Showing posts with label name and fame.... Show all posts
Showing posts with label name and fame.... Show all posts

Thursday, November 19, 2015

பிரபல அநாமதேயம் .......

 வள்ளுவன் காந்தி  பாரதி போன்றவர்களின் திறன்கள் எம்மைக் கவர்ந்ததை விட அதீதம் அவர்களின் அழியாப் புகழ் எனக்குள் ஓர் மகோன்னதக் கிறக்கத்தை நிகழ்த்தச் செய்துள்ள நிதர்சன உண்மையை சொல்லிக் கொள்ள அவா கொள்கிறேன்..

தோன்றின் புகழொடு தோன்றுக.. அல்லவெனில் தோன்றாதிருத்தல் உத்தமம் என்கிற வள்ளுவன் குறளே கூட ஒன்றுண்டு..

ஒரு பிராயத்தில் எனக்கென இந்தப் பிரபஞ்சம் வரிந்து கட்டிக் கொண்டு அதையும் இதையும் செய்யத் தான் போகிறது என்கிற அடாத நம்பிக்கையில் கழிந்திருப்பதை இன்று அசைபோடுகிறேன்..

அவ்வாறான "புகழ் தாக"த் தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை, எம்மை அற்புதமாக இயக்கவல்ல க்ரியா ஹூக்கிகளாக எம்மில் வீற்றிருந்தன..

ஆனால் சற்றும் நான் எதிர்பாராமல் ஒரு தருவாயில் நான் புகழற்ற சாதாரணப் பனாதியாக நேர்ந்தது.. அந்த சுடும் உண்மை என் மனசுக்குள் தீக்காயங்கள் ஏற்படுத்தின.. ஆறா ரணமாக மிக நெடிய காலங்கள் சீழ் பிடித்து  வலி உண்டு பண்ணிற்று..

ஆனால் காலம் அனைத்தையும் ஆற்றும் வல்லமை கொண்டது.. அந்த ரணங்கள் சொஸ்தம் அடைந்தன.. தழும்புகள் கூட அற்று காயமாற்றின.. சாகக் கிடந்தவனுக்கு ஊதும் முஸ்தீபில் கிடந்த சங்கு, பிற்பாடு சாகக் கிடந்தவனே எழுந்து 'தம்' பிடித்து ஊதுவதற்கு உதவிற்று..

ஆக , எமது அனாமதேயம் பிரபலமாயிற்று.. சீந்துவாரற்று ரோட்டில் நடக்கிறேன்.. கைகுலுக்கும் தொந்தரவில்லை, ஆட்டோகிராப் அவஸ்தை இல்லை, நான் இன்னார் என்று எவரும் என்னை அறிமுகப்  படுத்துகிற இம்சை இல்லை.

இந்த சுதந்திரம் ஆசுவாசமாக இருக்கிறது.. இதுவே நிறைவு வரை நீடித்தால் போதும்  என்கிற அவா வந்துவிட்டது..

எனக்கிருக்கிற கிஞ்சிற்று 'ஓவியம் வரைகிற'  திறனைக் கொண்டு என்னை நான் புதுவிதமாக வரைய ஆசைப் பட்டு உருமால் கட்டிய மண்டையோடு முறுக்கிய மீசையும், நீண்ட தாடியும் விட்டிருப்பதாக கற்பனை செய்து தத்ரூபமாக வரைந்து முடித்த திருப்தியில் எனது மகளிடத்துக் காண்பித்தேன்..

"பாரதி தாடி வளர்த்த மாதிரி இருக்கு.. அப்புறம், வள்ளுவன் உருமால் கட்டிய மாதிரி  இருக்கு" என்கிறாள்..


நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...