Showing posts with label அபிப்ராயம்... Show all posts
Showing posts with label அபிப்ராயம்... Show all posts

Thursday, November 8, 2012

அவசரக்காரர்கள்..

பரபரவென்று எதற்கெடுத்தாலும் சிலர் பதட்டப் படுவதைப் பார்க்கையில் என்னுள் அவர்கள் மீது ஓர் இனம்புரியா வெறுப்பு... எதற்கிந்த அவதி?.. அப்படி என்ன வாரிக் கட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் இவர்கள் என்கிற எரிச்சல்...

இவர்களுக்கும் ரத்தக் கொதிப்பை கன்னாபின்னாவென்று ஏற்றிக் கொண்டு இவர்களை  சார்ந்த சாதுக்களையும் ஒருவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி.... இப்படியான நபர்களை நாம் சம்பந்தப் படாமல் புறமிருந்து வேடிக்கை பார்ப்பது தான் நமக்கு புத்திசாலித்தனம்... அல்லாமல் இவர்களை சார்ந்து நாம் ஏதேனும் காரியம் நிறைவேற்றவேண்டிய சூழல்கள் உருவாகுமாயின் அது நமது மிகப் பெரிய துரதிர்ஷ்டமென்றே கொள்ளவேண்டும்..

அவசரம் ஆத்திரம் ஒரு மனிதனுக்கு அறவே அனாவசியம் என்று வாதிக்க நான் இங்கே வரவில்லை.. தேவைகள் கருதி, அவ்விதம் நடந்தால் அது ரசிக்க உகந்த விஷயம்... அதுவன்றி ஒன்றுமில்லாத கவைக்குதவாத அற்ப விஷயங்களுக்கெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டு, படுத்தி.., களேபரமாகி, ஆக்கி... 


இவர்களை ஒருவிதமான சைக்கோ என்று தான் சொல்லவேண்டுமே தவிர சுறுசுறுப்பானவர்கள், வேலையை கச்சிதமாக  உடனடியாக நிறைவேற்றுகிற அசாதாரண நபர்கள் என்று வர்ணிப்பது இந்த முட்டாள் தனத்தை நாமே ஊக்குவிப்பது  போலாகும்... 


காலை பத்துமணி பரீட்சைக்கு அதே காலை ஒன்பதேமுக்காலுக்கு அவதிப் படுவதில் ஓர் அர்த்தமிருக்கிறது... ஆனால் ராத்திரி ஒன்பதேமுக்காலுக்கு இருந்து அவதிப் பட்டால் என்னவென்று சொல்வது?


பதறாத காரியம் சிதறாது, நிறைகுடம் தளும்பாது, சட்டியில் இல்லாமல் அகப்பையில் வராது.. என்றெல்லாம் எத்தனை தத்துவார்த்தமாக இவர்களுக்கு விளக்க முயன்றாலும்  தனது தன்மையிலிருந்து வெளிவருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.. 


இப்படியான நபர்கள் அமைதியாக இருப்பதையே அநாகரீகமாக உணர்பவர்கள்... பதட்டமில்லாமல் பக்குவமாக ஒன்றை செய்துமுடிப்பதை கேவலமாகக் கருதுபவர்கள்... 


பாம்பாட்டி பாம்பு கொத்தித்தான் சாவான் என்பது போல, இவர்களது பதட்டமே இவர்களுக்கு  எமனாகி விடும் ஓர் தருணத்தில்... ஆனால் என்ன கொடுமை என்றால், அதனை உணர்கிற ஓர் சந்தர்ப்பத்தைக் கூட இவர்களுக்கு வழங்க காலத்திற்குப் பொறுமை இருப்பதில்லை... 


இன்னும் என்னென்னவோ இவர்கள் குறித்து சொல்ல அசைபோடுகிறது எனது மனநாக்கு... பார்ப்போம், அவ்வப்போது கிடைக்கிற சந்துகளில் எல்லாம் இவர்களது சிந்தினைப்  பாட முயல்வோம்...

Friday, October 5, 2012

கொடிகள் கிழிவதில்லை ....

Indian Stock Market Shares
Indian Stock Market Shares


Indian Stock Market SharesIndian Stock Market Shares
Indian Stock Market Shares
மற்ற நாடுகளோடு நமது இந்தியாவை அவ்வப்போது ஒப்பீடு செய்து ஓர் மௌனமான குற்ற உணர்வில் மனதை நனைய விடுகிற அனுபவம் இந்த தேசத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்தான ஓர் அனுபவமென்றே கருதுகிறேன்...
Indian Stock Market Shares
ஆனாலும் இந்த மூவர்ணக் கொடி கண்டு மனசுள் எழுகிற பரவச உணர்வை எந்த இந்தியனாலும் புறக்கணிக்க முடியாது...

உலகத்தில் உள்ள அனைத்த நாடுகளின் கொடிகளும் அந்தந்த நாட்டு மக்களின் மனதுள் ஓர் மிகப் பெரும் ஆளுமை செய்த வண்ணம் பறந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
Indian Stock Market Shares
நாம் இங்கே நமக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்வதில் தான் ஓர் உன்னதம் பொதிந்துள்ளதாக உணர்கிறோம்..

ரத்தம் ஒரே நிறம், எல்லா மக்களும் ஒரே இனம், நாம் எல்லாரும் சகோதர சகோதரிகள், என்றெல்லாம் வீராவேசத்தோடு பல முழக்கங்களை கிளப்பினாலும், காற்றிலே பறக்கிற கொடியைக் கூட வேறுபடுத்தி அடையாளம் காண்பிப்பதில் தான் .. பேதங்களின் மீதாக மனிதனுக்குள்ள இயல்பான ரகசியமான காதல்  பகிரங்கப்படுகிறது..

வானம் மாதிரி ஒரே அடையாளம் எவருக்கும் சுவாரஸ்யப் படுவதில்லை... பிறை மாதிரி, பௌர்ணமி மாதிரி, உதயசூரியன் மாதிரி, அஸ்தமன சூரியன் மாதிரி, நட்சத்திரங்கள் மாதிரி, முகில்கள் மாதிரி,வானவில் மாதிரி...இப்படி பல வகையறா அடையாளங்களை அலசுவது தான் அவனது ரசனைக்கான பெருந்தீனி... இதனையெல்லாம் விடுத்து ஓர் சாவகாச தருணத்தில் வானத்தை மட்டுமே ஏகாந்தமாக ரசிக்கிற பாங்கும் மனிதன் வசம் உண்டு..! அந்த ஓர் தன்மையின் போதில் தான் அவனது பிரக்ஞை சமத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறது... பிறகு அவனையும் அறியாமல் பாகுபடுத்துகிற பந்தாட்டம் அவனுள் புகுந்து அதற்குமிதற்குமாக விளையாடத் தூண்டுகிறது.

இவன் கத்திக் கதறித் தான் இனி இந்தியாவே வாழப் போவது போல.. , "இந்தியா வாழ்க".. "வாழிய பாரதம்".. "வாழ்க இந்தியா.. வளர்க அதன் புகழ்" என்றெல்லாம் அரற்றித் தீர்ப்பதில் அவனது தேசபக்தி பூர்த்தியாகிறது அவனுள்...
-பிடித்த கொடியை விடாமல் இருப்பதும், கொடியைக் காப்பதும்,.. கொடிகாத்த குமரன் போல கொடிநாட்ட முயல்வதும்...

ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் கொடிகளைத் தவிர எல்லாமே கிழிந்து விடுகின்றன... ஆனால் கிழிந்துவிடுகிற பலவீனத்தில் இருப்பது போல தெரிவதென்னவோ கொடிகள் மாத்திரமே..!!













Friday, August 3, 2012

உங்களுக்கும் இப்படி எல்லாம் தோன்றுமா?

நூறு கமெண்ட்ஸ் வந்துவிட்டதே பரவாயில்லையே என்று வியந்து அந்த நபருடைய கமெண்ட்ஸ் column த்தைப் பார்த்தால் நூற்றுக்கு எண்பத்தாறு கமெண்ட்ஸ் அந்த நபரே பிதற்றியிருப்பார்... பார்க்கவே இசி மிதித்த உணர்வை மனசுள் பரப்பும்... இது என்ன மானம்கெட்ட தனம் என்று அரற்றும்... ஆனால் இப்போது எனக்கே அது நிகழ்ந்தது போல ஓர் அசூயைக் கிளர்கிறது... ஆம்.., ஓர் சிறு கவிதைக்கு பிரசுரமாகி இருக்கிற எட்டுக் கமென்ட்டில் என்னுடையதே மூன்று நான்கு இருக்கிறது..., வெறுமனே நன்றி நவிலல் கமெண்டில் சேர்ந்து விடுகிறது... ஆனால் நம்மை மனதாரப் பாராட்டிய ஒரு மனிதனுக்கு நன்றி தெரிவிக்கிற ஓர் சாதாரண தன்மை கூட இல்லை என்றால் பிளாக் எல்லாம் எதற்கு எழுதணும் என்கிற கேள்வி மனசுள்...

புகழ் எனக்கு இஷ்டம் எனிலும் , அது குப்பை போல குவிய வேண்டுமென்கிற பேராசை இல்லை... ரெண்டொருவர் என்னை அங்கீகரிக்கிற சந்தோஷமே அலாதி எனக்கு...
மற்றொன்றையும் தெரிவிக்க விரும்புகிறேன்... இந்தக் காலப் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீதாக வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கைகளும், தங்கள் வாரிசுகள் பல துறைகளில் பிரம்மாதமாக, பிரம்மாண்டமாக ஜொலிக்க வேண்டுமென்கிற பேரவா பரவலாக இன்று எல்லார் வசமும் ஓர் மனவியாதி போல வியாபித்து விட்டிருக்கிறது..

விஜய் டிவி யில் குழந்தைகள் பாடுகிற நிகழ்வுகளைப் பார்க்கிறேன்... மிக நேர்த்தியாகப் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் குழந்தைகள்... அவர்களது திறன்களைத் தீர்மானிக்க தலைமை வகிக்கிற பிரபலப் பாடகர்கள்.. அந்தப் பாடுகிற குழந்தைகளை , அவர்களது பாடுகிற திறமைகளை விலாவாரியாகப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.., மேற்கொண்டு எவ்விதம் அவர்களது திறன்களை பிரகாசிக்கச் செய்வதென்கிற டிப்ஸ் கொடுக்கிறார்கள்.., ஆனால் அப்போதைக்கு அவர்களுக்கு அங்கீகாரம் தாற்காலிகமாக மறுக்கப் படுகிறது... அதனை ஏற்க மனதற்று அந்தக் குழந்தை தேம்பித் தேம்பி அழுகிறது... அவர்களது பெற்றோரின் முகங்களும் தற்கொலைக்கு முயல்பவர்களின் பாவனையோடு இம்சை காண்பிக்கிறார்கள் முகங்களில்..

அந்தப் பிரபல பாடகர்களின் அபிப்ராயங்களும் சாடுதல்களும் தங்களுக்கு ஓர் திருத்திக் கொள்கிற சந்தர்ப்பமாக ஏற்கப் படவேண்டுமேயன்றி, மிகக் கேவலப்பட்டு விட்டது போலவும் மேற்கொண்டு இந்த வாழ்க்கையே வாழத் தகுதியற்றது போலவும் எதற்கு ஓர் சீன் போட்டுக் காட்ட வேண்டும் அந்த விஜய் டிவி காமெராக்கள்? இதையெல்லாம் வர்ணித்து ஓர் சோக உரை ... அதனூடே ஓர் தந்தி அறுபட்ட சோபை இழந்த இசை... 

இப்படியெல்லாம் சூழல்களை சிருஷ்டித்து என்னத்தை சாதித்துக் கிழிக்கப் போகிறார்கள் இவர்கள் எல்லாரும்?, அதாகப் பட்டது, இதனைத் தொகுக்கிற நிகழ்ச்சித் தொகுப்பாளர், மத்யஸ்தம் செய்கிற பிரபலப் பாடகர்கள்... குழந்தைகள் இப்போதே சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்கிற தாகம் தொனிக்கிற பேராசைப் பெற்றோர்கள்.. இன்னபிற இவை சார்ந்த கலைஞர்கள்.. எல்லாரும்?..

கொஞ்சமேனும் லஜ்ஜைகள் கற்றாக வேண்டும் இவர்கள் யாவரும்... 
நன்றி..


Sunday, April 24, 2011

சாய்பாபாவின் ஆத்மா...

தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கே உதவ யோசித்தும், யோசித்து மறுத்தும் வருகிற மனோபாவத்தில் வாழ்ந்து வருகிற சிறுமை நிரம்பியவர்கள் நாம்... 

ஆனால், சமூக சேவைகளை தனது உயிர்மூச்சாக சுவாசித்து வாழ்ந்து வந்த சத்ய சாய்பாபா அவர்கள் இப்பூவுலகை விட்டு சென்று விட்டார் என்பது மனவேதனைகளையும் தாங்கொணா துயர்களையும் மனசில் பதிய வைத்து விட்டது என்பதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை..

இப்படி ஓர் லக்ஷ்ய புருஷன் இனி இந்தப்பூ உலகிற்கு கிடைப்பாரா என்பது துயர் நிரம்பிய கேள்வியாகும்... ஏதேனும் பம்மாத்து பண்ணி , அந்த இருக்கையில் மற்றொரு நபர் அமரக்கூடும்...நான் தான் சாய்பாபாவின் மறுபிறவி என்று ஓர் டுபாக்கூர் விடக்கூடும், அதனை செல்லுபடி கூட செய்துவிடுவார்கள்..

ஆனால் அந்த நபர் இவர் போல ஓர் கருணை வள்ளலாக இருப்பாரா, மக்கள் சேவையில் திளைப்பாரா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்... 

சுயநலம் மாத்திரமே எங்கெங்கிலும் ஏகோபித்து படர்ந்து கிடக்கிற இந்தப்ப்ரபஞ்சத்தில் , தயாள சிந்தனைகள் கடுகளவு கூட எவர் வசமும் துளிர்ப்பதில்லை என்பதோடு, அவ்விதம் சாதிப்பவர்களைக்கூட தடுத்து நிறுத்தி சாதிப்பவர்கள் தான் இந்த எதார்த்த உலகில் இருந்து வருகின்றனர்..

சாய்பாபா போலவே பிறர்க்கு கொடுத்து உதவும் மனப்பாங்கும், அதனை வழி நடத்தவும் இனி நபர்கள் முளைக்க வேண்டுமானால், அது அந்த சாய் பாபாவின் ஆத்மா மாத்திரமே செயல் படுத்தக்கூடிய ஒன்றென்றே தோன்றுகிறது...

சாய்பாபாவின் ஆத்மா...

Monday, February 15, 2010

காதலர் தினம் குறித்து...

காதலையே கொச்சைப்படுத்துவது மாதிரியான ஒரு நாளாக உணர முடிகிறது இந்தக் காதலர் தினத்தை. நாசூக்கான மெல்லிய உணர்வது.. மென்மையும் மேன்மையும் பொதிந்த அதனை, காலத்திற்கும் வெளிக்காண்பிக்க வேண்டிய அதனை, ஒரே ஒரு நாளில் அடக்கி அன்று மட்டும் அதற்கு முக்கியத்துவம் தருவதும் அதற்காக காதலர்கள் குதூகலிப்பதும் அப்பட்டமான அல்பத்தனமாக படுகிறது...

காதல் என்பதும் காமம் என்பதும் புனிதமும் ரகசியமும் நிரம்பிய மகோன்னதமான உணர்வுகள்... அதனை சந்தைப்படுத்துவது போன்று நாகரீகமற்று இம்மாதிரியான நாட்களை அனுஷ்டிப்பதெல்லாம் நம் இந்தியக் கலாச்சாரத்திற்கு முரணாயும் முட்டாள்தனமாயும் புரிகிறது...

இதனை வரவேற்பதும் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வதும் பார்க்கவும் கேட்கவும் கூச்சத்தில் நெளிய வைக்கிறது.. லஜ்ஜை உள்ள எல்லார்க்கும் இவ்விதமாகத்தான் இருக்கும்...

இதனை எதிர்ப்பவர்கள் கூட ஓட்டுப்பொறுக்கிகளும் , வன்முறைகளை வளர்க்க விரும்புகிற அரசியல் கட்சிகளும் தானே தவிர, வேறு உருப்படியான உள்நோக்கம் கொண்டவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கதே...

ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களுக்கும் இந்தக் காதலர் தினத்தை ஆதரிப்பவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசம் இருப்பது போல எனக்குப் படவில்லை...


சுந்தரவடிவேலு.. திருப்பூர்..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...