Showing posts with label useless poem... Show all posts
Showing posts with label useless poem... Show all posts

Saturday, May 12, 2012

சாப்பாட்டு ராமன் கவிதை..


தேவலாம் என்று
எனக்குத் தோன்றுவதெல்லாம்
நயா பைசாவிற்கு ஆகாதென்று
அபிப்ராயம் வரும்
மனைவியிடமிருந்து...

சூப்பர் என்று
அவள் பிதற்றுவதெல்லாம்
சல்லிக் காசுக்கு ஆகாதென்றாலும்..
"ஆமாடா செல்லம்..
நல்ல ரசனை உனக்கு" என்று
புளகாங்கிதம் அடைய வைப்பேன்..

அவள் ரசிப்பதை
நான் புறக்கணிக்கையில்
சாம்பாரில் உப்பைத் தூக்கலாக்கி
விடுவாள்..
வெறும் தண்ணியில் கூட
ரசம் வைக்கவில்லை என்பாள்..
புளிச்சு நாறின தயிரை
தலையில் கட்டுவாள்..

ஆஹோ ஓஹோ வென்று
அவள் அரற்றுகிற அற்ப
விஷயங்களுக்கான அலட்டல்களை
நானும் ஆமோதிக்கப் பழகி
விட்ட காரணத்தால்...
ரெண்டு  பொரியல் செய்கிறாள்..,
அப்பளம் பொரிக்கிறாள்..
கூட்டு செய்கிறாள்,
புளிக்குழம்பு வைக்கிறாள், ..
முதற்கண் போட மறந்த
பருப்புப் பொடியைக் கூட
தயிருக்குப் பிறகாக போடட்டுமா
என்று கேட்டுப்  புல்லரிக்க வைக்கிறாள்..

சுந்தரவடிவேலு..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...