எந்த தருவாயிலும்
உன்னை இனி நினைப்பதில்லை
என்கிற தீவிர முடிவை
எடுக்க செய்தது
உன் உதாசீனம்..
உன் உதாசீனம்
ஆரம்பம் முதலே
நிகழ்கிறது என்றபோதிலும்
ஏதேனும் ஒரு தருணத்தில்
அது மாறுபட்டு
என் மீதான காதலாக
உருவெடுக்கும் என்கிற
எனது அனுமானத்திற்கு
நேற்றோடு கெடு முடிந்து விட்டது...
இந்த தோல்வி
எதிர்பார்த்தது தான்
என்ற போதிலும்..
வெற்றியுமே கூட
எதிர்பார்க்கப்பட்டது தான்...
-வெற்றி பெறுகிற
பட்சத்தில்
நல்லதொரு விருந்து
வைப்பதாக என் நண்பர்களிடம்
நான் உறுதியளித்திருந்தேன்...
--பிற்பாடு
என் தோல்வியை நான்
மாத்திரம் கொண்டாட நேர்கிறது
ஊரின் ஓரத்தில்
இருக்கிற டாஸ்மாக்கில்...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Showing posts with label dubaakkoor kavidhai.... Show all posts
Showing posts with label dubaakkoor kavidhai.... Show all posts
Saturday, August 7, 2010
Subscribe to:
Posts (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...