Wednesday, September 24, 2014

திருவிழாக் கடைகளும் கிழவிகளும்..

கோவில் திருவிழாக்களில் 
தொண்டுக் கிழவிகளின் 
பொரி கடலைக் கடைகள் 
எம்மைக் கவர்ந்திழுப்பவை.. 

எண்பத்தி சொச்சங்களும் 
தொண்ணூற்றி சொச்சங்களும் 
சுவடுகளாகப் புரியும் 
அந்த முகச் சுருக்கங்களில்.. 

எனக்கு 
முப்பதில் சர்க்கரை வந்தாயிற்று.. 
நாற்பதில் நிகழ்ந்த சாலேசரத்தில் 
முகத்தைக் கிழடு தட்டிக் 
காண்பிக்கிற கண்ணாடி அணிந்தாயிற்று.. 
ஐம்பதில் காணாமல் 
போய் விடுகிற எல்லா 
சாத்யக் கூறுகளோடும் 
பாத்தி கட்டிவிட்டன வியாதிகள் உடலில்.. !!

"அரை நூற்றாண்டே 
மனித ஆயுள் இனி "  என்கிற வழக்கு 
அமலுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை.. 

ஆனால் அந்தக் கிழவிகள் 
ஏற்றிப் படுக்கவைத்த பாடைகளைக் 
கிழித்து விட்டு வந்து இங்கே 
வியாபாரம் செய்வது போன்று 
புலனாகிறது எனக்கு.. 

முகங்களில் கண்ணாடி இல்லை.. 
தொங்குமந்த சூம்பிக் கிடக்கிற 
முலைகளில் கவனமில்லை.. 
பொரியையும் கடலை வகையறாக்களையும் 
படிகளில் அள்ளிப் போட்டு 
சுருக்குப் பையில்  காசைத் 
திணிக்கிற பிரக்ஞை தான் அதீதம்.... 

மிச்ச சில்லறையைக் கொடுக்க 
ஒரு அங்கலாய்ப்பு.. அதற்குமாய் 
சேர்த்து பொரி போட்டு விடுகிற நாசுக்கு.. 

காலணா அரையணா  
காலங்களில் புழங்கிய 
சுவடுகள் கிஞ்சிற்றும் அற்று 
இன்றைய ஐம்பதும் நூறும் 
ஐந்நூறும் ஆயிரமும் 
அந்தக் கரடுமுரடான கைகளில் 
தவழ்வதைப் பார்க்கையில் .. 

எதிரிலே 
பழங்கால நாணயங்கள் சேகரிக்கிற 
கடை ஒன்றை வைத்திருக்கிற 
எனக்குள் .. 
ஒரு இனம்புரியாத 
லஜ்ஜை 

காலணாக் காசொன்றை 
எடுத்து அவளிடம் சென்று 
வறுகடலை கொடுக்கச் சொல்லிக் 
குசும்பு செய்து பார்த்தேன்.. 

குண்டியில் சிரிக்காத 
குறையாக முறைத்துப் 
பார்க்கிறாள் கிழவி.. !!

Saturday, September 20, 2014

அச்சம் மடம் நாணம் ...


என்னுடைய பதின் வயது 
சமயங்களில் .. எமது 
அப்பாவின் பதின் வயது 
சாகசங்கள் என்னிடம் 
பகிர்ந்து கொள்ளப் பட்டன.. 

என்னுடைய வயதில் 
என் தந்தையார் 
பற்பல சாதனைகளை 
நிவர்த்தி செய்ததாக 
எனது பாட்டியும் 
எனது அத்தைமார்களும் 
சொல்வார்கள்.. 

'ஆனால் நான் இன்னும் 
அரைவேக்காடாகவே இருந்து 
வருகிறேன்?' என்று 
அவர்களிடம் கேட்பேன்.. 

ஏழாம் வகுப்புப் படிக்காமலே 
ஆறிலிருந்து எட்டுக்கு 
டபுள் ப்ரமோஷன் ... 
14 ஆம் வயதிலேயே 
நீச்சல் போட்டியில் மெடல் ... 
எஸ்ஸல்ஸி யில் 
ஸ்டேட் பர்ஸ்ட்டுக்கு முயன்று 
மூன்றாவதாக வந்தமைக்காக 
மனமுடைந்து 2 நாட்கள் 
சாப்பிடாமல் இருந்தது .. 
லாங் ஜம்ப் ஹை ஜம்ப் 
கோகோ.. கபடி . கில்லி.. க்ரிக்கட் 
குண்டு பம்பரம் . என்று 
எதை எடுத்தாலும் 
எதிர்த்து விளையாடுகிறவன் 
வாயில் மண்ணைக் கவ்வ 
வேண்டுமாம்.. 

இன்னும் நீள்கிற 
அப்பாவின் பட்டியல் 
எனக்குள் ஒரு தாங்கொணா 
பெருமிதத்தை பரவச் 
செய்தன எனிலும் 
இத்தனை நாசுக்கில் 
25 % கூட எனக்குள் 
இறங்கவில்லை என்கிற 
கொடூர சோகம் 
என்னைப் பிய்ந்து போகச் 
செய்தது.. 

ஏன் அந்த ஜீன் 
எனக்குள் பதியவில்லை 
என்கிற ஆச்சர்ய எரிச்சல் 
எனக்கு.. 

உருவில் மாத்திரமே 
அப்பாவை ஒத்திருந்த என்னை 
என் அப்பாவை நன்கறிந்த 
பற்பலரும் 'நீ வெங்கட் டோட ஸன் தானே?'
என்ற அனுமானக் கேள்வியில் 
நான் 'ஆம்' என்றதும் சிலாகித்துப் போயினர்.. 

பின்னொரு நாளில் 
எனது சந்ததிகளிடம் 
'நான் கேட்கப் படுவேனா இப்படி எல்லாம்?' 
என்கிற வலிமிகு பயங்கள் 
படரத் துவங்குகின்றன 
அனாவசியத்துக்கு.. !!

Thursday, September 4, 2014

அழகிய அசிங்கம்..

பதின் வயதுகளில்
முளைவிடாத
காதல்,
அரை நூறு
கடக்கவிருக்கையில்
அரும்புகிறது...




காலம் கடந்திருந்த

போதிலும்
காதல் அதன் மெருகில்
குறைவற்றே தான்
ஜொலிக்கிறது..
  

வயோதிகம் என்கிற

உணர்வெல்லாம்
காதலின் முன்னிலையில்
கல்லடிபட்ட நாயாக
ஊளைக் கதறலோடு
ஓடி ஒழிகிறது.




பொருந்தாக் காதலின்
அபஸ்வரம்
அபத்தமாய் புரிபடவில்லை..
மாறாக -- அன்று
விடுபட்டுப் போன
ஓர் உன்னத அனுபவம் இன்று 
நிகழ்வதாக
இங்கே கவிதை உருவெடுக்கிறது.. !!

[எங்காவது  என்னை எதாவது பொண்ணு லவ் பண்றதா நெனச்சுக்காதீங்க.. சத்தியமா நான் மட்டும் தான் ஒரு தலையா நின்னு லவ் பண்றேன்.. சத்தியமா நான்  ஒரே பொண்ணை  மட்டும் லவ் பண்ணலை.. பார்க்கற ஒவ்வொண்ணையும்  லவ் பண்ணிப் பார்க்கறேன், கற்பனையாவே.... 
முதிர்கன்னிய விரும்பற  வெடலைப் பசங்களைப் பத்தி கேள்விப் பட்டிருக்கோம்.. பார்த்திருக்கோம்.. ஆனா முதிர்கண்ணனை எதாச்சும் வெடலைப் பொண்ணுக  ரூட் விட்டதா ஹிஸ்டரி இருக்கா?.. அப்டி ஒரு வரலாற்றை ப் படைக்கத் தான் இந்த ராமன் போராடறான்.. யாராச்சும் என்னோட சீதை கிட்ட  போட்டுக் கொடுத்துடாதீங்க.. ஹிஹி.. ]

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...