய நமது லயத்தில்
இன்றும் உணர்ந்து
குதூகலிக்கிற
பதின் வயதினர்
சுவாரஸ்யங்களை
அடையாளம் காணாமலில்லை ..!

நம் போலவே
அவர்களும் எதுவுமற்ற
ஓர் வெறுமை ஜனவரி 1-ஐ
சந்திக்கிற தருணத்தை
தரிசிக்கிற காலம்
நமக்கு வரலாம்..

.அவர்கள் நடுவயதிலும்
நாம் மூப்பிலும்
தொங்கிக் கொண்டிருக்கிற
ஷணம் அது..!!

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...