Showing posts with label hindu festivals... Show all posts
Showing posts with label hindu festivals... Show all posts

Sunday, October 28, 2012

வாழைமரங்கள்.

சரஸ்வதி பூஜைக்காக..ஜோடி முப்பது ரூபாய் என்று கறாராக அடித்துப் பேசி விற்கப்பட்ட வாழைக்கன்றுகள் .. இருபத்தைந்து ரூபாய்க்குக் கூட குறைத்துக் கொடுக்கப் படவில்லை. எந்த பேரத்துக்கும் இறங்கி வராமல், அந்த பூஜை நேரம் நழுவ நழுவ ... ஜோடி இருபதாகி, பதினைந்தாகி, பத்தாகி .. ஐந்தாகி..

கேட்க நாதியற்று சாலைகள் எங்கிலும் அதே இரவில் வாழைத் தோப்பு போல வியாபித்து.. விடியலில் பார்க்கையில் .. வாழைத் தோப்பே எழுந்து நகரவீதிகளுக்கு ஊர்வலம் வந்து நிற்கிறதோ எனத் தோன்றும் அளவு .. நின்றிருந்தன..

திருவிழாவுக்கு அழைத்துவரப் பட்ட குழந்தைகள் .. வாழைக் கன்றுகள்..
பிறகு பெற்றவர்களே விட்டுவிட்டு சென்றது போல அப்பாவிகள் போல நின்றிருந்தன கன்றுகள்...

வழக்கமாக எச்சிலை அந்தஸ்தோடு மட்டுமே குப்பைத்தொட்டிக்கு வருகிற இலைகள்..... இந்த சரஸ்வதி பூஜை காலங்களில் மட்டும் சுத்தமாக வந்து விழுந்து கிடக்கும்..

ஹிந்துக்களின் பல சுவாரசிய விழாக்களில் இந்த ஆயுத பூஜையும் ஒன்று... தனது இருப்பிடங்களை, தொழில்புரிகிற நிறுவனங்களை அதற்கு உபயோகமாக இருக்கிற உபகரணங்களை .. இன்னபிற அனைத்த விஷயங்களையும் சுத்தப் படுத்தி புணரமைக்கிற இந்த விழா ஓர் தலையாய விழா என்றே சொல்லவேண்டும்..
இதுவும் கடந்து, குழந்தைகளின் எழுத்தறிவை ஆரம்பித்து வைக்கிற வித்யாரம்பம் என்கிற ஓர் விழாவினையும் இதனோடு இணைத்து ஓர் பரவசக் கிளர்ச்சியை  நிகழ்த்துகிற இந்த விழாவினை எவ்வளவு மெச்சினாலும் தகும்..

இது முடிந்து ரெண்டோரு வாரங்களில் தீபாவளி ... பிற்பாடு பொங்கல்..
இப்படி ஓர் குறிப்பிட்ட சிறு சிறு இடைவெளிக்குப் பிற்பாடு ஒவ்வொரு ஆனந்த விழாவையும் திணித்திருக்கிற  ஹிந்துக்களின் பண்பாடு ஓர் அலாதி சுகந்தம்...

அந்த இடைவெளியைக் கூட விழாவாக வரித்து நாம் வாழப் பழகுவோம்..
விழாவினையே ஹிம்சையாக மாற்றிவிடுகிற சில கயமை நிரம்பியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்... அப்படியானவர்களைக் களைந்து அவர்களுக்கும் வாழ்வின் ஆரோக்கிய  தன்மைகளைப் பயிற்றுவிப்போம்..

இதனை எனது சின்ன மெசேஜ் ஆக இங்கே பதிக்க விரும்புகிறேன்.. நன்றி..

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...