Thursday, July 28, 2011

அன்றாட நிகழ்வு..

ஏதாவது மொபெடோ
பைக்கோ அவ்வப்போது
கால்களில் மோதி
அங்கும் இங்குமாக
காயங்கள் நிகழ்ந்த
வண்ணமே உள்ளன..
சைக்கிள் ஸ்டாண்டில் 
என் வண்டியை
போட்டுவிட்டு வருகையில்
பக்கம் நின்றிருக்கிற
ஏதாவது வாகனம்
அதன் கூரிய பாகத்தில்
என் கால்களை கீறி
விடுகின்றன..மேல்தோல்
பிய்ந்து ரத்தம் வராமல்
வெண்குஷ்டம் போல
எரிச்சலூட்டுகின்றன..

என்ன மருந்து தடவினாலும்
நான்கு நாட்கள்
ஓர் வலியுடன் இருந்துவிட்டுத்
தான் நகர்கின்றன காயங்கள்..

அப்படி காயப்படுத்துகிற
வாகனங்கள் மீது உடனடியாக 
ஓர் எரிச்சல்... அதுபோக
அதன் உரிமையாளன் மீது
ஓர் மகா எரிச்சல்...
ஒழுக்கமில்லாமல் அவன்
நிறுத்தி இருப்பதாக
வாதாடும் மனது மெளனமாக..!

எனது அஜாக்கிரதை குறித்தோ
அனாவசியமான அவசரம் குறித்தோ
ஒருமுறை கூட என்னை நான்
கண்டித்துக்கொண்ட ஞாபகமே இல்லை...

என் வண்டியை 
வெளியே எடுத்து வருகையில்
என் வண்டியே என்னை
காயப்படுத்துகிற சந்தர்ப்பங்களும்
நிகழும்...
அப்போது மட்டும் என் வண்டியை
கண்டபடிக்கு திட்டி விட்டு
மன்னிப்பும் கேட்டுவிட்டு
வீடு திரும்பிக்கொண்டிருப்பேன்...!!

சுந்தரவடிவேலு..

Wednesday, July 20, 2011

ஸ்கிரிப்ளிங்..??

என் கோபங்கள் எல்லாம்
சாது மிரண்டால் ரகம்...
அவனா இவன்
என்று ஆச்சர்யப்பட
வைப்பவை..
புது ரத்தம் ஊறிய
மெருகில் சோபை
தட்டி விடும் எனக்கு..
மேற்கொண்டும் இதே
கோபங்களை என்
எதார்த்த தன்மையாக
மாற்றி அமைக்கலாமே  என்கிற
சபலம் துளிர்க்கும்...
ஆனால் இயல்பான
தன்மை அந்த
சபலத்தை வேரறுக்கும்...

ரௌத்ரமும் காமம்
போல தான்...
காமம்
ரகசியமாக
வீரியம் காண்பிக்கும்..
ரௌதரம்
பகிரங்கமான
வீரியங்காட்டும்...

அதனதன்
தன்மையில் இரண்டுமே
வடிகால் தேடுபவை..
அவைகளின்
தேடல் முடிந்த
பிறகான
அமைதியும் ஆனந்தமும்
அலாதியானவை..

என்னவோ சொல்ல
ஆரம்பித்து எதிலோ
முடிக்கிற எனது
கவிதைகள் அநேகமுண்டு..
இதுவும் அவைகளில் அடக்கம்..!!

Thursday, July 14, 2011

ரூம் போட்டு யோசிப்பாங்களோ??


குழந்தையின் மலச்சிக்கல்
நினைக்கையில் நமக்கு
வயிற்றில் பிடுங்கும்..
இசி வெளி வர
அவள் முக்குவதைப்
பார்க்கையில் நமக்கு
அழுகை வரும்...

ஆயி போய் மூன்று
நாட்கள் ஆகியிருக்க...
இன்றைக்கு கண்டிப்பாக
டாக்டரைப் பார்த்தாக வேண்டும்..

இதுக்குப்போய் டாக்டரா
என்று குலவை பாடுகிற
பெரிசுகள்..
ஆசனவாயில் புளிக் கோலினைத்
திணிக்க சொல்கிற சிலர்..
சோப்பு நீர் கரைசல் கொடுக்க
சொல்லி சிலர்..
பழம் காய்கறி கீரை
அன்றாட உணவில் சேர்த்து
வந்தால் போதும்... சிலர்!!

இவை எதனையும்
செய்யாமல் குழந்தை
நிபுணரிடம் சென்றோம்..

ஊசி போட யத்தனித்த
டாக்டரிடம் 
பேய் கதறல் என் மகள்..
அழுத கையோடு
மூன்று நாள் இசியையும்
டாக்டர் அறையிலேயே
பீய்ச்சி அடித்துவிட்டாள்..

ஊசியை புறக்கணித்து
விடுவார்களோ என்கிற
பயம் டாக்டரிடம்...
ஆனாலும் இனி அதற்கான
தேவை இல்லை 
 என்பதும்
அவருக்குத்தெரிகிறது...
போட்டால் அசிங்கம்
என்பதும் புரிகிறது...

குழந்தையை எடுத்துக்
கொண்டு வெளிய வந்த
எங்களிடம் --
கம்பவுண்டர் நெருங்கி
பீஸ் கேட்கிறார்..
எதற்கென்று வினவிய 
எங்களிடம் சொல்கிறார்:
--குழந்தையை
பயமுறுத்தி மலச்சிக்கலைப்
போக்குவதும் ஒருவித
சிகிச்சை முறை..'

Tuesday, July 5, 2011

jagi vasudev's speech on female fertility

திரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உன்னதமான உரையினை கேட்பீராக...
நன்றி..


கேட்கிற எவரும் கசிந்துருகக்கூடும்..

அன்பு
சுந்தரவடிவேலு..

மனிதனை சீரழிக்கிற கோவில்கள்..



கோவில்களுக்கு போகாமல் இருந்தாலே சாமிகள் நம்மைக் காப்பாற்றும் ... வீடு தேடி வந்தாவது...ஆனால் பிரார்த்திக்க என்று கோவில்களுக்குள் நுழைந்து சாமிகளைத்தவிர்த்து , ஆண்கள் பெண்களையும் , பெண்கள் ஆண்களையும் காதலுடனும் காமத்துடனும் .. பார்வைகளைப் பரிமாறிக் கொள்வதும் வாய் விட்டுபபேசிக் கொள்வதும்... உண்மையாகவே பிரார்த்திக்கலாம் என்று வருகிற ஓர் பக்தனைக்கூட நிலை தடுமாற செய்கிறது..அந்த பக்தன் கூட நாளடைவில் புத்தி மாறி.. பக்தி மாறி, பூங்காவாக பாவித்து கோவில்களுக்குள் அலைய விழைகிறான்..
அடிப்படை ஒழுக்கங்களை இழந்து, எந்த பிராந்தியத்தில் என்ன உணர்வுடன் இருக்க வேண்டும் என்கிற சாதாரண தன்மைகளை கூட பொலிவிழக்க செய்து ஓர் ஐந்தறிவு ஜீவன்  போல உலவி வருகிறான் மனிதன் என்பது வேதனையும் வெட்கமும் கொள்ள வேண்டிய விஷயங்கள்....அமைதியோடும் ஆனந்தத்தோடும் மெளனமாக அமர்ந்து தியானம் செய்கிற ஓர் தன்மையை ஒவ்வொரு நபருக்கும் பயிற்றுவிப்பதே இப்போதைய இந்தியாவின் பக்தி மார்க்கத் தேவை...
கோவில்களை நிறுவி கூட்டங்களை சேர்த்து பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி தேய்பிறை அஷ்டமி .. இன்னபிற விசேஷங்களை அனுஷ்டிப்பதென்பது , மனிதனின் வக்கிர புத்திகளுக்கு தீனி போடுகிற சமாச்சாரங்கள் ஆகும்.--இவைகளைத் தவிர்க்கும் பட்சத்தில்...கோவில்கள் வெறிச்சோடிக் கிடக்கும், வேதமறிந்த குருக்கள் புவாவுக்கு தகிடதத்தோம் போடவேண்டி வரும்...ஆனால் பொது மனித குலங்களின் ஒழுக்கம் மேலோங்கி விடும்...ஆனால்--எந்தக்காலத்திலும் இப்படி எல்லாம் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது திண்ணம்...ஆனால் இவ்விதம் நடக்கிற பட்சத்தில் திரேதயுகம் மறுபடி புதுப்பிக்கப்படும்...
ஆனால் கலியுகம்---- வசீகரிக்கிற நரகமாகி  விட்டது எல்லாருக்கும்... இதனை விடுத்து எந்த சொர்க்கத்தை அணுகவும் எந்தப்பாமரனும், பணக்காரனும் தயார் நிலையில் இல்லை என்பது தான் நிதரிசனம்...


வி.சுந்தரவடிவேலு...

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...