Showing posts with label acid poem... Show all posts
Showing posts with label acid poem... Show all posts

Saturday, January 4, 2014

அமிலம் வீசும் காதலன்..



 உன் மீது
அமிலம் வீசுகிற
உத்தேசத்தில் உள்ளேன்..

என்னைக் காதலிக்கிற
உத்தேசம் உனக்கில்லை
என்ற போதிலும்
எனது காதலை
வரவேற்கிற நாகரீகம்
உமக்கில்லாதது
பெருந்துயர் எனக்கு..!

அந்த வலி
என்னை இப்படி
ஓர் தீர்மானத்தில்
வைத்துவிடத்
துணிந்து விட்டது.. !!

செய்தித் தாள்கள்
என்னைக் கிழிக்கக்
கூடும்..
சமுதாயம் என்
மீது மிதியடி வீசும்..
சட்டம் காறியுமிழும்..
தகாத தண்டனை
கொடுத்து என்னை
சிறையினுள் தள்ளும்..!

உன்னால் நான்
படுகிற உதாசீனத்தைக்
காட்டிலும் இவை எல்லாம்
ஒன்றும் பெரிய தண்டனை
அல்ல எனக்கு..

உமது நிராகரிப்பென்கிற
மறுதலிப்பென்கிற
அமிலங்களைக் காட்டிலும்
அப்படி ஒன்றும்
வீரியமானவைகள் அல்ல
உன் முகத்தின் மீது
நான் வீச இருப்பது..!!

நீ வீசிய அமிலங்களில்
உருக்குலைந்து காணாமற்
போன எனது இதயம்..
அதே விதமாக
உன்னையும் காணாமற்
போகச் செய்யவே துடிக்கிறது
இன்னும்..

அடுத்த நாள்
நான் காவல் நிலையத்தில்
சரணடைந்து விட்டேன்..
"வெளியே இருந்தால் 
நான் ஓர் அழகிய பெண்ணை 
ரணகளப் படுத்திவிடுவேன்.. 
அந்தப் பூ முகத்தை 
என்னிடம் இல்லாத அந்த 
இதயம் காயப் படுத்தக் கூடும்..
ஆகவே முன்னெச்சரிக்கையாக 
கைது செய்து விடுங்கள் !"
என்கிற ஓர் விண்ணப்பத்தோடு..!!

ஈ பீ கோ .. ஏதோ ஓர் எண்
கொண்ட செக்க்ஷனில்
இதுவும் ஓர் குற்றமாகக்
கருதியே  விசாரிக்கப் படலாம்..!

என்ன வேண்டுமானாலும்
ஆகட்டும்..

எனக்கு .......

உனது முகம் எப்படியோ
என்னிடமிருந்து
காப்பாற்றப் படவேண்டும்.. !!!


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...