நாம் எல்லாரும் இந்த வாழ்க்கை ஓர் அற்புதமான மாயை என்பதை நன்கறிவோம் என்ற போதிலும் இதன் மீதான அபரிமிதமான பற்று காரணமாக மாயை என்பதை மறந்து வாழ்க்கை குறித்து மிகவும் தீவிரமான போராட்டங்களை நிகழ்த்த பிரயத்தனிக்கிறோம்...
அதுவும் சரிதான். பிறந்தாயிற்று... மாயை என்று சும்மா குந்திக்கினு கெடந்தா எந்த நாயி மதிக்கும் நம்மை? அதுக்கும் இதுக்கும் அலஞ்சு திரிஞ்சு நாலு காசை ஊட்டண்டை கொண்டந்தாத்தான் கட்டினவ மதிப்பா.. பெத்த புள்ளைங்க மதிக்கும்... இல்லேன்னா தெருநாயை உட்டே கடிக்க வச்சுருவாக...
பற்றற்ற தன்மையுடன் இருக்கச்சொல்லி வலியுறுத்துகிற ஞானிகளுக்கே நம் பற்றை சாகடிக்க வைப்பதில் ஏக பற்றென்று கருதுகிறேன். அவர்களது பற்றுகளை மௌனமான ரகசியங்களாக்கிக்கொண்டு தன் சீடர்களுக்கும் தன்னை பின்பற்றுகிற அப்பாவிகளுக்கும் வெளிப்படையாக விலாவாரியாக பற்றற்ற தன்மைகளை உபதேசித்து அதில் வெற்றியும் கண்டு விடுகிற ஞானிகள் ஏராளம் நம் நாட்டில்....
நம்ம மக்களையும் ரொம்ப சாதாரணமா எடை போட்றாதிங்க... அந்த டுபாக்கூரு ஞானிகள் கிட்ட நெசமாலுமே முற்றும் தொறந்த தன்மையை வெளிக்காட்டி விட்டு , இங்கிட்டு வந்து நம்ம கிட்ட மெயின் ரோட்டு மேல நாலு ஏக்கரா எடம் இருக்கறதா பீத்திக்குவாக...
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Showing posts with label அத்தனைக்கும் ஆசை.... Show all posts
Showing posts with label அத்தனைக்கும் ஆசை.... Show all posts
Friday, January 22, 2010
Subscribe to:
Posts (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
முதற்கண் பிச்சை இடுபவர்கள் நிறுத்த வேண்டும்.. பிச்சைக் காரர்கள் தானாகக் காணாமல் போவார்கள்.. உழைக்கத் துவங்கி காசு சேர்ப்பார்க...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
இ ந் தி யாவில் மற்ற மாநிலங்களில் இளைஞர்கள் எவ்விதமோ யாமறியேன்.. நம்முடைய தமிழகத்தில் "இவ்விதம்" என்கிற கண்க்ளூஷனுக்கு என்னால் வர ...